புதன், 3 பிப்ரவரி, 2021

magizhchchi irukkum idam.

 மகிழ்ச்சி இருக்கும் இடம்.

                  கலா ஆறாம் வகுப்பில் படிப்பவள் .அவள் தோழி சரளா வும் அவளு டன் படித்து வந்தாள் .கலா எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாகப் பேசுவாள்.அதைப் பார்த்து சரளா மட்டுமல்ல மற்ற சிறுமிகளும் அவளிடம் பேசவும் பழகவும் ரொம்பவும் விரும்பினர்.

                  கலா சரளா இருவரின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் பள்ளியை விட்டு சேர்ந்தே வருவார்கள்.முதலில் சரளா  வீட்டுக்குச் சென்று விடுவாள் பிறகு தெருக் கோடியில் உள்ள தன வீட்டுக்குச் செல்வாள் கலா.

                  தன வீட்டுக்குச் செல்வதையே பிடிக்காமல் எரிச்சலோடு வீட்டினுள்ளே நுழைவாள்.அவள் மனம் கலா எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள்.அவள் வீட்டில் அவளுக்கு எல்லாம் இருக்கிறது.ஆடம்பரமாக இருப்பாள். அதுதான் இப்படி குதித்துக் கொண்டே வீட்டுக்குப் போகிறாள். வீட்டில் சிற்றுண்டி தயாராக இருக்கும்.என்று முணுமுணுத்தவாறே வீட்டில் நுழைவாள் சரளா.

        அவள் நினைத்தது போலவே அவள் அப்பா கடுகடுவென்ற  முகத்துடன் பேப்பரில் முகம் புதைத்து உட்கார்ந்திருப்பார். அம்மா பாத்திரங்களை உருட்டியபடி ஏதோ புலம்பிக் கொண்டிருப்பாள்.

இதில் சிரிப்பது எங்கே? பேசாமல் கைகால் கழுவிக்கொண்டு புத்தகத்துடன் உட்கார்ந்து விடுவாள்.பாவம் சிறுமி.அம்மா அப்பாவின் கோபத்துக்கும் அவள் ஆளாவதும் உண்டு.

               ஒருநாள் கலாவும் சரளாவும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வழக்கம்போல வந்துகொண்டிருந்தனர்.அப்போது கலா சரளாவைத் தன வீட்டுக்கு வந்து வீட்டுப் பாடங்களை முடித்துச் செல்லலாம் என்று அழைத்தாள் . சரளாவுக்கு தன வீட்டுக்குப் போவதை விட கலாவின் வீட்டுக்குப் போய் மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று தோன்றியது.  பள்ளி ஒரு பீரியட் முன்னதாகவே  விட்டு விட்டதால் இருவரும் மகிழ்ச்சியுடன் கலாவின் வீட்டுக்குப் பறந்தனர்.

               கலாவின் வீட்டை கற்பனையில் பார்த்து மகிழ்ந்தாள்.அருகே போகப் போக எதையும் காணோம். சின்ன சந்து அதில் ஒரு சந்து. சுவரோடு ஒட்டிய ஒரு கதவு. அதைத் திறந்து உள்ளே போனவள் தயங்கி நின்ற சரளாவைக் கையைப் பிடித்து வா என அழைத்தா ள் "

"இவங்கதான் என் அம்மா. அம்மா இது சரளா  என் தோழி என் வகுப்பிலேயே படிக்கிறாள்."சிரித்த முகத்துடன் அந்த அம்மாள் ஒரு கைப் பிடி வேர்க்கடலையை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள் அந்த அன்பும் அந்த பிடி வேர்க்கடலையும் அமிர்தமாக இருந்தன சரளாவிற்கு.

எத்தனை ஏழ்மையில் இருந்தாலும் மலர்ந்து முகமே வாழ்வின் மகிழ்ச்சி என்பதைக் கண்டாள் .மனநிறைவோடு தன இல்லம் வந்தா.ள் 

                   ஒருவாரம் கடந்தது.கலாவின் அம்மாவெளியே போவதாகச் சொன்னதால் கலா சரளாவின் இல்லத்திற்குச் சென்றாள் இருவரும் சேர்ந்து வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அன்று அதிசயமாய் சரளாவின் வீடு அமைதியாக இருந்தது. தன தோழி எதிரே எங்கே தன பெற்றோர் சண்டையிடுவார்களோ என்று அஞ்சியபடியே இருந்தவள் அவர்கள் அமைதி கண்டு நிம்மதியடைந்தாள் 

மெதுவாக சரளா உள்ளே எட்டிப் பார்த்தாள்.அப்பா ஏதோ ஆபீஸ் வேலையாக இருந்தார். அம்மா காய் நறுக்கிக் கொண்டிருந்தாலும் இருவரின் கவனமும் 

அவரவர் காரியத்திலேயே இருத்தது.

"ஏய் கலா, உன்னால எப்படி சிரிச்சுகிட்டே இருக்க முடியுது?என்னால முடியலையே"என்றாள்  மெதுவாக.

"எல்லாம் மனசுதான் காரணம் நாம சிரிச்சுகிட்டே இருந்தா நம்மைப் பார்க்கிறவங்களுக்கும் மனசு லேசாயிடும்.திட்டணும்னு நெனைச்சாக்கூட திட்டத் தோணாது."

"அப்படியா?"

"ஆமாம். நம்ம அப்பா அம்மாவுக்கு ஏன் கோபம் வருது சொல்?"

சற்றே சிந்தித்தாள் சரளா.

       (சிந்தனை தொடர்கிறது.)