வியாழன், 20 ஆகஸ்ட், 2020

chuttikadhai.blogspot.com

 மாணவச் செல்வன் 

Inbox
x

Rukmani Seshasayee rukmani68sayee@gmail.com

18 Aug 2020, 13:24 (2 days ago)
to rukmani68sayee.avva

அனைவரும் ஒன்றும் புரியாமல் ஆசிரியர் பின் சென்றனர்.அனைவரையும் நிற்கச் சொன்ன துரோணர் துரியோதனனை மட்டும் அழைத்துக் கொண்டு மரத்தின் மறுபக்கம் சென்றார்.அங்கு தரையில் ஒரு மந்திரத்தை எழுதிக் காட்டி படிக்கச் சொன்னார்.துரியோதனனும் அந்த மந்திரத்தைப் படித்துவிட்டு குருவைப் பார்த்தான்."இப்போது ஒரு அம்பை இந்த மரத்தின் உச்சியைப் பார்த்து விடு" என்று கட்டளையிட்டார்.
துரியோதனனும் ஒரு அம்பை எடுத்து மரத்தை நோக்கி விட்டான்.என்ன ஆச்சரியம் அந்த அம்பு எங்கு மறைந்ததோ ஆனால் மரத்தின் ஒவ்வொரு இலையிலேயும் ஓட்டை விழுந்திருந்தது.
"துரியோதன, இந்த அஸ்திரத்தை நீ படைக்களத்தில் பிரயோகித்தால்  ஆயிரக்கணக்கான வீரர்களை இது  பலிவாங்கும் "
துரியோதனனுக்கு ஒரே மகிழ்ச்சி.அர்ச்சுனனுக்குத் தெரியாத ஒரு அஸ்திர பிரயோகம் தனக்கு மட்டும் தெரிந்து விட்டது என அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டான். மிக்க நன்றி குருவே என்று அவர் கால்களில் பணிந்தான்.
                  அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார் துரோணர்..சற்று நேரத்தில் அங்கு வந்த அர்ச்சுனன் அவரிடம் மேலாடையை பணிவுடன் அளித்தான்.அனைவரும் நீராடிப் புறப்பட்டனர்.
வரும் வழியில் அதே ஆலமரத்தடிக்கு வந்தனர். துரோணர் சற்று நின்று அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தார்.துரியோதனனும் பார்த்தான்.என்ன ஆச்சரியம் ஒரே ஓட்டை இருந்த இலைகளில் இப்போது இரண்டாவது ஓட்டை விழுந்திருந்தது.இது எப்படி சாத்தியமாயிற்று.குரு  தனக்கு மட்டும்தானே இந்த அஸ்த்திரத்தைக்  கூறினார். சற்றே சந்தேகத்தோடு அவரைப் பார்த்தான் துரியோதனன்.
அப்போது துரோணர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அவரை வணங்கிய அர்ச்சுனன்,"ஸ்வாமி தங்களின் வஸ்த்திரத்தை எடுத்துக் கொண்டு நான் வரும்போது இந்த ஆலமரத்தடியில் பல காலடித் தடங்களைப்பார்த்தேன் அதோடு இரண்டு பேரின் காலடிகள் மட்டும் தனியே போயிருப்பதைப் பார்த்து அதன் பின் சென்றேன்.அங்கே ஒரு மந்திரம் கீழே எழுதியிருப்பதைப் பார்த்தேன் அதோடு மரத்திலுள்ள ஆயிரக் கணக்கான இலைகளிலும் ஓட்டை விழுந்திருப்பதையும் பார்த்தேன்.
இது ஏதோ அஸ்திரம்தான் என்று புரிந்து கொண்டேன்.அதை நானும் பிரயோகித்துப் பார்த்தேன்."
"அப்படியானால் என் மேலாடையைக் கீழே வைத்துவிடட்டாயா?"
"இல்லை குருவே, இந்த மேலாடையை  ஆகாயத்தில் தூக்கிப் போட்டேன் அது மேலே சென்று திரும்பி கீழே விழுவதற்குள் இந்த அஸ்திரத்தைப் பிரயோகித்துவிட்டேன் தங்களின் உத்தரீயமும் கீழே விழாமல் கைகளில் தாங்கி கொண்டேன்.என் அஸ்திர பிரயோகம்தான் இலைகளில் இரண்டாவது ஓட்டை.முதலில் இருக்கும் ஒட்டையைப் போட்டவர் யாரென்று அறியமாட்டேன் ஸ்வாமி.".
மாணவர்களே பார்ப்பதையெல்லாம் குற்றமில்லாமல் கற்று மனதில் நிறுத்திக் கொள்பவனே உண்மையான மாணவன் தனக்கு உகந்தவை என்று தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்ளும் 
பண்பு யாரிடத்தில் உள்ளதோ அவனே உண்மையான மாணவச் செல்வன்.அர்ச்சுனன் உண்மையான மாணவன்.அவன் திறமைசாலி என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை " என்று முடித்தவர் துரியோதனனைப் பார்த்து ஆசிரியர் காட்டிய வழியைப் பின்பற்றி தாங்களாகவே முனைந்து கற்பதே அறிவு. இதை உணர்ந்து கொண்டாயா துரியோதன "என்றார் துரியோதனனும் அதை ஒப்புக் கொண்டவன்போல் தலைகுனிந்து நின்றான்.
ராமசாமி கதையை முடித்தார்.
"தெரிந்து கொண்டாயா பாலு.ஆசிரியர் சொல்லிக் கொடுப்பார். அதை  நல்ல முறையிலே மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளவேண்டியது மாணவன்  கடமை.அவனைத்தான் மாணவச் செல்வன் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள் புரிந்ததா?"என்றவாறு படுத்துக்க கொண்டார். "சரிப்பா நானும் இனி அருச்சுனனைப் போலவே படிப்பேன். எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அறிவை வளர்த்துக் கொள்வேன்."என்றான் உறுதியோடு.






 
ருக்மணி சேஷசாயி



 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

 மாணவச்  செல்வன் 


             பள்ளிக்கூடத்தில் கொடுத்த மதிப்பெண் பட்டியலைத் தன அப்பாவிடம் காட்டியபடி நின்றான் பாலு. அதைப் பார்த்த ராமசாமி சற்றே கோபம் கொண்டார்.பாலுவை கோபமாகப் பார்த்தார்.சிணுங்கியபடியே பேசினான் பாலு.

"அந்த வாத்தியாரு நல்லாவே சொல்லிக் குடுக்கலேப்பாஅதான் "என்றவனை இடைமறித்துப் பேசினார்."ஏண்டா நீ கவனிக்காமே வாத்தியாரு மேலே பழி போடாதே உனக்கு முன்னாலே நூறு மார்க் வாங்கியவனுக்கெல்லாம் வேறே வாத்தியாரா பாடம் சொன்னாரு இல்லேல்ல."

தலைகுனிந்து நின்றான் பாலு."சரி சரி கவனித்து ப் படி.அடுத்தமுறை நல்ல மார்க்கோட வா.".என்றவர் வெளியே சென்று விட்டார்.

அன்று இரவு படுத்தபடி அப்பாவுடன் பேச்சுக்கு கொடுத்தான். அப்பா ஒரு கதை சொல்லுங்கள் என்றான்.

 ராமசாமியும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார்.அவர் கதைசொல்லப்போவதை அறிந்துகொண்ட பாலுவின் தம்பியும் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

கதைசொல்ல ஆரம்பித்தார் வீராசாமி.மஹாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்சுபேர் கௌரவர்கள் நூறுபேர்.இவங்க எல்லாருக்கும் துரோணர் அப்படிங்கற முனிவர்தான் பாடம் சொல்லித் தருகிற வாத்தியார்.பாண்டவர்களுக்கு தருமன் மூத்தவன். கௌரவர்களுக்குத் துரியோதனன் மூத்தவன்.இ ந்த துரியோதனனுக்கு அருச்சுனன் மேல பொறாமை.ஏன்னா வில்வித்தையில் அவன் ரொம்பக் கெட்டிக்காரனா இருக்கறதால.அதோட பங்காளிகளான பாண்டவர்கள் அஞ்சுபேரையும் கௌரவர்களுக்குப் பிடிக்காது.அருச்சுனன் கெட்டிக்காரனா இருப்பதற்கு ஆசிரியர் காரணம்னு அவர்மேல் கூட துரியோதனனுக்கு கோபம்இருந்தது..இது துரோணருக்கும்  தெரியும். ஆனாலும் இளவரசர்கள் ஆயிற்றே ஒன்றும் சொல்ல முடியாதே.

இந்த எண்ணத்தைத் துரியோதனனிடம் எப்படியாவது நீக்க வேண்டுமே என்று நினைத்தார்.அதற்கு காலம் வந்தது.ஒருநாள் அதிகாலை நேரம் தன நூற்று ஐந்து மாணவர்கள் புடைசூழ துரோணர் ஆற்றுக்கு குளிக்கப் போனார்.எல்லோரும் நடந்து போய்க்  கொண்டிருக்கும் பொழுது துரோணர் திடீரென நின்றார்.  .மாணவர்கள் அவர்பின் நின்றனர்.அவர்  பார்த்து,"அர்ச்சுனா, என் மேலாடையை ஆசிரமத்திலேயே .விட்டு .விட்டேன். நீ சென்று அதை எடுத்து .வா "என்று கூறவே அர்ச்சுனனும் உடனே புறப்பட்டான் 

அவனைத் தடுத்து நிறுத்தியவர் "அர்ச்சுனா, என் உத்தரீயத்தை வழியில் எங்கும் கீழே வைக்கக்  கூடாது."என்று கூறினார்.அர்ச்சுனனும் அப்படியே ஸ்வாமி என்றவன் வேகமாக  ஆசிரமம்  நோக்கிச் சென்றான். 

அவன் சென்ற பின் மற்றவர்களை நோக்கி அருகே   வளர்ந்து நின்றிருந்த பெரிய ஆலமரத்தின் அருகே வரச்  சொன்னார்.