செவ்வாய், 17 நவம்பர், 2020

கண்ணன் பாடல்  

பல்லவி 

கண்ணன் என்னும் போதிலே என்  

எண்ணம் முழுதும் இனிக்குதே.   (கண்ணன்)

அனுபல்லவி 

கண்ணன் குழலோசையில் -புவி 

வண்ண மயமாய்த் தோணுதே      (கண்ணன்)

சரணம் -1

வெண்ணை பால் தயிரிலே அவன் 

கள்ள கதைகள் தெரியுதே 

எள்ளத்தனை போதிலும் -என் 

உள்ளம் மறந்து போகுமோ               (கண்ணன்)

சரணம் -2 

அன்னை தாய் யசோதையின் 

அன்பில் மயங்கி கிடந்தவன் 

ஆயர்பாடி தன்னையே  தன் 

அகத்துள் வைத்துக் காத்த அந்த (கண்ணன் )

                ---------------------------------