சனி, 24 ஏப்ரல், 2021

nalladhe sei

நல்லதே செய் 

குமாரசாமி ஒரு தொழிலாளி.அந்த நகரத்திலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான்.அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.சின்னவன் ராமு ஒழுங்காகப் பள்ளி சென்று படித்து வந்தான்.பெரியவன் வேலு படிப்பில் நாட்டமில்லாமல் அவ்வப்போது ஊர் சுற்றுவான். 

குமாரசாமி எவ்வளவு சொன்னாலும் அவன் திருந்தவேயில்லை. ஒருநாள் மூன்று பெரும் நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது குமாரசாமி 

மெதுவாகத் தன பெரிய மகன்மேல் கையை வைத்தான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த வேலு அவன் அப்பா அன்பொழுகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். சற்றே புன்னகையுடன் 'என்னப்பா?' என்றான் அதே அன்புடன்.

"நான் ஒண்ணு  சொன்னால் கேட்பியா/?"

சொல்லுங்கப்பா"

"நீ பள்ளிக்கூடம் போ ய் படிக்காட்டியும் பரவாயில்லை.அறிவாளியா ஆகாட்டியும் பரவாயில்லை.எல்லாருக்கும் நல்லதே செய்வேன்னு மனசால நினைச்சுக்கோ.அந்த சந்திரன் சாட்சியா அப்பா கேக்குறேன் எல்லாருக்கும் நல்லதே செய் சரியா?"

அப்பாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தலையைப் பலமாக ஆட்டிய வேலு "கண்டிப்பா எல்லாருக்கும் நல்லதே செய்வேம்ப்பா"என்றான். 

மறுநாள் வழக்கம்போல ஊர் சுற்றிவந்தான் வேலு.அன்று சனிக்கிழமை. பள்ளி பாதி  நாள் தான். மாணவர்கள் பேரிரைச்சலோடு வீட்டுக்கு ஓடினர்.அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றிருந்தான் வேலு.அப்போது ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன்  ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.

அவன் கால் கட்டைவிரல் பெயர்த்துக் கொண்டு ரத்தம் வடிய உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். பழைய வேலுவாக இருந்தால் நமக்கென்ன என்று போயிருப்பான். இப்போது அப்பாவிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.உடனே அந்தச் சிறுவனிடம் ஓடி தன்னிடம் இருந்த கைக்குட்டையைக் கட்டிவிட்டான்.அந்தச்சிறுவனைத் தன் தோளி ல் உப்புமூட்டை சுமந்தபடி அவன் வீட்டுக்குச் சென்றான்.அந்தச் சிறுவனின் அம்மா அவனைத் தூக்கிவந்த வேலுவுக்கு பலமுறை நன்றி சொன்னாள் சற்றே வெட்கப்பட்ட அவனை அமரவைத்து வடையும் காப்பியும் கொடுத்து உபசரித்தாள் 

               ஒரு சிறு உதவிக்கு இத்தனை உபசரிப்பா என ஆச்சரியப்பட்டான் வேலு.இரண்டு நாட்கள் சென்றன.வேலைமுடிந்து  தொழிலாளிகள் வந்து கொண்டிருந்தனர்.குமாரசாமியும் நண்பர்களுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தார்.வழியில் வேலுவை ஒரு பெரியவர் கையைப் பிடித்துக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த குமாரசாமி ஊர்சுற்றும் மகன் என்ன தவறு செய்தானோ என்றபடி அருகே சென்றார்.அவர் வாய் திறக்குமுன் அங்கே வந்த ஒரு அம்மாள் பெரியவரிடமிருந்து வேலுவைப்பிரித்துதான் பிடித்துக் கொண்டாள் 

."என்ன தவறு செய்தான் என்று திட்டுகிறீர்கள்?"

என் பேரனைப் போட்டு அடித்து விட்டான்"என்றார் அந்தப் பெரியவர்.குமாரசாமி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அய்யா, பரோபகார சிந்தனையுள்ள இந்தப் பையனைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு. என் மகன் அடிப்பட்டபோது பள்ளியிலிருந்து உப்புமூட்டை சுமந்து வீட்டுக்கு கூட்டி வந்தவானாய்யா இவன். இவன் உங்கள் பேரனை அடித்தானா.நம்ப முடிபியலையே"என்றால் கோபமாக.பயத்துடன் நின்றிருந்த  வேலு அப்பாவைப் பார்த்ததும் அருகே வந்து நின்றான்.பெரியவர் "அவன் அடித்தானா இல்லையா கேளுங்கள்' என்றார்."நான் கையை  ஓங்கினேன்.அதற்குள் அடித்ததாகப் பொய் சொல்லி அழுதுகொண்டே ஓடிவிட்டான்.

பெரியவர் கோபமாக "பார்த்தீர்களா. பொய் பொய் சொல்கிறான்"என்றார். 

அந்த அம்மாள் வேலுவிடம்,"வேலு என்ன நடந்தது சொல்லப்பா"என்றாள் .

வேலு அப்பாவைப் பார்த்தபடி "'அப்பா, எல்லாருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னதை நான் மறக்கவில்லை.வழியில் ஒரு பூனை இரண்டு குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டு மறைவாகப் படுத்திருந்தது. அதைக் கல்லால் அடிக்கப் போனான் ஒரு பையன் அவனை நான் அடிப்பது போல் கையைத் தூக்கிக் கொண்டு துரத்தி விட்டேன். அவன் அழுதுகொண்டே தன தாத்தாவிடம் நான் அடித்ததாகப் பொய் சொல்லி விட்டு ஓடிவிட்டான் இந்தப் பெரியவரும் என்னை எதுவும் கேட்காமல் அடிக்கப் பார்த்தார்.என்றான்.

அந்த அம்மாள். "வேலு சொல்வது   உண்மையாகத்தான் இருக்கும் மிகவும் நல்லவன் எல்லோருக்கும் நன்மையே செய்யும் பண்புள்ளவன்.பெரியவரே  இப்படி அவசர படலாமா?"என்றபோது மன்னிப்புக் கேட்டவர் அங்கிருந்து தலை குனிந்தபடி சென்றார்.அந்த அம்மாள் குமாரசாமியிடம்"உங்கள் மகனா?"என்றபோது குமாரசாமி தலையசைத்தார்.

              நல்ல பண்புள்ள பையன் நீங்கள் ரொம்ப புண்ணியம் செய்தவர்.என்றுசொன்னவள் தன மகனை வேலு தூக்கிக் கொண்டு வந்த கதையைச் சொன்னாள்.செய்த உதவியை யாரிடமும் சொல்லாமல் இருக்கும் அவன் பண்பைப் பாராட்டுவதாக அந்த அம்மாள் சொன்னபோது மிகவும் பெருமைப் பட்டார்.ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனைச் சான்றோன் எனக் கேட்ட அந்த தந்தை.