சனி, 17 அக்டோபர், 2015

குறள் வழிக்கதைகள். 3.கற்றதனால் ஆய பயன்...

அவரது
சொற்களை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் சரவணன். சிரித்தபடியே அவரைப்பார்த்தவன்,
"இன்னிக்கி ரெண்டு வார்த்தை படிக்கக் கத்துக் குடுக்கறேன் தாத்தா.நாளைக்கி இதேநேரம் வந்துடுங்க  வேற ரெண்டு வார்த்தை கத்துக்குடுக்கறேன்."என்றவன்முன் ரங்கராசு சரி, என வேகமாகத் தலையை அசைத்தபடி மகிழ்ச்சியுடன்அமர்ந்தார்.

இரண்டு மாதங்கள் கழிந்தன. அந்த ஊர் பண்ணையார் சுப்பிரமணி.
அவருக்கு ஒரே மகன் கணேசு.அவனும் சரவணனுடன் ஆறாம் வகுப்பில் படித்துவந்தான்.அன்றுபள்ளி சென்ற கணேசு வீடு திரும்பவில்லை.நாலாபக்கம் ஆட்கள்தேடி அலைந்தனர். ஆனால் கணேசு கிடைக்கவே இல்லை. கணேசின் தாயார் அழுதுபுலம்பினாள்.
"ஐயோ ஒரே பிள்ளையாச்சே! கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தேனே.என் மவனுக்குஎன்ன ஆச்சோ தெரியலையே!"என்று அழுது ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.அவளைஅடக்கினார் பண்ணையார்.ஆனாலும் பெற்றமனம் கேட்கவில்லை. அழுதுகொண்டே உள்ளேசென்றாள் அந்த அம்மாள்.

இந்தச்செய்தி ஊர்முழுவதும் பரவி விட்டது.ஒவ்வொருவரும்
மற்றவரைப் பார்க்கும் போதெல்லாம்" என்ன, கணேசு கெடச்சிட்டானா?"
என்றே கேட்டுக்கொண்டார்கள்.ஆனால்கணேசுகிடைக்கவேஇல்லை.

                     ஒருநாள்முழுவதும் தேடுவதிலேயே கடந்தது.இரண்டாம்நாள் போலீசில் சொன்னால் அவர்கள்கண்டு பிடித்து விடுவார்கள் என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார்பண்ணையார் சுப்பிரமணி..அவருடன் இன்னும் நாலைந்து பேர் புறப்பட்டனர். ஊருக்குள்யாரும் எதையும் பேசவே பயந்தனர்.ஏனென்றால் போலீஸ் வரப்போகிறது என்ற எண்ணமே
அவர்களை வாய் மூடவைத்துவிட்டது.
சரவணனையும் இந்த அச்சம் ஆட்கொள்ளாமல் இல்லை. ஆனால்
மற்றவர் யாரையும் விட அவனுக்கு இன்னொரு அச்சமும் உள்ளத்தில்
குடிகொண்டது.அதனை யாரிடமும் சொல்ல முடியாமல் தனக்குள்ளே வைத்துப்புழுங்கிக் கொண்டிருந்தான். ஆம். இரண்டு நாட்களாக தாத்தா
படிக்க வராததுதான் அந்தக் காரணம்.அத்துடன் அவன் அப்பாவும் ஏன் இன்னிக்கிரங்கராசு வயலுக்கு வரல்லே.ஒருவேளை உடம்பு சொகமில்லையோ "என்று சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது சரவணனின் மனதுக்குள் ஒரு பயம் தோன்றியது.


                                                       (தொடரும்)



















--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com ::
http://rukmaniseshasayee.blogspot.com

புதன், 14 அக்டோபர், 2015

குறள் வழிக் கதைகள். 3.கற்றதனால் ஆய பயன் ...

                                  சரவணன் மிகவும் நல்லவன். ஏழைகளுக்கு உதவும் பண்புள்ளவன்.இரக்க குணமும் ஈகைக் குணமும் உடைய அவனை

எல்லோருக்கும் பிடிக்கும்.ஆறாம் வகுப்புப் படிக்கும் சரவணனின் அப்பா ஒரு விவசாயி.எளிமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்

சரவணன் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்குச் செய்யத் தயங்க மாட்டான்.அவன் தந்தையுடன் விவசாயத் தொழில் செய்யும் 

ரங்கசாமிக்கு சிறுவயதிலிருந்தே படிக்கவேண்டும் என்று  மிகவும் ஆசை. ஆனால் பள்ளி சென்று படிக்க இயலாத சூழ்நிலையால் அவர்

படிப்பறிவே இன்றி அறுபது வயதையும் கடந்து விட்டார்.


                                               ஒருநாள் மாலைநேரம்.கழனி வேலைகளை முடித்துவிட்டு சரவணன் அருகே வந்து அமர்ந்தார்.சரவணன் தன் 

நோட்டுப்புத்தகத்தில் வேகமாக எழுதிக் கொண்டிருந்தான்.அருகே அமர்ந்த ரங்கசாமியைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு மீண்டும்

எழுதத் தொடங்கினான். சிறிது நேரத்தில் எழுதி முடித்த சரவணன் புன்னகைத்தபடியே. " என்னதாத்தா,உங்களுக்குப்படிக்கத்தெரியுமா?"என்றான்.

"தெரியாது தம்பி."

"பின்னே இவ்வளவு நேரமா நோட்டுப்புத்தகத்திலே  எதைப் பார்த்துகிட்டு இருந்தீங்க?"

"நீ வேகமா எழுதறதப் பாத்துகிட்டு இருந்தேன்"

"அப்போ படிக்கத்தெரியாதா?"

"தெரியாதுப்பா. ஆமா என்ன எழுதுன இதுல ?"

"வரலாறு தாத்தா"

சரவணன் வரலாறு பற்றி  விளக்கிவிட்டு" உங்களுக்குப் படிக்கணு முன்னா நான் கத்துக் குடுக்கறேன் தாத்தா"என்றான்  உற்சாகத்தோடு.

"படிச்சா நிறைய விஷயம் தெரியும் இல்லையா தம்பி?"

"" .நாளையிலிருந்து நான் உங்களுக்குப் படிக்கக் கத்துக் குடுக்கறேன் தாத்தா.""

"தம்பி நான் கத்துக்கறது யாருக்கும் தெரிய வேணாம் தெரிஞ்சா சிரிப்பாங்க.




















































































--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com