ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

murugan paadal

                      ஸ்ரீ முருகன் பாடல்  

பல்லவி 

மலைமீது விளையாடும் மால்மருகா புள்ளி 

மயில் மீது விரைந்தோடி வா முருகா -(மலை )

அனுபல்லவி 

எழில் தெய்வ மகளுடனும் குறவள்ளி துணையுடனும் 

எளியேன் என் குறைதீர்க்க வாமுருகா -(மலை)

சரணம் -1

குன்றேறி நின்ற எங்கள் திருக்குமரா -பறங்

குன்றத்தில் காக்கின்ற அருட்குமரா 

பழமுதிர்சோலையின் மணவாளா -சுவாமி 

மலைதன்னில் அருள்கின்ற தவசீலா -(மலை)

சரணம்-2

கனி தந்து அவ்வைக்கு அருள்செய்தாய் -மாங்

கனிக்காக உலகத்தை வலம் வந்தாய் 

கன்னல்  தமிழாக உருவெடுத்தாய் -எங்கள் 

கந்தா நீ அழகன் எனப்பெயர் கொண்டாய் (மலை)

                                -----------------------------