வியாழன், 25 ஜூன், 2020

vinayagar paadal

                                     பல்லவி 
வினையைத தீர்க்கும்  விக்ன  விநாயகனே 
வேண்டும் வரம் தரும் வேத முதல்வனே        (வினை)
                                   அனுபல்லவி 
வளமுடன் நலமும்வாழ்வும்   உயர்வும் 
வளரும்படியாய் வரந்தனை அருள்வாய்    (வினை)

                                       சரணம்-1
வேதவ்யாசரின் வேண்டுதல் ஏற்றாய் 
பாரதம் எழுதி ஒற்றைக்கொம்பன் ஆனாய் 
காவிரி விரைந்திட சாகசம் புரிந்தாய் 
யாவரும் பணிந்திட  தத்துவம் ஆனாய்     (வினை)
                                    சரணம்-2
சந்திரன் சாபம் நீங்கிடச் செயதாய் 
சங்கரன் மைந்தனே சங்கடம் தீர்ப்பாய் 
ஐந்து கரத்தனே  ஆதிமுதல்வனே 
வந்து பணிந்தோம் வாழ்த்தி அருள்வாய்  (வினை)
                     ---------------------------------------



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com