வியாழன், 9 ஜூலை, 2009

என்னைப்பற்றி

பெயர் ருக்மணி சேஷசாயீ. தமிழில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளேன். ஐம்பது ஆண்டுகளாக எழுத்துப்பணி புரிந்து வருகிறேன். மேல் நிலைப்பள்ளியில் சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழாசிரியராகப பணி புரிந்துள்ளேன்.

வெளியிடுகள் மற்றும் ஊடகம்

கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன், தினமணி, கண்ணன், முதலான பல வார மாத இதழ்களில் எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. நாவல் சிறுகதைத் தொகுதி சிறுவர்நூல்என இருபத்தைந்து நூல்களுக்குமேல் வெளிவந்துள்ளன. ஆகாசவாணி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறேன்அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உரத்தசிந்தனை இலக்கியவட்டம் போன்ற சங்கங்களில் அங்கம் வகித்து வருகிறேன்.

விருதுகள்

எழுத்தாளர் சங்கம் 'பாரதி பணிச்செல்வர் ' என்ற விருதினையும் உரத்தசிந்தனை சிறந்த வாசக எழுத்தாளர் என்ற விருதினையும் அளித்து என்னை கௌரவித்துள்ளன.

சுட்டி கதையின் நோக்கம்

சிறுவர்களுக்கு எழுதுவதில் மிகவும் விருப்பம் உண்டு. பலரும் படிக்கவேண்டும் என்பதற்காகவே 'சுட்டிக்கதை' என்ற இணையதளத்தை உருவாக்கி யுள்ளேன்.வளரும் சமுதாயம் இதன் மூலம் நல்ல பண்பினைப்பெருமாயின் அதுவே என் வெற்றி எனக்கொள்வேன்.

அன்புடன் உங்கள் பாட்டி,

ருக்மணி சேஷசாயீ