பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேர். தருமன், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் என்று அவர்களுக்குப் பெயர்.இவர்களுள் அர்ஜுனன் கண்ணனிடம் மிகவும் அன்பும் பக்தியும் கொண்டவன். தினமும் ஒரு வண்டி அளவு பூக்களைப் பறித்து வந்து கிருஷ்ணனைப் பூசிப்பான். அதனால் தானே மிகவும் பக்திமான் என்ற கர்வம் அவனிடம் குடி கொண்டது. தன்னை விட கண்ணனை நேசிப்பவர் இவ்வுலகில் யாருமில்லை என்று இருமாந்திருந்தான். உறவு முறையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மைத்துனன். கண்ணனின் சகோதரி சுபத்திரையை அர்ஜுனன் மணந்திருந்தான்.
பாரதப் போர் முடிந்து தருமன் பட்டமேற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். காலம் ஓடியது. பாண்டவரின் காலம் முடிந்தது. அனைவரும் ஸ்வர்க்கம் செல்ல விண் வழியே பயணப்பட்டனர். தருமன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து கண்ணன் செல்ல அவனருகே பீமன் சென்றான். அவன் பின்னே அர்ஜுனன் சென்றான். அர்ஜுனன் எவ்வளவு முயற்சித்தும் பீமனைத் தாண்டி கண்ணனின் அருகே செல்ல இயலவில்லை.
அப்போது அர்ஜுனன் கண்ணனிடம் கேட்டான். " கண்ணா! ஏன் உன்னிடம் என்னால் நெருங்க முடியவில்லை? என் பக்தியில் ஏதேனும் குறை உண்டா? பீமனால் மட்டும் உன்னருகே நெருங்க முடிகிறதே?
கண்ணன் புன்னகைத்தான். "அர்ஜுனா! என்னைப் பூஜித்ததால் அதுவும் வண்டி அளவு பூக்களைப் போட்டுப் பூஜித்ததால் நீயே மிகவும் பக்தி கொண்டவன் என்று எண்ணிக்கொண்டாயல்லவா?" என்று கூறியபோது அர்ஜுனன் திகைத்தான்.
"ஆம் கண்ணா! அதிலென்ன சந்தேகம்? எண்ணற்ற மலர்களைக் கொண்டு உன்னைப் பூஜித்தவனல்லவா நான்?"
"அப்படியானால் உ ன்னிலும் அதிக மலர்களைக் கொண்டு என்னைப் பூஜித்தவனை உன்னை விட அதிக பக்தியுள்ளவன் என்று கூறலாமல்லவா?"
"அப்படிப் பூஜித்தவன் உள்ளானா கிருஷ்ணா?"
"ஆம். அவன்தான் பீமன்.உன் அண்ணன்." அர்ஜுனன் திகைத்தான்.
"கண்ணா! பீமன் ஒருநாள் கூட உன்னைப் பூஜித்து நான் பார்க்கவில்லையே? "
"உண்மைதான். பீமன் பூஜித்தது யாருக்கும் தெரியாது. எனக்கும் பீமனுக்கும் மட்டுமே தெரியும்."
அர்ஜுனன் துக்கத்தில் ஆழ்ந்தான். அவன் உள்ளம் துயரத்தில் மூழ்கியது.கண்ணனைக் கண்ணீர் மல்கப் பார்த்தான்.
"அர்ஜுனா! துயரப்படாதே. உன் உள்ளத்தில் நீயே பக்திமான் என்றும் உனக்கே நான் உரிமையானவன் என்றும் நீ கர்வம் கொண்டிருந்தாய்.
அது சரியல்லவென்பதை அறிவிக்கவே இந்நிகழ்ச்சி நடந்தது."
"பீமன் யாரும் அறியாதவாறு எவ்வாறு பூஜை செய்தான்?"
"அர்ஜுனா! நீங்கள் வனவாசத்தின் போதும் அக்ஞாத வாசத்தின் போதும் காடுகளிலும் பல ஊர்களிலும் அலைந்து திரிந்தீர்கள் அல்லவா?
அப்போது பீமன் தன் கண்ணில் கண்ட மலர்கள் அத்தனையையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்கு அர்ச்சித்து விடுவான். நானும் அவனது உள்ளத்தின் அன்பைப் புரிந்து கொண்டு அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன். அப்படி அவன் அர்ச்சித்த மலர்கள்தன்ன் அதோ பார். மலைபோல் குவிந்துள்ளது. நீஅர்ச்சித்தவை இதோ இச்சிறு குன்று போல் உள்ளது. உள்ளத்தின் தன்னலமில்லாத அன்பே உண்மையான பக்தி. நீ மலர் பறித்து பூஜை செய்ததை விட மனதளவில் பூஜித்த பீமனின் பக்தியே சிறந்தது. ஒப்புக்கொள்கிறாயா?"
அர்ஜுனனின் கண்கள் திறந்தன. அவனது கர்வம் அகன்றது. பரிசுத்தமான மனதோடு கண்ணனை தியானித்தான். தூய்மையான அர்ஜுனனை இப்போது கண்ணன் கைகளைப் பற்றி அழைத்துச் சென்றான். அனைவரும் வைகுண்டம் சேர்ந்தனர்.
செவ்வாய், 15 டிசம்பர், 2009
பலன் நோக்காத பக்தி
லேபிள்கள்:
கதை,
கல்வி,
சுட்டி கதை,
நலம்,
பலன்
வியாழன், 3 டிசம்பர், 2009
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
சிரவணன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனது தாயும் தந்தையும் மிகவும் வயதானவர்கள்.அத்துடன் இருவரும் கண் தெரியாதவர்கள்.தங்களின் மகனின் உதவியில்லாமல் எந்த ஒரு வேலை யையும் செய்ய இயலாதவர்கள். சிரவணனின் தந்தையார் ஒரு ரிஷி.
ஆகவே அவர்கள் ஒரு வனத்தில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வனத்தில் நீரின்றி வறட்சி ஏற்பட்டது. ஆகவே வேறு வானத்தைத் தேடிப் புறப்பட்டனர். நடக்க இயலாமலும் கண் தெரியாமலும் தவிக்கும் தன் பெற்றோருக்கு ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் சிரவணன். இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் இருவரையும் அமரவைத்து அத்தட்டுகளைத் தராசு போல் அமைத்து அதைத்தன் தோளில் தூக்கிக் கொண்டான். வாலிப வயதை நெருங்கியவன் ஆனதால் சிரவணன் சிரமமின்றி தன் பெற்றோரைச் சுமந்து சென்றான்.
வெகு தூரம் நடந்து வேறு ஒரு காட்டுப் பகுதியை அடைந்தனர். சிரவணனின் தயார் நீர் அருந்தக் கொண்டுவருமாறு கூறினார். தந்தையாரும் தாகமாக உள்ளது எனக்கூறவே இருவரின் தாகத்தையும் நீக்க எண்ணினான். குடுவையில் நீர் காலியாக இருந்ததால் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத் தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் சிரவணன்..விரைவில் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர். அவர்களை வணங்கி விடை பெற்றுப் புறப்பட்டான் சிரவணன்.
அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது. அயோத்தி அரசன் தசரதன். காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக துஷ்ட மிருகங்களை வேட்டையாட தசரதன் கானகம் வந்திருந்தான். மாலைநேரம். இருள் லேசாகக் கவிந்து கொண்டிருந்தது. மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் மன்னன். அவன் அருகே மிருகம் ஒன்று தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது. மன்னன் துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். வில்லிலிருந்து அம்பு புறப்பட்ட மறுகணமே "அம்மா !" என்ற அலறல் குரல் கேட்டது.
மனிதக் குரலைக் கேட்ட மறுகணம் மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே சிரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம் தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று புலம்பி அழுதான். அவனைத் தடுத்த சிரவணன்,
"அரசே! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு உள்ளனர். அவர்களிடம் நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச் செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல் சாகிறேன் .நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான்.
சிரவணன் கூறியது போல் நீரை எடுத்துக்கொண்டு அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலைக் காட்டாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். தசரதனின் கை பட்டதுமே "யார் நீ?" என்று சத்தமிட்டாள் அந்தத்தாய். இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான் தவறாக அம்பெய்திய காரணத்தால் சிரவணன் மாண்ட செய்தியைக் கூறினான். புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் "ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து தவித்து உயிர் விடுவது போலவே நீயும் எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர சோகத்தாலேயே உயிர் விடுவாய். இது எங்கள் சாபம் " என்று சபித்துவிட்டு உயிர் விட்டனர்.
பின்னாளில் இந்த தசரதன் ராமனை வனவாசத்திற்கு அனுப்பிவிட்டு புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும் சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் ராம இலக்குவர் வனம் ஏகவும் தசரதன் தனிமையில் தவித்து பின் உயிர் விட்டான். நல்லோர் சொல்லுக்கு வலிமை உண்டு.பெற்றோரை தெய்வமாக எண்ணி அவர்களுக்கு அன்புடன் சேவை செய்து வந்த சிரவணன் பண்பால் பெருமை பெற்றான். அவன் பெற்றோரின் சாபம் பலித்துவிட்டது. எனவே பெற்றோரிடம் நாம் ஆசிபெற என்றும் அவர்களை வணங்க வேண்டும்.
ஆகவே அவர்கள் ஒரு வனத்தில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வனத்தில் நீரின்றி வறட்சி ஏற்பட்டது. ஆகவே வேறு வானத்தைத் தேடிப் புறப்பட்டனர். நடக்க இயலாமலும் கண் தெரியாமலும் தவிக்கும் தன் பெற்றோருக்கு ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் சிரவணன். இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் இருவரையும் அமரவைத்து அத்தட்டுகளைத் தராசு போல் அமைத்து அதைத்தன் தோளில் தூக்கிக் கொண்டான். வாலிப வயதை நெருங்கியவன் ஆனதால் சிரவணன் சிரமமின்றி தன் பெற்றோரைச் சுமந்து சென்றான்.
வெகு தூரம் நடந்து வேறு ஒரு காட்டுப் பகுதியை அடைந்தனர். சிரவணனின் தயார் நீர் அருந்தக் கொண்டுவருமாறு கூறினார். தந்தையாரும் தாகமாக உள்ளது எனக்கூறவே இருவரின் தாகத்தையும் நீக்க எண்ணினான். குடுவையில் நீர் காலியாக இருந்ததால் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத் தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் சிரவணன்..விரைவில் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர். அவர்களை வணங்கி விடை பெற்றுப் புறப்பட்டான் சிரவணன்.
அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது. அயோத்தி அரசன் தசரதன். காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக துஷ்ட மிருகங்களை வேட்டையாட தசரதன் கானகம் வந்திருந்தான். மாலைநேரம். இருள் லேசாகக் கவிந்து கொண்டிருந்தது. மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் மன்னன். அவன் அருகே மிருகம் ஒன்று தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது. மன்னன் துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். வில்லிலிருந்து அம்பு புறப்பட்ட மறுகணமே "அம்மா !" என்ற அலறல் குரல் கேட்டது.
மனிதக் குரலைக் கேட்ட மறுகணம் மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே சிரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம் தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று புலம்பி அழுதான். அவனைத் தடுத்த சிரவணன்,
"அரசே! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு உள்ளனர். அவர்களிடம் நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச் செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல் சாகிறேன் .நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான்.
சிரவணன் கூறியது போல் நீரை எடுத்துக்கொண்டு அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலைக் காட்டாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். தசரதனின் கை பட்டதுமே "யார் நீ?" என்று சத்தமிட்டாள் அந்தத்தாய். இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான் தவறாக அம்பெய்திய காரணத்தால் சிரவணன் மாண்ட செய்தியைக் கூறினான். புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் "ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து தவித்து உயிர் விடுவது போலவே நீயும் எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர சோகத்தாலேயே உயிர் விடுவாய். இது எங்கள் சாபம் " என்று சபித்துவிட்டு உயிர் விட்டனர்.
பின்னாளில் இந்த தசரதன் ராமனை வனவாசத்திற்கு அனுப்பிவிட்டு புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும் சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் ராம இலக்குவர் வனம் ஏகவும் தசரதன் தனிமையில் தவித்து பின் உயிர் விட்டான். நல்லோர் சொல்லுக்கு வலிமை உண்டு.பெற்றோரை தெய்வமாக எண்ணி அவர்களுக்கு அன்புடன் சேவை செய்து வந்த சிரவணன் பண்பால் பெருமை பெற்றான். அவன் பெற்றோரின் சாபம் பலித்துவிட்டது. எனவே பெற்றோரிடம் நாம் ஆசிபெற என்றும் அவர்களை வணங்க வேண்டும்.
ஞாயிறு, 8 நவம்பர், 2009
பிசிராந்தையார் நட்பு
பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார்.சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.
இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன் நட்புக் கொண்டவன். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.
இதை அறிந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் மந்திரியிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் செய்யுங்கள் எனக் கூறினார். அதேபோல் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும் ஆந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தை மேற்கொண்டான்.
இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர் வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு. வடக்கிருத்தல் என்பது தன்நாட்டில் உள்ள ஆறு குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அதன் இடையே மணல் திட்டு ஒன்றை அமைத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விடுதல்.
தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான்.
இதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். உடனே சோழ நாட்டை நோக்கி ஓடி வந்தார்.
வழியில் எதிர்ப் பட்டவர் இவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர்."புலவரே! நான் என் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம். தங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே, அது எப்படி?"என்று வியந்து கேட்டனர். அதற்கு மறுமொழியாக ஆந்தையார் ஒரு பாடல் பாடினார். புறநானூற்றில் உள்ள இப்பாடல் நமது வாழ்வியலுக்கு மிகவும் தேவையான ஒன்று.
" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."
என்று பாடிய பாடல் மூலம் " வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.
சோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காக த் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.
இச்செய்தியை இக்காட்சியைக் கண்ட பொத்தியார் என்னும் புலவர் தன் பாடலில் இதனைக் கூறுகிறார்.
"இசைமரபு ஆக நட்பு கந்தாக
இனியதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே."
பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. இத்தகு நண்பர்களை நம்மால் மறக்க இயலுமா?
லேபிள்கள்:
அன்பு,
கதை,
கவிதை,
சுட்டி கதை,
நட்பு
புதன், 4 நவம்பர், 2009
முயற்சி திருவினை ஆக்கும்
ஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல்லாம் பாட்டி மட்டுமே. மிகவும் ஏழையான இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தினமும் வயலில் கூலி வேலை செய்து வந்தனர். பாட்டி வயலில் வேலை செய்யும் பொழுது நம்பி மாடுகளை மேய்த்து விட்டு வருவான். சூரியன் மறைந்த பிறகே இருவரும் வீடு திரும்புவார்கள்.
இந்த நிலையில் நம்பிக்குப் படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. அவன் மாடு மேய்க்கும் பொழுது தன்னைப் போன்ற சிறுவர்கள் பள்ளிக்குப் போவதைப் பார்த்து தானும் பள்ளிக்குப் போக விரும்பினான். பாட்டியிடம் ஒருநாள், " பாட்டி , நானும் படிக்க வேண்டும் பாட்டி" என்றான்.
பாட்டி பெருமூச்சு விட்டாள். " நாமெல்லாம் படிக்க முடியாதுப்பா. அது பணக்காரங்களுக்குதான் முடியும்."
"ஏன் பாட்டி, நாம ஏன் படிக்கக்கூடாது?"
"நாம வேலை செய்துதான் சாப்பிட முடியும். படிக்கப் போயிட்டா யாரு சோறு போடுவாங்க? அதனால ஒழைக்கறதுதான் நம்மளாலே முடியும்."
இதை நம்பியின் மனம் ஏற்கவில்லை. எப்படியாவது படித்தே தீருவது என்று முடிவு செய்தான். அந்த ஊரில் இருந்தது ஒரே பள்ளிக்கூடம். அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. ஒரு கூரைக் கட்டடத்தில் பள்ளி நடந்து வந்தது. நம்பி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவிட்டு பள்ளிக்கூடத்தின் வாசலில் அல்லது ஜன்னலின் ஓரத்தில் வந்து நின்று கொள்வான். மூன்று மாதங்கள் வரை முதல் வகுப்பிலும் அதன் பின் இரண்டாம் வகுப்பிலும் என இரண்டு வருடங்களுக்குள் ஐந்து வகுப்பின் பாடங்களையும் கற்றுக்கொண்டான்.
இப்போது நம்பி யார் துணையும் இல்லாமல் எல்லா புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினான். கண்ணில் கண்ட தாள்களில் உள்ள செய்திகளையெல்லாம் படித்துத் தெரிந்துகொண்டான். தான் படிப்பதை யாரும் அறியாமல் ரகசியமாகவே வைத்திருந்தான்.ஏனெனில் மாடு மேய்க்கும் சிறுவன் படிப்பதைப் பார்த்தால் ஊர் பெரியவர்கள் தவறாக நினைப்பார்கள். அவன் சரியாக மாடுகளை மேய்க்கவில்லை எனக் கூறி கூலி தரமாட்டார்கள் எனப் பயந்திருந்தான்.
அந்த கிராமத்தில் வாரம் ஒருமுறைதான் தபால்காரர் வருவார். அவரும் ஊருக்கு வெளியே நம்பியைப் பார்த்தால் அவனிடம் இரண்டு அல்லது மூன்று கடிதங்களைக் கொடுத்துவிட்டு ஊருக்குள் வராமலேயே போய் விடுவார். அந்தக் கடிதங்களை நம்பி மாலையில் மாடுகளைக் கட்ட வரும்போது உரியவர்களிடம் சேர்த்து விடுவான்.
அன்றும் அதேபோல தபால்காரர் வந்தார். இரண்டு கடிதம்தான் இருக்கிறது. இதைத் தருவதற்காக ஊருக்குள் வரவேண்டுமா என எண்ணி அதை வழக்கம்போல நம்பியிடம் கொடுத்துச் சென்றார். வெகு நேரம் கழித்து அந்தக் கடிதங்களைப் பார்த்தான் நம்பி. இப்போது நம்பிக்குத்தான் படிக்கத் தெரியுமே. அதனால் ஆர்வம் அவனை அந்தக் கடிதங்களைப் படிக்கத் தூண்டியது. மெதுவாகப் படிக்கத் தொடங்கினான்.
அந்த கிராமத்தின் தலைவர் பெரியசாமி. அவரது நண்பர் சுந்தரம் பட்டணத்தில் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர். அவர்தான் பெரியசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார். வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு
அந்த ஊருக்கு அரசாங்க அதிகாரி வரப்போவதாக எழுதியிருந்தார். கடிதம் வந்து சேர்ந்ததும் வெள்ளிக்கிழமை.
அந்தக் கடிதம் உடனே கிராம அதிகாரியின் கைக்குப் போய்ச் சேரவேண்டுமே என முடிவு செய்தான் நம்பி.
உடனே தான் பாட்டி வேலை செய்யும் இடத்திற்குப் போனான். "பாட்டி, மாடுகளைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொள். நான் இந்தக்கடிதாசியை நம்ம தலைவரய்யா கிட்டே குடுத்துட்டு வரேன்."என்றபடியே ஓடினான்.
கடிதத்தைப் படித்த பெரியசாமி உடனே அதிகாரியை வரவேற்க ஆவன செய்ய உத்திரவு பிறப்பித்தார். அன்று மாலை தலைவரை நல்ல முறையில் வரவேற்று உபசரித்தார் அதிகாரி மிகவும் மகிழ்ந்து அந்த கிராமத்திற்கு என்ன வசதிகள் தேவை என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றக் கட்டளையிட்டார்.
இரவு நம்பியும் பாட்டியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு வாயிலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. "யாரது?" எனக்கேட்டவாறே வெளியே வந்தனர் பாட்டியும் பேரனும்.அங்கே கிராமத் தலைவர் பெரியசாமியும் சில பெரியவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் வேலைக்காரன் ஒரு தட்டில் நல்ல புதிய உடை
களும் இனிப்புகளும் பழங்களுடன் ஐந்நூறு ரூபாய் பணமும் வைத்து பாட்டியிடம் கொடுத்தனர்.
பாட்டி திகைத்தாள். எனக்கு என்ன மரியாதை ஏன் இந்த மரியாதை? அவளது திகைப்பைப் பார்த்து புன்னகை புரிந்த பெரியசாமி கூறினார்."பாட்டிம்மா! உங்க பேரன் காலையிலேயே கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்ததாலேதான் அதிகாரியை நன்கு உபசரிக்க முடிந்தது. நானும் வெளியூருக்குப் போவதைத் தள்ளிப் போட முடிஞ்சது.நம்ம ஊருக்கும் நல்லது நடந்திருக்கு. இத்தனைக்கும் காரணம் நம்பி கடிதத்தை சரியான நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தது தானே. அதனாலே இந்தப்பரிசை நாங்க எல்லாருமா சேர்ந்து அவனுக்குக் கொடுக்கிறோம்."
"இது ஒரு பெரிய விஷயமாங்கய்யா? அவன் எப்பவும் போல கடிதாசி கொடுத்திருக்கிறான். இதுக்குப்போயி...."
என்று நீட்டினாள்.
பெரியசாமி நம்பியைப் பார்த்துக் கேட்டார்."நம்பி!,இந்தக் கடிதம் மிக முக்கியமானது அப்பிடின்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது?"
"அய்யா! என்னை மன்னிச்சுடுங்க. நாந்தான் உங்களுக்கு வந்த அந்தக் கடிதத்தைப் படித்தேன். அதன் அவசரத்தைப் புரிந்து கொண்டு ஓடிவந்து கொடுத்துவிட்டு மாடுகளைப் பார்த்துக்கொள்ள மீண்டும் வயலுக்கு வந்துவிட்டேன்"
"உனக்குத்தான் படிக்கத்தேரியாதே? எப்படிப் படித்தாய்?"
நம்பி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் கல்வி கற்ற முறையைச் சொன்னபோது பெரியசாமி கண் கலங்கினார். இவ்வளவு ஆர்வமுள்ள சிறுவனை முறையாகப் படிக்கவைக்க முடிவு செய்தார். அதை பாட்டியிடம் சொல்ல அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அதைவிட நம்பி மிகவும் மகிழ்ந்தான்.
மறுநாள் முதல் நம்பி மாடு மேய்க்கப் போகவேண்டாம். இனி அவன் பள்ளிக்குச் செல்லட்டும் என பெரியசாமி கூறிவிட்டுச் சென்றார்.
பாட்டி தான் பேரனின் ஆசை நிறைவேறிற்று என மகிழ்ந்ததோடு நம்பியிடம் "உன் முயற்சி உன்னை உயர்த்திவிட்டது." என்றாள்.
இதைத்தான் பாட்டி "முயற்சி திருவினை ஆக்கும் " அப்படின்னு வாத்தியார் ஒருநாள் சொன்னார். என்று சொல்லிச் சிரித்தான்.
பாட்டியும் தன் பேரன் அப்போதே பெரிய படிப்புப் படித்து விட்டதுபோல மகிழ்ந்தாள். முயற்சி நமக்கு எல்லா வெற்றிகளையும் தரும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.
இந்த நிலையில் நம்பிக்குப் படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. அவன் மாடு மேய்க்கும் பொழுது தன்னைப் போன்ற சிறுவர்கள் பள்ளிக்குப் போவதைப் பார்த்து தானும் பள்ளிக்குப் போக விரும்பினான். பாட்டியிடம் ஒருநாள், " பாட்டி , நானும் படிக்க வேண்டும் பாட்டி" என்றான்.
பாட்டி பெருமூச்சு விட்டாள். " நாமெல்லாம் படிக்க முடியாதுப்பா. அது பணக்காரங்களுக்குதான் முடியும்."
"ஏன் பாட்டி, நாம ஏன் படிக்கக்கூடாது?"
"நாம வேலை செய்துதான் சாப்பிட முடியும். படிக்கப் போயிட்டா யாரு சோறு போடுவாங்க? அதனால ஒழைக்கறதுதான் நம்மளாலே முடியும்."
இதை நம்பியின் மனம் ஏற்கவில்லை. எப்படியாவது படித்தே தீருவது என்று முடிவு செய்தான். அந்த ஊரில் இருந்தது ஒரே பள்ளிக்கூடம். அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. ஒரு கூரைக் கட்டடத்தில் பள்ளி நடந்து வந்தது. நம்பி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவிட்டு பள்ளிக்கூடத்தின் வாசலில் அல்லது ஜன்னலின் ஓரத்தில் வந்து நின்று கொள்வான். மூன்று மாதங்கள் வரை முதல் வகுப்பிலும் அதன் பின் இரண்டாம் வகுப்பிலும் என இரண்டு வருடங்களுக்குள் ஐந்து வகுப்பின் பாடங்களையும் கற்றுக்கொண்டான்.
இப்போது நம்பி யார் துணையும் இல்லாமல் எல்லா புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினான். கண்ணில் கண்ட தாள்களில் உள்ள செய்திகளையெல்லாம் படித்துத் தெரிந்துகொண்டான். தான் படிப்பதை யாரும் அறியாமல் ரகசியமாகவே வைத்திருந்தான்.ஏனெனில் மாடு மேய்க்கும் சிறுவன் படிப்பதைப் பார்த்தால் ஊர் பெரியவர்கள் தவறாக நினைப்பார்கள். அவன் சரியாக மாடுகளை மேய்க்கவில்லை எனக் கூறி கூலி தரமாட்டார்கள் எனப் பயந்திருந்தான்.
அந்த கிராமத்தில் வாரம் ஒருமுறைதான் தபால்காரர் வருவார். அவரும் ஊருக்கு வெளியே நம்பியைப் பார்த்தால் அவனிடம் இரண்டு அல்லது மூன்று கடிதங்களைக் கொடுத்துவிட்டு ஊருக்குள் வராமலேயே போய் விடுவார். அந்தக் கடிதங்களை நம்பி மாலையில் மாடுகளைக் கட்ட வரும்போது உரியவர்களிடம் சேர்த்து விடுவான்.
அன்றும் அதேபோல தபால்காரர் வந்தார். இரண்டு கடிதம்தான் இருக்கிறது. இதைத் தருவதற்காக ஊருக்குள் வரவேண்டுமா என எண்ணி அதை வழக்கம்போல நம்பியிடம் கொடுத்துச் சென்றார். வெகு நேரம் கழித்து அந்தக் கடிதங்களைப் பார்த்தான் நம்பி. இப்போது நம்பிக்குத்தான் படிக்கத் தெரியுமே. அதனால் ஆர்வம் அவனை அந்தக் கடிதங்களைப் படிக்கத் தூண்டியது. மெதுவாகப் படிக்கத் தொடங்கினான்.
அந்த கிராமத்தின் தலைவர் பெரியசாமி. அவரது நண்பர் சுந்தரம் பட்டணத்தில் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர். அவர்தான் பெரியசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார். வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு
அந்த ஊருக்கு அரசாங்க அதிகாரி வரப்போவதாக எழுதியிருந்தார். கடிதம் வந்து சேர்ந்ததும் வெள்ளிக்கிழமை.
அந்தக் கடிதம் உடனே கிராம அதிகாரியின் கைக்குப் போய்ச் சேரவேண்டுமே என முடிவு செய்தான் நம்பி.
உடனே தான் பாட்டி வேலை செய்யும் இடத்திற்குப் போனான். "பாட்டி, மாடுகளைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொள். நான் இந்தக்கடிதாசியை நம்ம தலைவரய்யா கிட்டே குடுத்துட்டு வரேன்."என்றபடியே ஓடினான்.
கடிதத்தைப் படித்த பெரியசாமி உடனே அதிகாரியை வரவேற்க ஆவன செய்ய உத்திரவு பிறப்பித்தார். அன்று மாலை தலைவரை நல்ல முறையில் வரவேற்று உபசரித்தார் அதிகாரி மிகவும் மகிழ்ந்து அந்த கிராமத்திற்கு என்ன வசதிகள் தேவை என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றக் கட்டளையிட்டார்.
இரவு நம்பியும் பாட்டியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு வாயிலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. "யாரது?" எனக்கேட்டவாறே வெளியே வந்தனர் பாட்டியும் பேரனும்.அங்கே கிராமத் தலைவர் பெரியசாமியும் சில பெரியவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் வேலைக்காரன் ஒரு தட்டில் நல்ல புதிய உடை
களும் இனிப்புகளும் பழங்களுடன் ஐந்நூறு ரூபாய் பணமும் வைத்து பாட்டியிடம் கொடுத்தனர்.
பாட்டி திகைத்தாள். எனக்கு என்ன மரியாதை ஏன் இந்த மரியாதை? அவளது திகைப்பைப் பார்த்து புன்னகை புரிந்த பெரியசாமி கூறினார்."பாட்டிம்மா! உங்க பேரன் காலையிலேயே கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்ததாலேதான் அதிகாரியை நன்கு உபசரிக்க முடிந்தது. நானும் வெளியூருக்குப் போவதைத் தள்ளிப் போட முடிஞ்சது.நம்ம ஊருக்கும் நல்லது நடந்திருக்கு. இத்தனைக்கும் காரணம் நம்பி கடிதத்தை சரியான நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தது தானே. அதனாலே இந்தப்பரிசை நாங்க எல்லாருமா சேர்ந்து அவனுக்குக் கொடுக்கிறோம்."
"இது ஒரு பெரிய விஷயமாங்கய்யா? அவன் எப்பவும் போல கடிதாசி கொடுத்திருக்கிறான். இதுக்குப்போயி...."
என்று நீட்டினாள்.
பெரியசாமி நம்பியைப் பார்த்துக் கேட்டார்."நம்பி!,இந்தக் கடிதம் மிக முக்கியமானது அப்பிடின்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது?"
"அய்யா! என்னை மன்னிச்சுடுங்க. நாந்தான் உங்களுக்கு வந்த அந்தக் கடிதத்தைப் படித்தேன். அதன் அவசரத்தைப் புரிந்து கொண்டு ஓடிவந்து கொடுத்துவிட்டு மாடுகளைப் பார்த்துக்கொள்ள மீண்டும் வயலுக்கு வந்துவிட்டேன்"
"உனக்குத்தான் படிக்கத்தேரியாதே? எப்படிப் படித்தாய்?"
நம்பி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் கல்வி கற்ற முறையைச் சொன்னபோது பெரியசாமி கண் கலங்கினார். இவ்வளவு ஆர்வமுள்ள சிறுவனை முறையாகப் படிக்கவைக்க முடிவு செய்தார். அதை பாட்டியிடம் சொல்ல அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அதைவிட நம்பி மிகவும் மகிழ்ந்தான்.
மறுநாள் முதல் நம்பி மாடு மேய்க்கப் போகவேண்டாம். இனி அவன் பள்ளிக்குச் செல்லட்டும் என பெரியசாமி கூறிவிட்டுச் சென்றார்.
பாட்டி தான் பேரனின் ஆசை நிறைவேறிற்று என மகிழ்ந்ததோடு நம்பியிடம் "உன் முயற்சி உன்னை உயர்த்திவிட்டது." என்றாள்.
இதைத்தான் பாட்டி "முயற்சி திருவினை ஆக்கும் " அப்படின்னு வாத்தியார் ஒருநாள் சொன்னார். என்று சொல்லிச் சிரித்தான்.
பாட்டியும் தன் பேரன் அப்போதே பெரிய படிப்புப் படித்து விட்டதுபோல மகிழ்ந்தாள். முயற்சி நமக்கு எல்லா வெற்றிகளையும் தரும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.
லேபிள்கள்:
கதை,
கல்வி,
சுட்டி கதை,
முயற்சி,
வெற்றி
புதன், 28 அக்டோபர், 2009
டில்லி அரசரை வென்ற கதை
ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.
கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.
டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.
ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.
" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.
" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?
எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்"
"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்
பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"
பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"
என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.
" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?
தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."
"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..
வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.
கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.
டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.
ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.
" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.
" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?
எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்"
"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்
பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"
பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"
என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.
" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?
தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."
"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..
வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.
லேபிள்கள்:
சுட்டி கதை,
தெனாலி ராமன்,
வெற்றி
திங்கள், 19 அக்டோபர், 2009
அதியமானின் நட்பு
கடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்ற ஊரில் வாழ்ந்திருந்து பின்னர் சேர நாட்டில் குடி ஏறியவனாக இருத்தல் வேண்டும். அதனால் அதிகமான் எனவும் வழங்கப்பட்டான் எனவும் கூறுவர். இம்மன்னனின் தலைநகரம் 'தகடூர்'. இது தற்போது தர்மபுரி என வழங்கப்படுகின்றது. ஒளவையார் இம்மன்னனைப் பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் மூலம் இவனது கோடை, வீரம் வள்ளல்தன்மையினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பல வரலாற்றுச் செய்தியினையும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு முறை தொண்டைமான் என்னும் மன்னன் அதியனுடன் போருக்குத் தயாரானான். அதியன் அமைதியை விரும்பினான். அதியனுக்காக ஒளவையார் தூது சென்றார். ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கலங்களைக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டான் அவனது கர்வத்தை ஒடுக்கவும் அதியனின் வீரத்தைத் தெரிவிக்கவும் பாடல் ஒன்றைப் பாடினார் ஒளவையார்.
'இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து கடியுடை வியனகரவ்வே, அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
கொல்துறைக் குற்றிலமாதோ '.............................. .......................' இப்பாடல் மூலமாக தொண்டைமானின் படைக் கலங்கள் போர்க்களத்தைப் பாராததால் புதியதாக நெய்யணிந்து மாலை சூட்டிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதியனின் படைக் கலங்களோ எப்போதும் போர்க் களத்திலேயே இருந்து பகைவரைக் குத்திக் கிழிப்பதால் முனை முரிந்து
கொல்லன் உலைக் களத்திலே கிடக்கின்றன.' என்று பாடியதைக் கேட்ட தொண்டைமான் தன்னைப் புகழ்வது போலப் பழித்தும் அதியனைப் பழிப்பது போலப் புகழ்ந்தும் பாடியதைப் புரிந்து கொண்டு போரை நிறுத்தி
சமாதானம் செய்து கொண்டான்..
மற்றொருமுறை அதியனுக்குத் திரை செலுத்தாதவரைத் தேடிச் சென்று அதியனின் வாள் திறம் வேலின் உறுதி யானைப் படையின் வீரம் பற்றி எடுத்துக் கூறி அவர்களைத் திறை செலுத்தும்படி செய்தார். பின்னர் மலாடர் கோமானுடன்போரிட்டு வென்ற செய்தியைப் புகழ்ந்து பாடி மகிழ்ந்தார். இவ்வாறு அதியன் மீது கொண்ட அன்பால் அவன் மீது பலபாடல்களைப் பாடி மகிழ்ந்த ஒளவையார் ஒரு முறை அதியனைக் காணச் சென்றார். புலவர்களின் வழக்கப்படி பரிசிலை நாடிச் சென்றார். பல நாட்கள் அதியனின் அரண்மனையில் விருந்தினராய் இருந்தார்.
அதியன் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினான். ஒளவையார் மீது கொண்ட பேரன்பால் பரிசில் கொடுத்து விட்டால் அவர் தன்னைப் பிரிந்து சென்று விடுவார் என்று எண்ணியே காலம் தாழ்த்தினான். ஒளவையார் 'ஒரு நாள் பழகினாலும் பலநாள் பழகினாலும் முதல் நாள் போலவே என்றும் அன்பு செலுத்துபவன் அதியன். அவன் பரிசில் தராவிடினும் யானையின் கொம்பிடை வைத்த உணவு எப்படி யானைக்குத் தப்பாதோ அதுபோலத் தப்பாமல் அவனது பரிசில் நமக்குக் கிட்டும். மனமே வருந்தாதே. அவன் வாழ்க' என வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார். இதனைக் கேள்வியுற்ற அதியன் ஓடோடி வந்து ஒளவையாரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பரிசிலைக் கொடுத்தான். இப்பாடல் மூலமாக புலவர்கள் ஒரு இடத்தில் தங்காதவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஒளவையார் மீது அதியன் கொண்டுள்ள அன்பையும் இந்நிகழ்ச்சி காட்டுகிறது. அதியமான் ஒளவையாரிடம் கொண்ட அன்பினை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுதான் நெல்லிக்கனி அளித்த செயல். அதியன் மிகவும் பாடுபட்டுப் பெற்ற நெல்லிக்கனி. அதனை உண்டவர் நீண்ட நாள் வாழ்வார்கள் என்னும் சிறப்பினைப் பெற்றது அக்கனி. அத்தகு கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குக் கொடுத்தான் அதியன்.
ஆதலால் அக்கொடையை நினைத்து ஒளவையார் நீ சிவ பெருமானைப் போல வாழ்வாயாக என வாழ்த்தினார். தன்னைப் போல மன்னர் பலர் தோன்றுவர். ஆனால் ஒளவையாரைப் போலப் புலவர்கள் சிலரே தோன்றுவர் எனவே அவர் நீண்ட நாள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒளவையாருக்கு இக்கனியைக் கொடுத்தான் அதியன். அத்துடன் அக்கனியின் சிறப்புக்களை மறைத்து ஒளவையார் அக்கனியினை உண்ட பிறகே அதன் சிறப்புக்களை பற்றிக் கூறினான் .எனவே அவனது அன்புள்ளம் புலனாகிறது அதியனின் வீரத்தை முதலில் கூறிப் பின் வாழ்த்துகிறார்.அப்பாடல்,
'............................. ...........................
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொனனிலைப்
பெருமழை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.' என்ற பாடல் அதியமான் ஒளவையார் மீது கொண்ட நட்பையும் அன்பையும் புலப்படுத்துகிறது.
ஒரு முறை தொண்டைமான் என்னும் மன்னன் அதியனுடன் போருக்குத் தயாரானான். அதியன் அமைதியை விரும்பினான். அதியனுக்காக ஒளவையார் தூது சென்றார். ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கலங்களைக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டான் அவனது கர்வத்தை ஒடுக்கவும் அதியனின் வீரத்தைத் தெரிவிக்கவும் பாடல் ஒன்றைப் பாடினார் ஒளவையார்.
'இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரழ் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து கடியுடை வியனகரவ்வே, அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து
கொல்துறைக் குற்றிலமாதோ '..............................
கொல்லன் உலைக் களத்திலே கிடக்கின்றன.' என்று பாடியதைக் கேட்ட தொண்டைமான் தன்னைப் புகழ்வது போலப் பழித்தும் அதியனைப் பழிப்பது போலப் புகழ்ந்தும் பாடியதைப் புரிந்து கொண்டு போரை நிறுத்தி
சமாதானம் செய்து கொண்டான்..
மற்றொருமுறை அதியனுக்குத் திரை செலுத்தாதவரைத் தேடிச் சென்று அதியனின் வாள் திறம் வேலின் உறுதி யானைப் படையின் வீரம் பற்றி எடுத்துக் கூறி அவர்களைத் திறை செலுத்தும்படி செய்தார். பின்னர் மலாடர் கோமானுடன்போரிட்டு வென்ற செய்தியைப் புகழ்ந்து பாடி மகிழ்ந்தார். இவ்வாறு அதியன் மீது கொண்ட அன்பால் அவன் மீது பலபாடல்களைப் பாடி மகிழ்ந்த ஒளவையார் ஒரு முறை அதியனைக் காணச் சென்றார். புலவர்களின் வழக்கப்படி பரிசிலை நாடிச் சென்றார். பல நாட்கள் அதியனின் அரண்மனையில் விருந்தினராய் இருந்தார்.
அதியன் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினான். ஒளவையார் மீது கொண்ட பேரன்பால் பரிசில் கொடுத்து விட்டால் அவர் தன்னைப் பிரிந்து சென்று விடுவார் என்று எண்ணியே காலம் தாழ்த்தினான். ஒளவையார் 'ஒரு நாள் பழகினாலும் பலநாள் பழகினாலும் முதல் நாள் போலவே என்றும் அன்பு செலுத்துபவன் அதியன். அவன் பரிசில் தராவிடினும் யானையின் கொம்பிடை வைத்த உணவு எப்படி யானைக்குத் தப்பாதோ அதுபோலத் தப்பாமல் அவனது பரிசில் நமக்குக் கிட்டும். மனமே வருந்தாதே. அவன் வாழ்க' என வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார். இதனைக் கேள்வியுற்ற அதியன் ஓடோடி வந்து ஒளவையாரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பரிசிலைக் கொடுத்தான். இப்பாடல் மூலமாக புலவர்கள் ஒரு இடத்தில் தங்காதவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஒளவையார் மீது அதியன் கொண்டுள்ள அன்பையும் இந்நிகழ்ச்சி காட்டுகிறது. அதியமான் ஒளவையாரிடம் கொண்ட அன்பினை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுதான் நெல்லிக்கனி அளித்த செயல். அதியன் மிகவும் பாடுபட்டுப் பெற்ற நெல்லிக்கனி. அதனை உண்டவர் நீண்ட நாள் வாழ்வார்கள் என்னும் சிறப்பினைப் பெற்றது அக்கனி. அத்தகு கனியைத் தான் உண்ணாது ஒளவைக்குக் கொடுத்தான் அதியன்.
ஆதலால் அக்கொடையை நினைத்து ஒளவையார் நீ சிவ பெருமானைப் போல வாழ்வாயாக என வாழ்த்தினார். தன்னைப் போல மன்னர் பலர் தோன்றுவர். ஆனால் ஒளவையாரைப் போலப் புலவர்கள் சிலரே தோன்றுவர் எனவே அவர் நீண்ட நாள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒளவையாருக்கு இக்கனியைக் கொடுத்தான் அதியன். அத்துடன் அக்கனியின் சிறப்புக்களை மறைத்து ஒளவையார் அக்கனியினை உண்ட பிறகே அதன் சிறப்புக்களை பற்றிக் கூறினான் .எனவே அவனது அன்புள்ளம் புலனாகிறது அதியனின் வீரத்தை முதலில் கூறிப் பின் வாழ்த்துகிறார்.அப்பாடல்,
'.............................
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொனனிலைப்
பெருமழை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.' என்ற பாடல் அதியமான் ஒளவையார் மீது கொண்ட நட்பையும் அன்பையும் புலப்படுத்துகிறது.
லேபிள்கள்:
அறிவு,
அன்பு,
கதை,
சுட்டி கதை,
நட்பு
வியாழன், 8 அக்டோபர், 2009
நல்லோர் சேர்க்கை நலம் தரும்
மாலை நேரம் இருட்டிவிட்டது.மழைக்காலம் வேறு. குளிர் காற்று அடிக்கத் தொடங்கிவிட்டது. சோமுவின் பாட்டி சோமுவின் வரவிற்காகக் காத்திருந்தார்.நன்றாக இருட்டிய பின்பே சோமு வீடு திரும்பினான். பாட்டி வருத்தத்துடன் பேசியதைக் கூட அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இரவு நேரம் வழக்கம்போல் பாட்டியின் அருகே படுத்துக் கொண்ட சோமு "பாட்டி, கதை சொல் பாட்டி."என்றான்."என் கேள்விக்குப் பதில் சொல். பிறகு நல்ல கதை சொல்கிறேன் " என்றார் பாட்டி. "ம்" என்றான் மெதுவாக."ஏன் இன்று இருட்டிய பிறகு வீட்டிற்கு வந்தாய்?' என்னிடம் அதற்காக எந்த காரணத்தையும் சொல்லவில்லையே! ஏன் "என்றார். சோமு தயங்கியவாறே "பாட்டி, என்வகுப்புப் பையன் புதிதாகச் சேர்ந்தவன் என்னை விளையாட வெகு தூரம் அழைத்துப் போய் விட்டான். நான் வேண்டாமென்றுதான் சொன்னேன்.
அவன் கேட்கவில்லை அதோடு யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிட்டான் பாட்டி" என்றான் மெதுவாக. பாட்டி அவனைத் தடவிக் கொடுத்தார். "சோமு நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் நல்ல பண்பு உடையவர்களா என்று ஆராய்ந்து பார்த்த பிறகு தான் நட்புக் கொள்ளவேண்டும்.""அதனால் மட்டும் என்ன பயன் பாட்டி?" " உனக்கு ஒரு கதை சொல்கிறேன். நல்லோர் சேர்க்கை எத்தனை நல்லது என்று உனக்கே புரியும்." சோமு ஆவலுடன் கதை கேட்கத் தயாரானான். பாட்டி குரலைச் சீர்படுத்திக் கொண்டு சொல்லத் தொடங்கினார்.-- 'ஒருமுறை நாரதர் நாராயணனிடம் ஒரு கேள்வி கேட்டார். நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன் ஏற்படும்? நாராயணன் பதில் சொன்னார். நாரதா! பூவுலகில் அதோ தெரியும் மரத்தடியில் ஒரு பசு சாணமிட்டுள்ளது.
அதில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சென்று இக்கேள்வியைக் கேள். என்று சொல்லி அனுப்பி விட்டார். நாரதனுக்கு சந்தேகம் இருந்தாலும் நாராயணன் சொல்வதால் பூவுலகிற்கு வந்து அந்தப் புழுவைச் சந்தித்தார். ஏ புழுவே! நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன்? புழு நாரதரைத் தன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு தன் உயிரை விட்டுவிட்டது. பதறியபடியே மீண்டும் நாரதர் நாராயணனிடம் வந்தார். இறைவ! அந்தப புழு தன் உயிரை விட்டு விட்டதே! என்றார். புன்னகை புரிந்த நாரணன், சரி, அதோ அந்த மரத்தில் ஒரு கிளி குஞ்சு பொரித்துள்ளது. அந்தக் குஞ்சினிடம் சென்று கேள். என்று நாரதரை அனுப்பி வைத்தார். நாரதர் மீண்டும் பூவுலகம் வந்து கிளியிடம் வந்து நின்றார். கிளியிடம் தன் கேள்வியைக் கேட்டார்.
அதில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சென்று இக்கேள்வியைக் கேள். என்று சொல்லி அனுப்பி விட்டார். நாரதனுக்கு சந்தேகம் இருந்தாலும் நாராயணன் சொல்வதால் பூவுலகிற்கு வந்து அந்தப் புழுவைச் சந்தித்தார். ஏ புழுவே! நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன்? புழு நாரதரைத் தன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு தன் உயிரை விட்டுவிட்டது. பதறியபடியே மீண்டும் நாரதர் நாராயணனிடம் வந்தார். இறைவ! அந்தப புழு தன் உயிரை விட்டு விட்டதே! என்றார். புன்னகை புரிந்த நாரணன், சரி, அதோ அந்த மரத்தில் ஒரு கிளி குஞ்சு பொரித்துள்ளது. அந்தக் குஞ்சினிடம் சென்று கேள். என்று நாரதரை அனுப்பி வைத்தார். நாரதர் மீண்டும் பூவுலகம் வந்து கிளியிடம் வந்து நின்றார். கிளியிடம் தன் கேள்வியைக் கேட்டார்.
புழுவைப் போலவே கிளியும் நாரதரைப் பார்த்து விட்டு தன் உயிரை விட்டு விட்டது. அதைப் பார்த்த நாரதர் நாராயணா! என்று பதறியபடியே வைகுண்டத்தை அடைந்தார். அதே எழில் கொஞ்சும் புன்னகையுடன் பள்ளி கொண்டிருந்த நாராயணன் ஒன்றுமே அறியாதவர் போல் பேசினார். உன் கேள்விக்கு விடை கிடைத்ததா நாரதா? என்றார். சுவாமி நாராயணா! இது என்ன சோதனை! அந்தக் கிளியும் தன் ஜீவனை விட்டு விட்டதே! சரி இப்போது அந்நாட்டு மந்திரியின் வீட்டில் ஒரு பசு கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது. அதனிடம் சென்று கேள். உன் கேள்விக்கு இப்போதாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம். என்றார். நாரதரும் தயங்கியவாறே அந்தப் பசு இருக்குமிடம் தேடி வந்து சேர்ந்தார். புதிதாகப் பிறந்திருந்த அந்தக் கன்று மெதுவாக எழுந்து ஓடத் தொடங்கியிருந்தது. அங்குமிங்கும் ஓடியாடும் அழகிய கன்றினிடம் தன் கேள்வியைத் தயக்கத்துடனே கேட்டார் நாரதர். தன் ஓட்டத்தை நிறுத்தி விட்டு நாரதரைப் பார்த்தது அந்தக் கன்று. உடனே அதன் உயிர் பிரிந்தது. நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் கேள்வியில் ஏதோ பொருள் உள்ளது.
இறைவன் நம்மையும் சோதிக்கிறார் என எண்ணியபடியே மீண்டும் வைகுண்டம் வந்தார். நாராயணனை வணங்கி நின்றார். நாராயணா! இது என்ன சோதனை! இந்தக் கன்றும் உயிர் விட்டுவிட்டதே! என் கேள்விக்கு விடையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இனி நான் யாரிடமும் சென்று இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டேன். என்றார் தலை குனிந்தவாறே. இந்தமுறை உன் கேள்விக்கு விடை கிடைத்து விடும். காசி ராஜனுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். அவனிடம் சென்று இக் கேள்வியைக் கேள். என்றவுடன் நாரதர் அலறி விட்டார். நாராயணா! என்ன சோதனை. காசிராஜன் மகனுக்கு ஏதேனும் ஊரு விளைந்துவிட்டால் அந்த மன்னன் என்னை விட்டு விடுவானா ? என்ன பரீக்ஷை இது சுவாமி? என்று அச்சப்பட்டார். ஆனாலும் இறைவனின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் காசி நகர் நோக்கிச் சென்றார். அங்கு நகரமே கோலாகலமாக இருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மன்னனுக்கு மகன் பிறந்ததில் மன்னன் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாரதர் யார் கண்ணுக்கும் படாதவாறு தன் உருவத்தை மறைத்துக் கொண்டார். நேரே பாலகன் படுத்திருந்த தொட்டில் அருகில் சென்று நின்றார். அவரைக் கண்டவுடன் பிறந்த குழந்தை சிரித்தது. அதன் அருகில் சென்று நின்றார் நாரதர். உங்கள் சந்தேகம் என்ன கேளுங்கள் நாரதரே என்றது குழந்தை. நற்பண்புகளுடன் கூடிய நல்லோரைக் காண்பதனால் என்ன பயன்,சான்றோர் சேர்க்கையால் நாம் அடையும் பயன் யாது? நாரதரே! முதலில் நான் ஒரு புழுவாகப் பிறவி எடுத்திருந்தேன். உங்கள் தரிசனம் கிடைத்தது. உடனே அந்தப் பிறவி எனக்கு நீங்கியது.அடுத்து கிளியாகவும் அதன் பின் பசுங்கன்றாகவும் பிறந்தேன். அப்போதும் தங்களின் தரிசனத்தால் அந்தப் பிறவிகளும் நீங்கப்பெற்றேன். இப்போது அரசன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் பெற்றேன். இப்போதும் தங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளேன்.ஒவ்வொரு முறையும் சான்றோராகிய தங்களின் தரிசனத்தால் எனது பிறவி உயர்ந்து கொண்டே சென்று இன்று மன்னன் மகனாகப் பிறக்கும் தகுதியை அடைந்துள்ளேன். இப்பிறவியும் நீங்கி இறைவனடி சேரும் பெரும் பேறு கிட்டிவிட்டது. தங்களுக்கு என் நன்றி. வருகிறேன் நாரதரே! என்றபடியே அக்குழந்தையும் கண்களை மூடிக்கொண்டது. நாரதர் நேரே நாராயணனிடம் வந்து சேர்ந்தார்.நாராயணா! சான்றோர் சேர்க்கை நன்மையையும் உயர்வையும் தரும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். என்றார்.'" அதனால்தான் நல்லவர்களோடு சேர்ந்தால் நமக்கு நன்மை கிட்டும் என்று சொன்னேன்.என்றார் பாட்டி.
சோமுவும் இன்று எங்கள் ஆசிரியர் கூட செய்யுளில் இதைத்தான் சொன்னார்கள் பாட்டி.என்றான். அப்படியா? என்ன அது? சொல் பார்ப்போம்.
"நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று."
அழகாக சோமு சொல்லிய பாடலைக்கேட்டு பாட்டி மகிழ்ந்தாள்.சோமு எப்போதும் ஒருவரை நல்லவன் என்று தெரிந்து கொண்ட பிறகு நட்புக்கொள். தெரிந்ததா?சோமுவும் மகிழ்ச்சியுடன் படுத்துக் கொண்டான்.
"நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று."
அழகாக சோமு சொல்லிய பாடலைக்கேட்டு பாட்டி மகிழ்ந்தாள்.சோமு எப்போதும் ஒருவரை நல்லவன் என்று தெரிந்து கொண்ட பிறகு நட்புக்கொள். தெரிந்ததா?சோமுவும் மகிழ்ச்சியுடன் படுத்துக் கொண்டான்.
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
கபிலரின் நட்பு
பாண்டிய நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது மதுரை மாநகர். இந்நகரின் கிழக்குப் பகுதியில் உள்ளது வாதவூர் என்னும் சிற்றூர். இச்சித்ரூரில் பிறந்தவர் தான் கபிலர் என்னும் செவி வழிச் செய்தி நிலவுகின்றது. 'புலனழுக்கற்ற அந்தணாளன் ' எனச் சங்கத்துச் சான்றோரால் பாராட்டப் பெற்றவர்.
வாதவூர் என்பது தென்பறம்பு நாட்டைச் சார்ந்தது. பறம்பு நாட்டை வேள்பாரி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.வேள்பாரியின் பால் மாறாத அன்பு கொண்ட கபிலர் பாரியின் உயிர் நண்பனாக அவனுடனேயே வாழ்ந்து வந்தார்.அன்பும் பண்பும் கொண்ட அந்தணராகிய கபிலர் பெரும் புலமை பெற்றவர்.பாரியின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தார்.செந்தமிழ்ப் பாக்கள் இயற்றும் சிறப்பு காரணமாக வேந்தர் பலரையும் இவர் சென்று கண்டு பரிசில் பெறுவதும் உண்டு.
ஒருமுறை சேர நாட்டை நாடிச் சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்டவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன்.அவனைச் செந்தமிழால் சிறப்புச் செய்தார் கபிலர்.அவரது பாடலின் சிறப்பைக் கேட்டு வியந்த மன்னன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பொன் கொடுத்ததுடன் "நன்றா" என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட இடமெல்லாம் புலவருக்குக் கொடுத்தான். பிற்காலத்தில் இவ்விடம் " நணா" என மருவியது. இதனைச் சூழ்ந்த பகுதிகள் கபிலருக்குக் கொடுக்கப் பட்டமைக்குச் சான்றாக அங்கே கபிலக் குறிஞ்சி என்ற ஊர் இன்னும் உள்ளது.
கபிலரது பாடல்களில் குறிஞ்சி நில வர்ணனைகளே மிகுந்து காணப் படுகின்றன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் . மலையும் அருவியும், சுனையும் தேனடையும், பலாவும் இவர் பாடல்களில் அழகு சேர்ப்பன. இவ்வாறு குறிஞ்சி நிலத்தைப் பலபடப் பாடிய திறத்தால் "குறிஞ்சிக்குக் கபிலன்" என்ற பெயரையும் பெற்றார்.
ஆரிய நாட்டு மன்னன் பிரகத்தன் என்பான் சேர மன்னன் செல்வக் கடுங்கோவின் சிறந்த நண்பன். இவனது துணையால் கபிலரின் நட்பைப் பெற்றான். தமிழில் காணப்படும் அகப்பொருள் நலத்தை அறிய விரும்பிய பிரகத்தன் அதனை விளக்கிக் கூறுமாறு கபிலரைக் கேட்டான். அவனுக்காக கபிலர் எழுதிய நூல் "குறிஞ்சிப் பாட்டு" எனப்பட்டது. இந்த நெடும் பாட்டு தமிழகத்தின் ஒழுக்கத்தின் மாண்பினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
ஒருமுறை காட்டின் வழியே நடந்து செல்லும் கபிலர் வழியில் ஆண் பன்றி நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார்.அவரது கற்பனை விரிவடைந்து பாடலாக வருகிறது. அப்பாடலின் கருத்து, " தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்திருக்கிறது. அவற்றை வேட்டுவரும் அவரது நாய்களும் அணுகாதவாறு வெருட்டி ஓட்டியது ஆண் பன்றி. பின்னர் தனது பெண் பன்றியையும் அதன் குட்டிகளையும் வேறிடத்தில் சேர்த்து விட்டுக் காவலாக வழியிலேயே நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த வேட்டுவன் " படைமறவரோடு அஞ்சாது போரிடும் தன் தலைவனைப் போல் அதன் செயல் இருப்பது கண்டு அதனைக் கொல்லாது விட்டுச்சென்றான்." என்ற கருத்தமைந்த பாடல் இவரது குறிஞ்சி பாடும் திறமைக்குச் சான்றாகும்.இவரது உயிர் நண்பன் வேள்பாரி மூவேந்தரின் வஞ்சனையால் இறந்து பட்டான். அவன் பிரிவுக்குப் பெரிதும் வருந்திய கபிலர் பாரியுடன் தானும் உயிர் விடத் துணிந்தார்.ஆனால் பாரியின் வேண்டுகோள் காரணமாக அச்செயலைக் கபிலர் செய்யாது விடுத்தார். பாரியின் மக்கள் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பல மன்னர்களையும் நாடிச் சென்றார். மூவேந்தரின் பகைக்கு அஞ்சியோ யாது காரணம் பற்ற்யோ எந்த அரசரும் அம மகளிரை மணந்து கொள்ள முன் வரவில்லை. கபிலர் எத்துணை முயன்றும் அவரது முயற்சி பயன் தரவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலைநகர் திருக்கோவலூரை அடைந்தார்.அங்கே வாழ்ந்த பார்ப்பனர் ஒருவரிடம் பாரியின் மக்களை அடைக்கலப் படுத்தினார்.பார்ப்பனரிடத்திலுள்ள பொருட்கும் உயிர்கட்கும் எவ்விதத் தீங்கும் செய்தலாகாது என்பது அந்நாளைய முறை.அத்துடன் பெண் கேட்டு அதுவே காரணமாகப் போரிடுவதும் இல்லை. இதனை நன்கறிந்திருந்த கபிலர் பாரியின் மக்களை பார்ப்பனரிடம் அடைக்கலப் படுத்தித் தன் பெருஞ்சுமையை விளக்கிக் கொண்டார்.
உயிர் நண்பன் பாரியின்றி இந்நிலவுலகத்தில் வாழ்வதையே பெருஞ்சுமையாகக கருதினார் கபிலர். பாரியின்றி வாழும் கபிலர் உயிரற்ற உடல்போல் உணர்ந்தார்.இம்மையில் பிரிந்து விட்ட பாரியை மறுமையில் இணைந்து வாழ விருப்பம் கொண்டவரானார்.தென் பெண்ணை ஆற்றுக் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் கபிலர். அப்போது அவர் பாடிய பாடலில் பாரியின் மறைவுக்கு அவர் வருந்திய வருத்தமும் நண்பனின் பிரிவால் அவர் பட்ட துயரமும் நன்கு புலனாகும்." மாவண் பாரி ! என்னை நீ பலகாலம் பேணிக் காத்தாய். அது போழ்து ஏன் உயிர் நண்பனாக இருந்தாய்.ஆனால் நீ இவ்வுலகை விட்டுப் பிரியுங்கால் என்னை உன்னுடன் வரவிடாது "இங்கேயே இருந்து பின் வருக" என்று கூறிச் சென்று விட்டாய். இனியும் உன்னைப் பிரிந்து என்னால் தனித்து வாழ இயலாது. இப்பிறவியில் நம்மை நட்பால் சேர்ந்து வாழச் செய்த நல்லூழ் மறுமையிலும் உன்னுடன் வாழும் வாழ்வை ஈவதாக!" என்று பாடி மறைந்தார்.இன்றும் கோவலூர் அருகே கபிலக்கல் ஒன்று இருக்கிறது.அது கபிலரின் வடக்கிருந்த செய்தியைக் கூறிக்கொண்டிருக்கிறது. நட்பு என்றதும் வேள்பாரி கபிலரின் நட்பு நமக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் கபிலர். இவரது குறிஞ்சிப் பாட்டு நூல் தவிர ஐங்குறுநூறு என்னும் நூலில் குறிஞ்சித்திணை பற்றிய நூறு பாடல்கள் பாடியுள்ளார்.
இவையேயன்றி அகம் புறம் பதிற்றுப் பத்து கலித் தொகை குறுந்தொகை நற்றிணை பத்துப்பாட்டு நூல்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.புலவர் வரிசையில் கபிலருக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.
வாதவூர் என்பது தென்பறம்பு நாட்டைச் சார்ந்தது. பறம்பு நாட்டை வேள்பாரி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.வேள்பாரியின் பால் மாறாத அன்பு கொண்ட கபிலர் பாரியின் உயிர் நண்பனாக அவனுடனேயே வாழ்ந்து வந்தார்.அன்பும் பண்பும் கொண்ட அந்தணராகிய கபிலர் பெரும் புலமை பெற்றவர்.பாரியின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தார்.செந்தமிழ்ப் பாக்கள் இயற்றும் சிறப்பு காரணமாக வேந்தர் பலரையும் இவர் சென்று கண்டு பரிசில் பெறுவதும் உண்டு.
ஒருமுறை சேர நாட்டை நாடிச் சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்டவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன்.அவனைச் செந்தமிழால் சிறப்புச் செய்தார் கபிலர்.அவரது பாடலின் சிறப்பைக் கேட்டு வியந்த மன்னன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பொன் கொடுத்ததுடன் "நன்றா" என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட இடமெல்லாம் புலவருக்குக் கொடுத்தான். பிற்காலத்தில் இவ்விடம் " நணா" என மருவியது. இதனைச் சூழ்ந்த பகுதிகள் கபிலருக்குக் கொடுக்கப் பட்டமைக்குச் சான்றாக அங்கே கபிலக் குறிஞ்சி என்ற ஊர் இன்னும் உள்ளது.
கபிலரது பாடல்களில் குறிஞ்சி நில வர்ணனைகளே மிகுந்து காணப் படுகின்றன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் . மலையும் அருவியும், சுனையும் தேனடையும், பலாவும் இவர் பாடல்களில் அழகு சேர்ப்பன. இவ்வாறு குறிஞ்சி நிலத்தைப் பலபடப் பாடிய திறத்தால் "குறிஞ்சிக்குக் கபிலன்" என்ற பெயரையும் பெற்றார்.
ஆரிய நாட்டு மன்னன் பிரகத்தன் என்பான் சேர மன்னன் செல்வக் கடுங்கோவின் சிறந்த நண்பன். இவனது துணையால் கபிலரின் நட்பைப் பெற்றான். தமிழில் காணப்படும் அகப்பொருள் நலத்தை அறிய விரும்பிய பிரகத்தன் அதனை விளக்கிக் கூறுமாறு கபிலரைக் கேட்டான். அவனுக்காக கபிலர் எழுதிய நூல் "குறிஞ்சிப் பாட்டு" எனப்பட்டது. இந்த நெடும் பாட்டு தமிழகத்தின் ஒழுக்கத்தின் மாண்பினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
ஒருமுறை காட்டின் வழியே நடந்து செல்லும் கபிலர் வழியில் ஆண் பன்றி நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார்.அவரது கற்பனை விரிவடைந்து பாடலாக வருகிறது. அப்பாடலின் கருத்து, " தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்திருக்கிறது. அவற்றை வேட்டுவரும் அவரது நாய்களும் அணுகாதவாறு வெருட்டி ஓட்டியது ஆண் பன்றி. பின்னர் தனது பெண் பன்றியையும் அதன் குட்டிகளையும் வேறிடத்தில் சேர்த்து விட்டுக் காவலாக வழியிலேயே நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த வேட்டுவன் " படைமறவரோடு அஞ்சாது போரிடும் தன் தலைவனைப் போல் அதன் செயல் இருப்பது கண்டு அதனைக் கொல்லாது விட்டுச்சென்றான்." என்ற கருத்தமைந்த பாடல் இவரது குறிஞ்சி பாடும் திறமைக்குச் சான்றாகும்.இவரது உயிர் நண்பன் வேள்பாரி மூவேந்தரின் வஞ்சனையால் இறந்து பட்டான். அவன் பிரிவுக்குப் பெரிதும் வருந்திய கபிலர் பாரியுடன் தானும் உயிர் விடத் துணிந்தார்.ஆனால் பாரியின் வேண்டுகோள் காரணமாக அச்செயலைக் கபிலர் செய்யாது விடுத்தார். பாரியின் மக்கள் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பல மன்னர்களையும் நாடிச் சென்றார். மூவேந்தரின் பகைக்கு அஞ்சியோ யாது காரணம் பற்ற்யோ எந்த அரசரும் அம மகளிரை மணந்து கொள்ள முன் வரவில்லை. கபிலர் எத்துணை முயன்றும் அவரது முயற்சி பயன் தரவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலைநகர் திருக்கோவலூரை அடைந்தார்.அங்கே வாழ்ந்த பார்ப்பனர் ஒருவரிடம் பாரியின் மக்களை அடைக்கலப் படுத்தினார்.பார்ப்பனரிடத்திலுள்ள பொருட்கும் உயிர்கட்கும் எவ்விதத் தீங்கும் செய்தலாகாது என்பது அந்நாளைய முறை.அத்துடன் பெண் கேட்டு அதுவே காரணமாகப் போரிடுவதும் இல்லை. இதனை நன்கறிந்திருந்த கபிலர் பாரியின் மக்களை பார்ப்பனரிடம் அடைக்கலப் படுத்தித் தன் பெருஞ்சுமையை விளக்கிக் கொண்டார்.
உயிர் நண்பன் பாரியின்றி இந்நிலவுலகத்தில் வாழ்வதையே பெருஞ்சுமையாகக கருதினார் கபிலர். பாரியின்றி வாழும் கபிலர் உயிரற்ற உடல்போல் உணர்ந்தார்.இம்மையில் பிரிந்து விட்ட பாரியை மறுமையில் இணைந்து வாழ விருப்பம் கொண்டவரானார்.தென் பெண்ணை ஆற்றுக் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் கபிலர். அப்போது அவர் பாடிய பாடலில் பாரியின் மறைவுக்கு அவர் வருந்திய வருத்தமும் நண்பனின் பிரிவால் அவர் பட்ட துயரமும் நன்கு புலனாகும்." மாவண் பாரி ! என்னை நீ பலகாலம் பேணிக் காத்தாய். அது போழ்து ஏன் உயிர் நண்பனாக இருந்தாய்.ஆனால் நீ இவ்வுலகை விட்டுப் பிரியுங்கால் என்னை உன்னுடன் வரவிடாது "இங்கேயே இருந்து பின் வருக" என்று கூறிச் சென்று விட்டாய். இனியும் உன்னைப் பிரிந்து என்னால் தனித்து வாழ இயலாது. இப்பிறவியில் நம்மை நட்பால் சேர்ந்து வாழச் செய்த நல்லூழ் மறுமையிலும் உன்னுடன் வாழும் வாழ்வை ஈவதாக!" என்று பாடி மறைந்தார்.இன்றும் கோவலூர் அருகே கபிலக்கல் ஒன்று இருக்கிறது.அது கபிலரின் வடக்கிருந்த செய்தியைக் கூறிக்கொண்டிருக்கிறது. நட்பு என்றதும் வேள்பாரி கபிலரின் நட்பு நமக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் கபிலர். இவரது குறிஞ்சிப் பாட்டு நூல் தவிர ஐங்குறுநூறு என்னும் நூலில் குறிஞ்சித்திணை பற்றிய நூறு பாடல்கள் பாடியுள்ளார்.
இவையேயன்றி அகம் புறம் பதிற்றுப் பத்து கலித் தொகை குறுந்தொகை நற்றிணை பத்துப்பாட்டு நூல்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.புலவர் வரிசையில் கபிலருக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.
புதன், 26 ஆகஸ்ட், 2009
நல்ல தீர்ப்பு - இரண்டாம் பகுதி
நேரமாகிவிடவே சந்திரன் தானே தனக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு தன்னையும் தயாரித்துக் கொண்டான். குறிப்பிட்ட நேரம் வந்தது.மேடையில் பல மாணவர்கள் தங்கள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். இதோ ஆசிரியர் சந்திரனின் பெயரை அறிவித்துவிட்டார். பேனா ரிப்பேர் செய்பவன்போல வேடம் புனைந்திருந்த சந்திரன் மேடையில் ஏறித் தன் திறமையை வெளிப் படுத்தி நடித்தான்.அடுத்தவன் சரவணன்.
அழகாக உடையணிந்து ரோஜா மலர் ஒன்றைத் தன் சட்டைப் பையில் குத்திக் கொண்டு நேருவாக வேடம் புனைந்தவன் மேடையேறினான். பொறாமையே உருவான சந்திரன் சரவணன் வருவது தெரியாதவன் போல் சட்டெனத் திரும்புவது போல் பாசாங்கு செய்து தயாராகத் திறந்து வைத்திருந்த இங்கி புட்டியை அவன் மீது சாய்த்து விட்டான். ஒரு கணம் திகைத்து நின்றான் சரவணன். தன் மீது சிந்தியிருந்த மையைக் கூர்ந்து நோக்கினான். அதற்குள் ஆசிரியர் அவன் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்.சந்திரன் "சாரி, சரவணா!, தெரியாமல் கொட்டிவிட்டது."என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான்? என்று மகிழ்ச்சி கொண்டது. சரவணன் அருகில் நின்ற ராமுவின் காதில் ஏதோ கூறவே அவன் நீதிபதியாக வந்தவரிடம் ஓடிப் போய்ப் பேசிவிட்டு வந்தான்.
உடனே ஆசிரியர் தலையசைத்து அனுமதித்ததும் சரவணன் மேடை மீது ஏறினான்.பாரத மாதாவாக வேடமணிந்து வந்திருந்த மாணவன் கையிலிருந்த மூவர்ணக் கொடியைத் தன் கையில் ஏந்திக் கொண்ட சரவணன்,மேடை மீது நின்று திருப்பூர் குமாரனாக வீர வசனம் பேசி தடியடி பட்டவனாகக் கையில் கொடியுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். கடைசியில் கொடியைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டே மேடையில் சாய்ந்தான். அவன் திறமையைக் கண்ட மாணவர் கூட்டம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.சற்று நேரத்தில் நீதிபதி எழுந்து நின்று அறிவிக்கத் தொடங்கினார்."மாணவர்களே!உங்கள் திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தோம். யாருக்கு முதல் பரிசு கொடுப்பது என்று திகைக்கும் அளவிற்கு நன்றாக நடித்தீர்கள். பேனா வியாபாரியாக வந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டுமென நாங்கள் முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசியாக வந்த மாணவன் சரவணன் நேருவாக நடிக்க வந்தவன் தன் மீது தவறுதலாக சிகப்பு மை கொட்டிவிட்டதால் திருப்பூர் குமாரனாக நடிக்கப் போவதாகச் சொல்லியனுப்பினான்.
தவறு நேர்ந்து விட்ட போதும் அதற்காகக் கலங்காமல் அதையே மாற்றித் தன் திறமையை வேறு வழியில் வெளியிட்ட அச் சிறுவனின் சமயோசித அறிவைப் பாராட்டுவதோடு முதல் பரிசையும் அவனுக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம். சரவணனுக்கு முதல் பரிசும் சந்திரனுக்கு இரண்டாம் பரிசும் அளிக்கிறோம்."என்று கூறிய போது அனைவரும் சரியான தீர்ப்பு எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.தன் தவறுக்கு தண்டனை கிடைத்ததை உணர்ந்து கொண்ட சந்திரன் சரவணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அன்று முதல் பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.
அழகாக உடையணிந்து ரோஜா மலர் ஒன்றைத் தன் சட்டைப் பையில் குத்திக் கொண்டு நேருவாக வேடம் புனைந்தவன் மேடையேறினான். பொறாமையே உருவான சந்திரன் சரவணன் வருவது தெரியாதவன் போல் சட்டெனத் திரும்புவது போல் பாசாங்கு செய்து தயாராகத் திறந்து வைத்திருந்த இங்கி புட்டியை அவன் மீது சாய்த்து விட்டான். ஒரு கணம் திகைத்து நின்றான் சரவணன். தன் மீது சிந்தியிருந்த மையைக் கூர்ந்து நோக்கினான். அதற்குள் ஆசிரியர் அவன் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்.சந்திரன் "சாரி, சரவணா!, தெரியாமல் கொட்டிவிட்டது."என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான்? என்று மகிழ்ச்சி கொண்டது. சரவணன் அருகில் நின்ற ராமுவின் காதில் ஏதோ கூறவே அவன் நீதிபதியாக வந்தவரிடம் ஓடிப் போய்ப் பேசிவிட்டு வந்தான்.
உடனே ஆசிரியர் தலையசைத்து அனுமதித்ததும் சரவணன் மேடை மீது ஏறினான்.பாரத மாதாவாக வேடமணிந்து வந்திருந்த மாணவன் கையிலிருந்த மூவர்ணக் கொடியைத் தன் கையில் ஏந்திக் கொண்ட சரவணன்,மேடை மீது நின்று திருப்பூர் குமாரனாக வீர வசனம் பேசி தடியடி பட்டவனாகக் கையில் கொடியுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். கடைசியில் கொடியைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டே மேடையில் சாய்ந்தான். அவன் திறமையைக் கண்ட மாணவர் கூட்டம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.சற்று நேரத்தில் நீதிபதி எழுந்து நின்று அறிவிக்கத் தொடங்கினார்."மாணவர்களே!உங்கள் திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தோம். யாருக்கு முதல் பரிசு கொடுப்பது என்று திகைக்கும் அளவிற்கு நன்றாக நடித்தீர்கள். பேனா வியாபாரியாக வந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டுமென நாங்கள் முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசியாக வந்த மாணவன் சரவணன் நேருவாக நடிக்க வந்தவன் தன் மீது தவறுதலாக சிகப்பு மை கொட்டிவிட்டதால் திருப்பூர் குமாரனாக நடிக்கப் போவதாகச் சொல்லியனுப்பினான்.
தவறு நேர்ந்து விட்ட போதும் அதற்காகக் கலங்காமல் அதையே மாற்றித் தன் திறமையை வேறு வழியில் வெளியிட்ட அச் சிறுவனின் சமயோசித அறிவைப் பாராட்டுவதோடு முதல் பரிசையும் அவனுக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம். சரவணனுக்கு முதல் பரிசும் சந்திரனுக்கு இரண்டாம் பரிசும் அளிக்கிறோம்."என்று கூறிய போது அனைவரும் சரியான தீர்ப்பு எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.தன் தவறுக்கு தண்டனை கிடைத்ததை உணர்ந்து கொண்ட சந்திரன் சரவணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அன்று முதல் பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.
லேபிள்கள்:
கதை,
சுட்டி கதை,
தீர்ப்பு,
பரிசு,
வெற்றி
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009
நல்ல தீர்ப்பு - முதல் பகுதி
சரவணன் மிகவும் கெட்டிக்காரன். நன்றாகப் படிப்பவன். படிப்பில் மட்டுமல்லாமல் நாடகம் இசைப் போட்டி, பேச்சுப் போட்டி,போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறான். அந்த ஆண்டும் எல்லாப் போட்டிகளையும் வைப்பதற்காக தமிழாசிரியரும் பிற ஆசிரியர்களும் ஈடுபட்டிருந்தனர் . சரவணனின் வகுப்பில் சந்திரன் என்று ஒரு மாணவன் படித்து வந்தான்.அவன் எப்போதும் பெருமை பேசிக்கொண்டே இருப்பான். அதனால் அவனை அனைவரும் சவடால் சந்திரன் என்றே அழைப்பார்கள்.வழக்கம்போல் தன் சவடால் வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தான் சந்திரன்." இந்த ஆண்டு மாறு வேடப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். வேறு யாராலும் ஜெயிக்க முடியாது.
" என்று கர்வமாகப் பெசிவந்தான். அவன் நண்பர்கள் அதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் .ராமுவுக்கு மட்டும் சந்திரனின் பேச்சு வெறும் சவடாலாகப் பட்டது. "டேய் சந்தர்! வெறும் சவடால் விடாதே! சரவண னை மாறு வேடப் போட்டியிலே யாராலும் ஜெயிக்க முடியாது.""சரவணன் என்னடா! அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா!" " டேய், டேய்! எப்படிடா ஜெயிப்பே?"பலரது குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள அவன் அந்த இடத்துக் கதாநாயகனானான்."அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஜெயிச்ச பிறகு சொல்றேன்." ஏமாற்றமடைந்த மாணவர்கள் கசமுசவென்று பேசியவாறே கலைந்து சென்றனர்.போட்டிகளுக்கான நாளும் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல சரவணன் பலபோட்டிகளில் முதல் பரிசு பெற்றான். மறு நாள் மாறுவேடப்போட்டி என அறிவித்தாய் விட்டது. சவடால் சந்திரன் நிலை கொள்ளாமல் தவித்தான். ஆனால் எப்போதும் முதல் பரிசு வாங்கும் சரவணனோ மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தான். சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரன் பற்களைக் கடித்தான்."இரு, இரு, மாறு வேடப் போட்டியிலே உன்னை மண்ணைக் கவ்வ வைக்கிறேன்." என்று மனதுக்குள் கருவினான். ஆனால் சரவணன் என்ன வேடம் போடப் போகிறான் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தான். அதனால் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்." சரவணா! நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா?""ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்?""ஆமாம் சரவணா! ஆனால் என்ன வேடம் போடறது அப்பிடின்னுதான் யோசிக்கிறேன். நீ என்ன வேடம் போடப் போகிறாய்?" அப்போது ராமு குறுக்கே வந்தான்."டேய் சந்திரா! யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்."சரவணன் மென்மையாகச் சிரித்தான்."ராமு! பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு! நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா! நீயும் நல்ல வேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள். பரிசு உனக்கே கிடைக்க நான் வாழ்த்தறேன்." என்றான் சரவணன்.சவடால் சந்திரனின் மனதில் மெதுவாக ஒரு திட்டம் உருவானது. இப்போது அவன் மனதில் " நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை.
இந்த சரவணன் ஜெயிக்கக் கூடாது" என்ற எண்ணமே நிறைந்திருந்தது.பொழுது புலர்ந்தது. அன்று மாலைதான் மாறுவேடப் போட்டி நடை பெறப் போகிறது. இதுவரை தனக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்த மேக் அப் மேனாகப் பணியாற்றும் சந்திரனின் மாமா வரவில்லை. அவர் வந்து தனக்கு ஒப்பனை செய்வார் என்ற எண்ணத்தில் தான் தன் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இது வரை அவர் வராதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
" என்று கர்வமாகப் பெசிவந்தான். அவன் நண்பர்கள் அதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் .ராமுவுக்கு மட்டும் சந்திரனின் பேச்சு வெறும் சவடாலாகப் பட்டது. "டேய் சந்தர்! வெறும் சவடால் விடாதே! சரவண னை மாறு வேடப் போட்டியிலே யாராலும் ஜெயிக்க முடியாது.""சரவணன் என்னடா! அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா!" " டேய், டேய்! எப்படிடா ஜெயிப்பே?"பலரது குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள அவன் அந்த இடத்துக் கதாநாயகனானான்."அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஜெயிச்ச பிறகு சொல்றேன்." ஏமாற்றமடைந்த மாணவர்கள் கசமுசவென்று பேசியவாறே கலைந்து சென்றனர்.போட்டிகளுக்கான நாளும் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல சரவணன் பலபோட்டிகளில் முதல் பரிசு பெற்றான். மறு நாள் மாறுவேடப்போட்டி என அறிவித்தாய் விட்டது. சவடால் சந்திரன் நிலை கொள்ளாமல் தவித்தான். ஆனால் எப்போதும் முதல் பரிசு வாங்கும் சரவணனோ மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தான். சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரன் பற்களைக் கடித்தான்."இரு, இரு, மாறு வேடப் போட்டியிலே உன்னை மண்ணைக் கவ்வ வைக்கிறேன்." என்று மனதுக்குள் கருவினான். ஆனால் சரவணன் என்ன வேடம் போடப் போகிறான் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தான். அதனால் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்." சரவணா! நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா?""ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்?""ஆமாம் சரவணா! ஆனால் என்ன வேடம் போடறது அப்பிடின்னுதான் யோசிக்கிறேன். நீ என்ன வேடம் போடப் போகிறாய்?" அப்போது ராமு குறுக்கே வந்தான்."டேய் சந்திரா! யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்."சரவணன் மென்மையாகச் சிரித்தான்."ராமு! பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு! நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா! நீயும் நல்ல வேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள். பரிசு உனக்கே கிடைக்க நான் வாழ்த்தறேன்." என்றான் சரவணன்.சவடால் சந்திரனின் மனதில் மெதுவாக ஒரு திட்டம் உருவானது. இப்போது அவன் மனதில் " நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை.
இந்த சரவணன் ஜெயிக்கக் கூடாது" என்ற எண்ணமே நிறைந்திருந்தது.பொழுது புலர்ந்தது. அன்று மாலைதான் மாறுவேடப் போட்டி நடை பெறப் போகிறது. இதுவரை தனக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்த மேக் அப் மேனாகப் பணியாற்றும் சந்திரனின் மாமா வரவில்லை. அவர் வந்து தனக்கு ஒப்பனை செய்வார் என்ற எண்ணத்தில் தான் தன் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இது வரை அவர் வராதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
லேபிள்கள்:
கதை,
சுட்டி கதை,
தீர்ப்பு,
பரிசு,
வெற்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)