வெள்ளி, 25 டிசம்பர், 2009

அம்மாவும் நீயே என்ற மெட்டு

காத்தருளுவீரே கர்த்தாவே எம்மை

தோத்திரங்கள் செய்து நாங்கள் வாழ்த்தி நின்றோம் உம்மை (காத்தருளுவீரே )
--
நாட்டுமக்கள் நலமடைய நன்மை செய்தவரே பிறர்

துயரைத் தீர்க்கத் தன் துயரைத் தாங்கிக் கொண்டவரே

பகைவருக்கும் அன்பருளும் பண்பு கொண்டவரே

உம்மைப் பணிந்து நின்றோம் இனிமை தரும் ஏசுநாதரே

தேவா தேவா தேவா தேவா (காத்தருளுவீரே)

கன்னிமேரி அன்னையீன்ற அண்ணல் ஏசுவே -எமக்

கின்னலின்றி வாழும் வகை சொன்ன தியாகியே

அன்பு செய்தால் இன்பம் வரும் என்று சொன்னவரே

எமக்குப் பரமண்டல வழி காட்டிய பரம பிதாவே

தேவா தேவா தேவா தேவா (காத்தருளுவீரே)