ஞாயிறு, 18 அக்டோபர், 2015

குறள்வழிக் கதைகள் 3.கற்றதனால் ஆய பயன்...(தொடர்ச்சி)

. அப்படி அவன் நினைக்கவும் ஒரு
காரணம் இருந்தது.இரண்டு மூன்று முறை ரங்கசாமி பண்ணையார் மேல் கோபத்தைக்
காட்டி "அவன் மனுசனே இல்லை தம்பி. அவனுக்கு நானே சரியான தண்டனை குடுக்கப்
போறேன் பாரு." என்று சொல்வதை விளையாட்டாகவே நினைத்து சிரித்திருக்கிறான்
சரவணன்.இன்று?... ஒருவேளை கணேசனின் மறைவுக்கு இந்த தாத்தாவே காரணமாக
இருப்பாரோ.?இந்தச் செய்தியை யாரிடம் சொல்வது?ஒருவேளை இது தவறான செய்தியாக
இருந்துவிட்டால்நம்மை உண்மையுடன் நேசிக்கும் ரங்கசாமிதாத்தாவின் மனசு
என்ன பாடுபடும்?என்று எண்ணிக் கலங்கியபடியே இருந்தான் சரவணன்.

மூன்றாம்
நாள் காலை ஒரு போலீஸ் வண்டி ஊருக்குள் புகுந்தது.ஊரே திரண்டு வந்து
நின்று வேடிக்கை பார்த்தது.
முதலில் பண்ணையார் சுப்பிரமணி இறங்க அவருடன் அவர் மகன் கணேசு
இறங்கினான்.மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். கணேசுவின் தாய்
ஓடிவந்து மகனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.பின்னாலேயே ரங்கசாமி தாத்தா
இறங்கினார்.அவர்பின் இரண்டு போலீஸ்காரர்களும் ஊரார் சிலரும் இறங்கினர்.
போலீஸ் வண்டியிலிருந்து ரங்கசாமி இறங்கியதைப் பார்த்ததும் ஊர்மக்கள்
அவர்தான் கணேசுவை
எங்கேயோ மறைத்து வைத்திருப்பார். போலீஸ் அதைக் கண்டு பிடித்திருக்கும்
என்றுகசமுசா என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சரவணனுக்குத் தலை சுற்றியது.ரங்கசாமியா இப்படி?.இது
எதையுமே கவனிக்காத ரங்கசாமி தலை குனிந்து வருத்தத்துடன்
நின்றிருந்தார்.அவரிடம் சென்ற பண்ணையார் அவர் தோள் மீது கை வைத்து
அன்போடு வீட்டினுள்ளே அழைத்துச் சென்றார்.இதைப் பார்த்து அனைவரும்
அதிசயித்து நின்றனர்.சரவணனும் திகைத்தான்.அவன் அறிவு ரங்கசாமி எந்த
குற்றமும் செய்திருக்கமாட்டார் என அறிவுறுத்தியது

மெல்ல மெல்ல செய்திகள் வெளிவரத் தொடங்கின.
ரங்கசாமி பெரும் தியாகத்தைச் செய்துள்ளார் என்பது வரை புரிந்துகொண்ட
சரவணன் பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் பள்ளி சென்று விட்டான். மாலை
நேரம்எப்போது வரும் என்று
காத்திருந்தவன்போல்பள்ளிவிட்டதும்பரபரப்புடன்வீடுநோக்கி
ஓடிவந்தான்.அவனுக்கு முன்னால் ரங்கசாமிதாத்தா வீட்டில்
அவனுக்காகக் காத்திருந்தார்.சரவணனைக் கண்டதும்

"தம்பி, வாவா, உனக்காகத்தான் காத்திருக்கேன்.பசியா இருப்பே இந்தா பழம்
சாப்பிடு."என்றவர் தட்டிலிருந்த பழத்தை எடுத்துக் கொடுத்தார்.அவர் அருகே
அமர்ந்து கொண்ட சரவணன் அவரைக் கூர்ந்து பார்த்தான்.

"தாத்தா உங்க முகத்துல சந்தோஷமும் தெரியுது வருத்தமும் தெரியுது.அதோட
கணேசுவோட நீங்க ஏன் போனீங்க,எங்க போனீங்க இந்த விவரமெல்லாம் கேக்கத்தான்
ரொம்ப ஆவலோட காத்திருக்கேன் தாத்தா."

"சொல்றேன் தம்பி உன்கிட்ட விவரம் சொல்லனும்னுதான் நானும் காத்துகிட்டே
இருக்கேன்.ஏன்னா இதுக்கெல்லாம் நீயும் ஒரு காரணமா இருந்திருக்கே."
என்றார் புன்னகையுடன்.

"என்ன?நானா?"திகைத்தான் சரவணன்.

(தொடரும் )
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com ::
http://rukmaniseshasayee.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக