வெள்ளி, 18 அக்டோபர், 2019

Fwd: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:54 PM
Subject: Fwd: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Mon, 6 Feb 2017 at 12:26
Subject: Re: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)
To: <anandanrao@yahoo.com>


வணக்கம்.இந்த பகுதி வந்து சேர்ந்த உடன் எனக்குத் தெரிய படுத்தவும்.

2017-01-28 11:45 GMT+05:30 Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>:
                                       காட்சி---14                      

(மத்வாச்சாரியார் அமர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்.அங்கு பத்மநாபர் வருகிறார்.)
பத்மநாபர்;ஸ்வாமி,தாங்கள் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல் எதைப் பற்றியது என நான் தெரிந்து கொள்ளலாமா ஸ்வாமி?

மதவாச்சாரியார்;(புன்னகையுடன்)இதுவா, நாம் வடநாடு யாத்திரை சென்றிருந்த போது திரிவிக்ரம பண்டிதருடன் தொடர்ந்து வாதிட்டோமல்லவா?அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்,

பத்மநாபர்;ஆ...ஆமாம்,ஆமாம். அனுவ்யாக்யானம் என்ற  ப்ரம்ம 
சூத்திரத்துக்கு விளக்கவுரை எழுதக் கேட்டுக் கொண்டாரே , அந்த 
நூலா, ஆஹா.
மத்வர்;(புன்னகையுடன் தலையசைத்து) ஆமாம் அதுவேதான்.
இதோ முடித்து விட்டேன்.இந்தா, மஹாபாரத தாத்பர்ய நிர்ணய,
கீதாபாஷ்யம், உபநிஷத் விளக்கம், இவற்றோடு இதையும் சேர்த்து 
உடுப்பி  கிருஷ்ணரின் பாதத்தில் வைத்துவிட்டு வா.
பத்மநாபர்;ஸ்வாமி, தாங்கள் எழுதிய இந்த 37 நூல்களையும் சர்வமூல என்று அழைக்கலாமல்லவா ஸ்வாமி? 
மத்வர்;(அதே புன்னகையுடன்)ம்..ம்..
சரி.சீடர்கள் காத்திருப்பார்கள். சீக்கிரம் அனந்தேஸ்வரர் ஆலய மண்டபம் வந்து சேர்.
பத்மநாபர்;அப்படியே ஸ்வாமி.
(போகிறார்கள்)
                                        காட்சி---15 

(மேடையில் மத்வர் அமர்ந்திருக்க சீடர்கள் நிற்கிறார்கள் கையை உயர்த்தி ஆசிவழங்கிய மத்வர் மறைகிறார்.அங்கு மலர்மாரி பொழிகிறது.
சீடர்கள்;(பதறியபடி)ஸ்வாமி, குருவே, குருவே, எங்கே இங்குதான் இருந்தார். மறைந்து விட்டாரே மலருக்குள் தேடியபடி குருவே.
நமது குரு ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியை அடைந்துவிட்டார்.
எல்லோரும் ஹரிசர்வோத்தமா, வாயு ஜீவோத்தமா  என கூவுகின்றனர்.
                                 
                            ( நிறைவடைந்தது.)














--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார்.


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:55 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்.
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 26 Jan 2017 at 20:24
Subject: மத்துவாச்சாரியார்.
To: <anandanrao@yahoo.com>


                                           காட்சி---13

(ஆனந்ததீர்த்தர் அமர்ந்திருக்க எதிரே ஸ்ரீகிருஷ்ணா விகரகம் புன்னகையுடன் திகழ்கிறது.அர்ச்சனை செய்கிறார்.சீடர்கள்  கைகுவித்து நிற்கிறார்கள்.பூஜை முடிந்து அனைவருக்கும் தீர்த்தம் தருகிறார்)
ஆ.தீ ;பத்மநாபா,என்ன சிந்தனை?உன் கவனம் எங்கேயோ இருப்பது போலத்  தெரிகிறதே!

பத்மநாபர்;ஆம் ஸ்வாமி,ஷோபனா பட்டராயிருந்த அடியேனையும் சாமாசாஸ்திரியாயிருந்த நரஹரிதீர்த்தரையும் வாதில் வென்று தங்களின் சீடர்களாக்கி அனுகிரகம் செய்துள்ளீர்கள்.துவைத மத ஸ்தாபகரான தங்களை மத்வர் என்று அழைக்கலாமென்ற எண்ணம்தான். துவைத  சித்திதாந்தத்திற்கு மத்வமதம் என்றே சொல்லலாமென சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
ஆ.தீ;உன் விருப்பப்படியே ஆகட்டுமே (புன்னகையுடன் ஆசி வழங்க)
பத்மநாபர்;ஸ்ரீ ஸ்ரீ மதவாச்சாரியார் 
மற்றவர்;வாழ்க..வாழ்க.
மத்வர்;சீடர்களே,  வாருங்கள் நாம் பூஜித்த விக்கிரகங்களை ஒவ்வொருவருக்கும் அளிக்கிறோம்.என் எட்டு சீடர்களுக்கும் என் விக்கிரகங்களை அளித்து எட்டு மடங்களை உருவாக்குகிறேன்.

இந்த விக்ரகங்களை பூஜித்து மத்வ மதத்தைப் பிரச்சாரம் செய்து சத்தியத்தை நிலைநாட்டுங்கள்.
மத்வர்;பத்மநாபா,வா இந்த விகிரகத்தைப் பெற்றுக் கொள்.

நரஹரி வா, மாதவா வா  (எட்டு சீடர்களும் விக்ரகங்களை பயபக்தியுடன் பெற்றுக் கொள்கின்றனர்.)
மத்வர்;இனி இந்த உடுப்பி கிருஷ்ணரை இரண்டாண்டுக்கு கொருமுறை நீங்கள் முறை போட்டுப் பூஜிக்க வேண்டும்.நம்மால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஸ்ரீகிருஷ்ணர் அனைவருக்கும் சொந்தமானவர்.பர்யாய முறைப்படி நீங்கள் பூஜை செய்யவேண்டும்.
சீதேகள்(வணங்கியபடியே)அப்படியே குருவே.

                              காட்சி---14










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:56 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 26 Jan 2017 at 12:42
Subject: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)
To: <anandanrao@yahoo.com>


                                                 காட்சி --11
(சீடர்களுக்கு ஆனந்த தீர்த்தர் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அங்கே குரு வருகிறார்..அனைவரும் எழுந்து நின்று வணங்குகின்றனர்.குரு அமர்க்கிறார்.)
குரு;ஆனந்த தீர்த்தா, எவ்வளவு எளிமையாக அந்த புத்திசாகர பண்டிதனை வென்று விட்டாயப்பா.எனக்கே தோன்றாத பல செய்திகளை நீ சொல்லக் கேட்டேன்.
ஆனந்த தீர்த்தர்;ஸ்வாமி, எல்லாம் சத்யம்.  சொன்னதெல்லாம் சத்யம் ஸ்வாமி.
குரு;ம்ஹும்.....
ஆனந்த தீர்த்தர்;(மெதுவாக) ஸ்வாமி,
குரு; ஏன்  தயங்குகிறாய்?நினைப்பதைச் சொல்.
ஆனந்ததீர்த்தர்; ஸ்வாமி நான்  வேண்டுவதைத்  தாங்கள்  அருளவேண்டும் 

குரு (சிரித்து)  மீண்டும் தீர்த்த  யாத்திரை  செல்லவேண்டும் அதுதானே? 

ஆனந்ததீர்த்தர்;ஆம் ஸ்வாமி, பத்திரிநாராயணனை  தரிசிக்க வேண்டும்  ஸ்வாமி.

குரு;(புன்னகையுடன்).சென்று   வா சுபமஸ்து 
                                        
ஆனந்த தீர்த்தர் ;(ஒரு ஓலைச் சுவடியை குருவின் கையில் கொடுக்கிறார்)ஸ்வாமி நான் எழுதிய இந்த பாஷ்யத்தைத் தாங்கள் படித்துப் பாருங்கள்.   

(ஆனந்த தீர்த்தர் குருவை வணங்க அவரது சீடர்கள் அனைவரும் வணங்கி  எழுகின்றனர் )
                                           
                                                        காட்சி---12 

(நான்கு  சீடர்களுடன் வந்தேவந்தயம்சதானந்தம்  வாசுதேவம்  நிரஞ்சனம்என்று பாடியவாறு குன்றுகளின் மேல் நடந்து செல்கிறார்) 
ஆனந்ததீர்த்தர்; சீடர்களே, இருட்டிவிட்டது. இனி இங்கேயே இரவு நேரத்தைக் கழிப்போம். நாளைக்கு காலையில் நமது பயணத்தைக் தொடர்வோம்.(அமர்கிறார்)
சீடர்;அப்படியே ஸ்வாமி..
(அனைவரும் பாறையைச் சுற்றி அமர்ந்து நெருப்பு மூட்டிவிட்டு மாவு உருண்டையை உண்டு நீர்பருகி பின் ஆங்காங்கே குருவைச் சுற்றி படுகிறார்கள் இரவு நேரம் எதையோ படித்துக் கொண்டிருந்த ஆனந்த தீர்த்தர் ஓலைச் சுவடியுடன் நடக்கிறார் வெகு தொலைவு சென்று நின்று வான் மலையைப் பார்த்து வணங்குகிறார்.அப்போது அங்கு ஒரு பெரியவர் வருகிறார்.
பெரியவர்;ஆனந்த தீர்த்தா, வந்தாயா, வா ஆசிரமத்திற்குப் போவோம்.
ஆ.தீ;ஸ்வாமி தாங்கள் யார் இங்கு எப்படி...தாங்கள்?
பெரியவர்;ம்ஹும்...ம்..ம்..(சிரித்து) வா.வா.

அவர்பின் செல்ல சற்று தொலைவில் அவர் மறைந்து விட அழகிய மலர்வனமும் இடையே ஆசிரமம் ஒன்றும் தென்படுகின்றன.அருகே 
ஸ்ரீவேத  வியாஸபகவான் அமர்ந்திருக்கிறார்.அவர்முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறார் ஆனந்ததீர்த்தர்.
ஆ.தீ.; ஸ்வாமி அடியேனை ஆட்கொள்ளுங்கள்  தேவா.
வேத வியாசர்;ஆனந்த தீர்த்தா ; பகவத் பக்தியையையும் சத்தியத்தையும் உலகில் நிலைநாட்டுவாயாக.உன் எண்ணங்களையெல்லாம் தெரிந்துகொண்டோம் இதையே மக்களிடமும் பரப்புவாய்.ஆன்மீகநெறியை மக்களிடையேபரப்பி உன் அவதாரநோக்கம்   நிறைவேறிய பின் எம்மிடம்  சேர்வாய்.
ஆனந்ததீர்த்தர்;ஸ்வாமி அடியேனுக்கு உபதேசம் செய்தருளுங்கள்.
(கைகுவித்து அவர்முன் நிற்க வியாசர் உபதேசம் செய்கிறார்)
ஆ ;தீ;தன்யனானேன் ஸ்வாமி. இக்கடமையை நான் ஆற்றுவேன். புறப்படுகிறேன்.(வணங்கி புறப்படுகிறார்)
(வந்துகொண்டிருக்கும் போதே)
சீடன் ;குருவே, எங்கே இருக்கிறீர்கள்?எங்களை  இப்படித் தவிக்கவிட லாமா 
சீடன் 2;ஸ்வாமி எங்கு சென்றுவிட்டீர்கள் ?எங்களைத் தவிக்கவிட்டு எங்கு மறைந்தீர்கள் ஸ்வாமி...ஸ்வாமி ..

ஆ.தீ;(வந்துகொண்டே) மாதவா, பத்மநாபா ஏன் இந்தப் பதற்றம்.நான் வந்துவிட்டேன் வாருங்கள் புறப்படலாம் 
   (செல்கிறார்கள்)

                                                                                   காட்சி---13






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 17 அக்டோபர், 2019

Fwd:


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:56 PM
Subject: Fwd:
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 21 Jan 2017 at 14:01
Subject:
To: <anandanrao@yahoo.com>


                                            காட்சி --9
(அச்சுதப்ரக்ஞர் முன் வாசு  அமர்ந்திருக்கிறான்.
 அவனுக்கு  பூர்ணப்ரக்ஞர் என்று நாமகரணம் செய்கிறார்)
ஆச்சாரியார்: வாசு உனக்கு பூரணப்பிரக்ஞர் என்று நாமம் சூட்டுகிறேன் (.பூர்ணப்ரக்ஞர் வாழ்க என சீடர்கள் நான்குபேர் கூவுகின்றனர் ,
அப்போது ஒரு சீடன் வருகிறான் அவன் வணங்கி 
சீஸ்வாமி, பூரணப்ரக்ஞருக்கு ஒரு தம்பி பிறந்துள்ளான்.என்று செய்தி வந்துள்ளது.
வாசு;(மகிழ்ச்சியுடன்)எனக்குத் தம்பி பிறந்துவிட்டான்  ஸ்வாமி இனி நான் சந்நியாசி ஆவதில்  எந்தத்  தடையும் இல்லை .
ஆசான்; பூர்ணப்ரக்ஞா சிறிது காலம் செல்லட்டும் .உனக்கு சந்நியாச தீக்ஷை வழங்குகிறேன்.
(அவரை வாசு வணங்கி எழுகிறான்.)
                                                 காட்சி-10
  (அச்சுதப்ரக்ஞர் அமர்ந்திருக்க அவர்முன் காவி உடையுடன் கையில் தண்டம் ஏந்தி பூர்ணப்ரக்ஞர் நிற்கிறார்.குருவைசீடன் வணங்கி அவர்முன் பவ்யமாக அமர்கிறான்.பின்புறம் அபிஷேக மந்திரம் ஒலிக்க(ஸஹஸ்ர சீர்ஷா புருஷக ) கங்கா தீர்த்தத்தை பூர்ணபிரக்ஞரின் தலையில் மெதுவாக  
ஊற்றுகிறார்.
ஆச்சாரியார்;உனக்கு சந்நியாச தீக்ஷை  தந்தேன்.இனி வேதாந்த ஸாம்ராஜ்யாதிபதியாகி ஆனந்த தீர்த்தர் என்ற திருநாமத்துடன் மக்களின் மத்தியில் பிரகாசிப்பாய்.பக்தியை நாடெங்கிலும் பரப்பிவருவாயாக.
சீடர்கள்;ஆனந்த தீர்த்தர் வாழ்க என மூன்றுமுறை கோஷமிடுகின்றனர்.
(அடுத்த காட்சியில் ஆனந்த தீர்த்தர் சற்று வளர்ந்தவராக குருவை வணங்கி நிற்கிறார்.)
 அங்கு வந்த சீடன் ;, நம்முடன் வாதிட அத்வைத  குரு வந்துள்ளார்.புத்தி சாகர பண்டிதர்  அமர்க்களமாக வருகிறார்.அவரை உள்ளே அழைக்கலாமா 
ஸ்வாமி?
ஆச்சாரியார்; இங்கு எம்மைத் தேடி வந்தது மிகவும்  மகிழ்ச்சி அழைத்துவா. (அங்கு புத்திசாகர பண்டிதர் வருகிறார்.)
பண்டிதர்.;உங்களுடன் வாதிட வந்துள்ளேன்.
ஆச்சாரியார்;எங்கள் சீடர்  ஆனந்த தீர்த்தர் உங்களுடன் வாதிடுவார்.அமருங்கள்.

(ஆனந்த தீர்த்தர் அவ்விடம் வந்து வணங்கி அமர பண்டிதர் சற்று நேரம் கேள்விகள் கேட்க பின் ஆனந்ததீர்த்தர் அவரிடம் கேள்விகள் கேட்க பதில் சொல்ல முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு வேகமாக அவ்விடம் விட்டுச் செல்கிறார்.)

ஆச்சாரியார்;மிகநன்றாக வாதம் புரிந்தாய் நமது பெருமையை நிலைநாட்ட நீயே சிறந்தவன்.நல்லாசி வழங்குகிறேன்.


(வணங்கி அவ்விடம் விட்டுச் செல்கிறார் ஆனந்ததீர்த்தர்.)


                                                                                     காட்சி-11













--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார்


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:57 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 19 Jan 2017 at 16:13
Subject: மத்துவாச்சாரியார்
To: <anandanrao@yahoo.com>













                           காட்சி----7
(மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர்.இவர்கள் நடுவில் வாசு அமர்ந்திருக்கிறான் ).

ஆசான்;(பாடம் நடத்துகிறார்)

கவ்யாசம் புண்டரீகம் என்ற சுலோகத்துக்கு குரங்கின் பின்பகுதி தாமரை போல சிவந்துள்ளது என்று பொருள்.

(அப்போது உள்ளே ஒரு பெரியவர் வருகிறார்)
பெரியவர்;மன்னிக்கணும் சரியான பொருள் சொல்லுங்கள்.அதற்குப் பொருள் அப்படியல்ல.கவ்யாசம் என்பது சூர்யக்கிரணங்கள் அந்த சூரியக்கிரணங்களால் தாமரை மலர்ந்து காணப்படுகின்றது.என்பதே சரியான பொருள்.
வாசு;(மகிழ்ந்து)ஆஹா மிகப் பொருத்தமான பொருள் தாமரை போன்ற சிவந்த கண்களையுடைய இறைவன் என்ற பொருள் மிகச் சிறப்பாக இருக்கிறதே.

ஆசான்;நீங்கள் சொன்னதே சரியென்று வைத்துக் கொண்டால் எங்கள் ஆசான் சொன்னது தவறா?
வாசு;ஸ்வாமி, சரியான பொருள் சொல்வது முக்கியமில்லையா?
பெரியவர்;நீங்கள் கோபிப்பது சரியல்ல.
ஆசான்;நீங்கள் சொன்னதேசரி.(கோபத்துடன்)
பெரியவர்;இது நான் சொல்லவில்லை.ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர் கூறியது.
ஆசான்;ம்ஹும் அப்படியானால் நீரே பாஷ்யம் எழுதும்.(கோபத்தோடு செல்கிறார்)
மாணவர்கள் கலைந்து செல்ல  சிந்தனையுடன் வீடு வருகிறான் வாசு.)
 
(தனிமையில் அமர்ந்திருக்க தந்தை சொன்னது காதில் ஒலிக்கிறது.திரிவிக்கிரம பண்டிதராகவோ அச்சுதப்ரக்ஞராகவோ அல்லது சந்நியாசியாக இருக்கவேண்டும்.)
சிந்தனையுடன் எழுகிறான்)
                                                                                                      காட்சி-8

(உறங்கிக்கிகொண்டிருக்கும்  தாய்தந்தையரை பாதம் தொட்டு வணங்கியபின் வீட்டின் வெளியே நின்று வீட்டை வணங்கி வேகமாக வெளியே நடக்கிறான். நேராக அச்சுதப்ரக்ஞரிடம் வந்து சேர்ந்து ஆசிரம வாயிலில் அமர்ந்து கொள்கிறான் வாசு.)
தூங்கியெழுந்த அச்சுதப்ரக்ஞர் கராக்ரே வராதே லட்சுமி கரமத் யே சரஸ்வதி என்றபடி வாயிலுக்கு வருகிறார்.அமர்ந்தபடியே  தூங்கி க் கொண்டிருக்கும் வாசுவைப் பார்க்கிறார்.

ஆச்சாரியார்;குழந்தாய், இங்கு என்ன செய்கிறாய்?எப்போது இங்கு வந்தாய்?
வாசு; ஸ்வாமி நான் வாசுதேவன்.மத்யகேக பட்டரின்  மகன்.நான்சந்நியாசியாக விரும்பி தங்களை நாடி வந்துள்ளேன்.
ஆச்சாரியார்;இந்த சிறிய வயதில் உனக்கு ஏனப்பா இந்த எண்ணம் வந்தது? உன்பெற்றோருக்குத் தெரியுமா?
(அப்போது பட்டர் உள்ளே நுழைகிறார்)
பட்டர்;ஸ்வாமி, நமஸ்கரிக்கின்றேன்.என் மகன், ஒரேமகன், வாசு.அவனைத் தேடித்தான் வந்தேன்.
ஆச்சாரியார்;பட்டரே , உங்கள் மகன் இதோ இருக்கிறானே.

வாசு;அப்பா, நான் சந்நியாசியாகப் போகிறேன்.
பட்டர்;வாசு நான் உன்னை சந்நியாசியாக விடமாட்டேன்.நீ சந்நியாசியானால் நான் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்.
வாசு;(தன துண்டை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை கௌபீனமாகக் கட்டிக்க கொண்டு )அப்பா நான் சந்நியாசி ஆவதென்று முடிவு செய்து விட்டேன்.உலகபந்தங்களை விட்டேன்.இதோ என் கௌபீனம் தரித்துக் கொண்டேன்.நான் சொன்னபடி செய்து விட்டேன்.நீங்கள் சொன்னபடி செய்யுங்கள்  அப்பா.
பட்டர் ;(துயரத்துடன்)வாசு அப்படியாவது உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டாயா என்ற எண்ணம்தான்.
வாசு; உங்களால் முடியாதென்று தெரியும்.
பட்டர்;உன் தாய் இதற்குச் சம்மதிக்க மாட்டாள்.தாயின் அனுமதியின்றி நீ எப்படி சந்நியாசியாவாய்?
(அப்போது வேதவதி ஓடிவருகிறாள்)
வேதவதி;மகனே வாசு, இது என்ன கோலமடா?
வாசு; இது சந்நியாசிக் கோலமம்மா. நான்  சந்நியாசியாக .நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
வேதவதி;இல்லை எனக்கு இருப்பவன் நீ ஒரேமகன் என் வம்சம் தழைக்கவேண்டும்.உன்னை சந்நியாசியாக விடமாட்டேன்.தயவு செய் மகனே.    
(வணங்குகிறாள் )

வாசு; அம்மா, எப்போதாகிலும் உன்மகனை நீபார்க்கவேண்டுமானால் சந்நியாசியாக அனுமதி கொடு.இல்லையேல் எப்போதும் உன் மகனை நீ பார்க்கவே இயலாது.அத்துடன் மகனை வணங்கவேண்டுமெனில் அவன் சந்நியாசியாக இருக்கவேண்டும். இதோ நீங்கள் வணங்கி விட்டீர்கள்.
வேதவதி ;(துக்கத்துடன்) இல்லையப்பா, எங்கிருந்தாலும் நீ நன்றாக வாழ்ந்தால் போதும்
வாசு; அம்மா, உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.அதுவரை நான் சந்நியாசியாக மாட்டேன்.இது சத்தியம். போய்வாருங்கள் என்றபடியே
அச்சுதப்ரக்ஞரை வணங்குகிறான் அவர் பின்னே செல்கிறான் வாசு 
   (பட்டருக்குவேதவதியும் துக்கத்துடன் செல்கின்றனர்.)

                                                                                     காட்சி-9









--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார்


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 9:07 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed, 19 Sep 2018 at 20:59
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 14 Jan 2017 at 19:18
Subject: மத்துவாச்சாரியார்
To: <anandanrao@yahoo.com>


                                      
                                                             காட்சி --5  


(கேகயபட்டர்     கையில் சொம்பும் தோளில் துண்டுமாக புறப்படுகிறார்.அப்போது அங்கே வாசு வருகிறான் ) 

வாசு; அப்பா, நீங்கள் நான்கு தீர்த்தங்களை நாடி வெளியே எங்கும் செல்ல வேண்டாம்.நமது வீட்டு கேணியிலேயே புண்ணிய தீர்த்தங்கள் கலந்துள்ளன.
பட்டர் ( சிரித்தவாறே )குழந்தாய்,நம் வீட்டுக் கிணற்றில் எப்படியடா புனிதநீர் கலந்திருக்கும்?
வாசு ; அப்பா நான்கு நாட்களுக்கு முன் நான் தலைகீழாக நட்டுவைத்த மரம் துளிர்த்துள்ளதா பாருங்கள். பிறகு நம்பலாமா வேண்டாமா என சிந்தியுங்கள்  வாருங்கள் அப்பா.
(தந்தையின் கரம் பற்றி அழைத்துச் செல்கிறான்.)
பட்டர்'; அப்படியா சரி வாபார்க்கலாம்.
வாசு; பாருங்கள் அப்பா, இந்த மரம் சிறியதாக இலை  விட்டிருப்பதைப் பாருங்கள்
பட்டர்;(ஆச்சரியத்துடன் பார்த்து)
ஆமாம் வாசு நீ சொன்னது நிஜம்.

வாசு;பார்த்தீர்களா தினமும் புனித நீர் வார்த்ததால்தான் தலைகீழாக நட்ட ஆலமரம் வேரிலிருந்து துளிர் விட்டு வளர்ந்துள்ளதைப் பாருங்கள் அப்பா.
பட்டர்;(மகிழ்ச்சியுடன்) ஆமாம் வாசு.நீ சொன்னதுதான் சரி.நம் கேணியில் எல்லா தீர்த்தங்களின் புனித நீரும் கலந்துதான் இருக்கின்றன என்பதை இப்போது நான் நம்புகிறேன்.இனி இந்த கேணியை வாசுதேவ தீர்த்தம் என்றே கூறுவோம்.
(மகிழ்ச்சியுடன்)இதோ நம் வாசுதேவ தீர்த்தத்தில் குளித்துவிட்டு ஒரு நொடியில் வருகிறேன்.
                               காட்சி---6
(எட்டு வயது பாலகன் வாசு குருகுலத்திலிருந்து ஓலைச் சுவடிகளுடன் வருகிறான்.ங்கே அமர்ந்திருக்கும் பட்டர் அவனைப் பார்க்கிறார்.)
பட்டர்;வாசு அதற்குள்  முடிந்துவிட்டதா?சீக்கிரமே வந்து விட்டாயே?
வாசு; ஆமாம் அப்பா.கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்பது சலிப்பாக வருகிறதப்பா.தனியே அமர்ந்து அதற்கடுத்த பாடத்தைப் படித்துவிட்டு வருகிறேன்.
பட்டர்;(தனக்குள் ) நீஇரண்டாண்டுக்குமுன் கடனுக்காகக் கொடுத்த  புளியங்கொட்டையைப் பெற்றுக் கொண்ட   வியாபாரி இன்று கடனைத் திருப்பிக் கொடுத்தால் வாங்க மறுக்கிறான்.காரணம் கேட்டால் உங்கள் மகன் கொடுத்த 
புளியங்கொட்டை வந்த நேரம் நான் பெரும் தனவந்தனாகிவிட்டேன். உங்கள் கடன்  தீர்ந்துவிட்டது என்கிறான். தலைகீழாக  மரத்தைநட்டு துளிர்க்கச் செயது விட்டான்.இது என்ன மாயமோ அனந்தேஸ்வரா, என் ஒரே மகனைக் காப்பாற்று. என்றபடியே  அமர்கிறார்.
அங்கே வாசு வருகிறான்.)
வா;வாசு,, நீ குழந்தையாக இருக்கும்போதே ஒரு முறைக்கு மேல் கேட்காமல் அடுத்த பாடத்தைக் கேட்பாய். ஆசானிடமும் அப்படியேவா?
வாசு;(சிந்தனையுடன்) அப்பா, நேற்று நீங்கள் சொன்ன ராமாயண ஸ்லோகத்திற்கு உண்மையான விளக்கம் சொன்னது தவறா அப்பா?
பட்டர் ;இல்லை குழந்தாய்.ஒரு தவறும் இல்லை.
வாசு; பின் ஏன் ஆசான் மட்டும் கோபித்துக் கொள்கிறார்?
பட்டர் ;என் சொல்லையும் உன் சொல்லையும் யார் மதிப்பார்கள் குழந்தாய்?அச்சுதப்ரக்ஞராகவோ திருவிக்ரமபண்டிதராகவோ அல்லது சந்நியாசியாகவோ இருக்கவேண்டும்.வா,வா(.போகிறார் )
(வாசு சிந்தனையுடன் செல்கிறான்)




















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com