வெள்ளி, 24 மே, 2013

. தெய்வம்இகழேல்....

ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.அவனுக்கு ரவிச்சந்திரன் எனப் பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.இப்போது அவனுக்கு பனிரெண்டு வயது..அவன் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.

அவன் அம்மாவும் வயல் வேலைக்குச் சென்று பாடுபட்டு சம்பாதித்தார்.அதனால் ரவிக்குக் கஷ்டம் தெரியாமவளர்த்தனர்.அவன் நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப்போய் உயர்ந்த நிலையில் வாழ வேண்டுமென தினமும் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

ஆனால் ரவி இவர்களது கஷ்டத்தைப புரிந்து கொள்ளாமல் தான் விரும்பியதையெல்லாம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.அவன் அம்மாவுக்கு மட்டும்  இவன் கஷ்டம் தெரியாமல் வளர்கிறானே என்று மனம் மிகவும் வேதனைப் பட்டது.அதனால் ரவி ஏதேனும் கேட்டால் போடா போய்க் கடவுளிடம் கேளு அவர் உனக்குத் தருவார்.என்று சொல்லிவிடுவார்.

ஒருநாள் ரவியின் அம்மா அவசரமாக வயலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.அப்போது ரவி பள்ளிக்குப் புறப்பட பையைத் தூக்கிக் கொண்டவன் அம்மா என்றான். மெதுவாக அவரின் அருகே சென்றவன் "அம்மா, எங்க வகுப்பிலே நிறைய பேரு ஸ்கூலுக்கு சைக்கிளில்தான் வாராங்கம்மா.எனக்கும் சைக்கிள் வாங்கிக் குடும்மா.என்றான்.

"சரிதான், அதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான் முடியும் நீ படிச்சி பெரிய வேலைக்கு வந்து வாங்கிக்கோ. எங்களாலெல்லாம் முடியாது."
ரவி அப்படியே திண்ணையில் அமர்ந்து கொண்டான்.அவன் கோபத்தைப் பார்த்த அம்மா," ரவி, அந்த சாமிகிட்ட வேண்டிக்  கேளுப்பா, அவரு மனசு வச்சா, உனக்கு எல்லாம் தருவாரு.அழுவாமே ஸ்கூலுக்குப் போ"என்று சமாதானம் செய்துவிட்டுப் போய்விட்டார்.

ரவி மனதில் நினைத்தபடியே நடந்தான்.அம்மா சொல்வதுபோல் சாமி நினைச்சா எல்லாம் தருவாரா?நாந்தான் சாமியைக்  கும்பிடுறதே இல்லையே, இன்னிக்கி கேட்டுப் பார்ப்போம்.என்றபடியே நடந்தான்.

வழியில் ஒரு அம்மன்கோயில் இருந்தது.அந்தக் கொஇயிலுல்லெ நுழைந்து அம்மனின்முன் நின்றான் ரவி.தன கண்களை மூடி "சாமி அம்மா இன்னைக்கி மட்டும் எனக்கு புது சைக்கிளு  ஓட்டக் கெடச்சா, உன்னை நம்புறேன். தெனமும் உன்னைக் கும்பிடுறேன்.இனி என்ன வேணுமின்னாலும் உன்னையே கேட்பேன் என் அப்பா அம்மாவைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.என் ஆசையை நிறைவேத்தி வெச்சுடு."என்று வேண்டிக் கொண்டு பள்ளிக்கு விரைந்தான்.

வேகமாக நடையைப் போட்டவன் முன்னால்  ஒரு பெரியவர் தடாலென்று சரிந்து விழுந்தார்.சட்டென்று பயந்தபடி நின்று விட்டான் ரவி.அருகே நடந்து போய்க்கொண்டு இருந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து நீர் கொடுத்து எழுப்பினர் அவர் மயக்கமாக கிடந்தார். ரவியும் வேடிக்கை பார்த்தபடி அருகே நின்றான்.ஒருவர் மயக்கமாகக் கிடந்தவரின் சட்டைப்பையைப் பார்த்தார். அதில் அவரது வீட்டு விலாசம் இருக்கவே அருகே நின்றிருந்த ரவியை அழைத்து "தம்பி, இந்த விலாசம் தெரியுமா உனக்கு?"என்றதும் ரவி தெரியும் என்று தலையை அசைத்தான்.
"அப்படீன்னா, இந்தா இந்த சைக்கிளை எடுத்துட்டுப்போய் அவங்க வீட்டிலே தாத்தா மயக்கமா இருக்காரு.ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப்போயிருக்காங்கன்னு சொல்லிட்டு வாப்பா"
ரவி மிகுந்த ஆவலோடு அந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு நான்கு தெரு தாண்டிச் சென்றான்.போகும்போதே ஆஹா, புதுசைக்கில் ஓட்டற சொகமே தனிதான்.காலைலேதான் நம்ப அம்மன் கோயிலிலே சைக்கிள் ஓட்டக் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன். இதையே சொந்தமா வேணும்னு கேட்டிருந்தா சாமி குடுத்திருக்குமே.
அம்மா சொன்னது நெசந்தான். இனி எதுவும் வேணுமின்னா நாம சாமியைத்தான் கேக்கோணும்
நம்ம அவ்வையார் தெய்வம் இகழேல்னு சொல்லியிருக்காரே.இனிமே தினமும் கோயிலுக்குப் போயி நல்லாப் படிக்கணும் பெரிய பணக்காரனா ஆகணும்னு வேண்டிக்கணும் என்று முடிவு செய்து கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டான் ரவி.










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayeerukman
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com