ஞாயிறு, 6 அக்டோபர், 2019

Fwd: மத்வாச்சாரியார்.


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu 5 Jan, 2017, 10:32 PM
Subject: மத்வாச்சாரியார்.
To: <anandanrao@yahoo.com>


                                                              ( காட்சி--1)

 (அழும் குழந்தையை கல்யாணி  மடியில் வைத்துக் கொண்டு சமாதானம் செய்கிறாள்.)

கல்யாணி ;  அழாதேடா குழந்தாய். அம்மா வந்துவிடுவாள். பசிக்கு பால் தருவாள்.அழாதே வாசு.

இரு உனக்கு தின்ன ஏதாவது தருகிறேன்.(குழந்தையைக் கீழே விட்டுவிட்டு உள்ளிருந்து ஒரு பாத்திரத்திலிருந்து வேகவைத்த பயறு கைப்பிடி எடுத்துத் தருகிறாள். அதைக் குழந்தை மடியில் வைத்துத் தின்கிறான். அழுகை நின்றபின் கல்யாணி உள்ளே செல்கிறாள் பயறு தின்ற பின் மீண்டும் பாத்திரத்திலிருந்து பயறை எடுத்துத் தின்கிறான். பின் பாத்திரத்தோடு தின்றுவிட்டு பாத்திரத்தை உருட்டிவிடுகிறான்.)
வேதவதி ; (வந்துகொண்டே)குழந்தாய் வாசு பசிக்கிறதா?ரொம்ப நேரமாகிவிட்டதா, இரு பால் தருகிறேன் வா. குழந்தையைநெருங்கிப் பார்த்து அவன் சிரிப்பதைப் பார்த்து அதிசயத்துடன் நின்றவள் பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து துடிக்கிறாள்.
ஐயோ இதிலிருந்த பயறு என்னவாயிற்று? கல்யாணி! சீக்கிரமாக வா.இதிலிருந்த பயறு என்னவாயிற்று?

கல்யாணி ஓடி வருகிறாள் 
ஐயோ அம்மா தம்பி முழுவதையும் தின்று விட்டானம்மான்ன செய்வேன்.

வேதவதி;குழந்தைக்கு வயறு வலிக்காமல் இருக்கவேண்டுமே அப்பனே அனந்தேஸ்வரா நீதான் துணை.(குழந்தையின் வயிற்றைத் தடவிக்கொடுக்க அவன் சிரித்துக் கொண்டே வெளியே ஓடுகிறான்.)

                                                               (காட்சி--2)

(வேதவதி நீர்தெளித்து இலைபோட்டு பலகையை போட்டுக் காத்திருக்கிறாள்.அங்கு  வாசு வருகிறான்)

வாசு;அம்மா, எனக்குப் பசிக்கிறது அப்பா எங்கேயம்மா?
வேதவதி ; குழந்தாய். உணவு தயாராக இருக்கிறது போய்  அப்பாவை அழைத்து வா. சாப்பிடலாம் .

வாசு ;இதோ வருகிறேன் அம்மா.(அப்பா என அழைத்தவாறே ஓடுகிறான்.

                                                                   

                                                                  ( காட்சி--3) 
(ஒரு மரத்தடியில் எருது வியாபாரி  அமர்ந்திருக்கிறார்.அருகே மத்ய கேக பட்டர் கவலையுடன் நிற்கிறார்.அவரருகே வந்து கையைப் பற்றுகிறான் வாசு) 

வாசு ;அப்பா, வாருங்கள் சாப்பிடலாம். எனக்கு நிரம்பப் பசிக்கிறது.
பட்டர்; வாசு இந்த மனிதருக்குக கடனைத் திருப்பிக் கொடுத்த பின்னர்தான் நான் சாப்பிடவேண்டும். உனக்குப் பசிக்கும் நீ போய்ச் சாப்பிடு.
வாசு; இல்லையப்பா. நாம் இருவரும் சேர்ந்தேதான் சாப்பிட வேண்டும்.கொஞ்சம் இருங்கள் 
(எருது வியாபாரியிப் பார்த்துக் கூறுகிறான்) 
ஐயா, என் அப்பாவைச் சாப்பிட அனுமதியுங்கள்.அவருடன்தான் நான் சாப்பிடுவேன். எனக்குப் பசிக்கிறது.
வியாபாரி;குழந்தாய், உன் அப்பா எருது விற்ற தொகை ஐம்பது வராகன் தரவேண்டும். அதைக் கொடுத்துவிட்டால் நான் போய்விடுவேன். பிறகு நீ உன் அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடலாம்.(சிரிக்கிறார்)
வாசு;அப்பா, நீங்கள் உள்ளே செல்லுங்கள். இவர் கடனை நான் தீர்த்துவிட்டு வருகிறேன்.
பட்டர்; நீ குழந்தையல்லவா.நீ எப்படியப்பா இவர் கடனைத் தீர்ப்பாய்?
வாசு;( வியாபாரியின் கையைப் பற்றி சற்றுத் தொலைவு அழைத்துச் செல்கிறான் ) ஐயா, தந்தையின் கடனைத் தீர்ப்பது ஒரு தனயனின் கடமை.இந்தாருங்கள்.(கீழே குனிந்து புளியங்கொட்டைகளைப் பொறுக்குகிறான் அதை வியாபாரியின் கையில் தருகிறான்)
ஐயா, இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வியாபாரி;கனிவுடன் )குழந்தாய் தந்தையின் கடனைத் தீர்ப்பது தனயனின் கடமை என்ற உன் நல்ல உள்ளத்திற்காக இதைப்  பெற்றுச் செல்கிறேன். 
நீ  உள்ளே போய்ச் சாப்பிடு..
(பட்டரைப் பார்த்து )பட்டரே , உங்கள் கடன் தீர்ந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.நான் வருகிறேன்(போகிறார்)
வாசு;(திகைத்து நின்ற பட்டரின் கைகளை பற்றி )வாருங்கள் அப்பா, சாப்பிடப் போகலாம்.(போகிறார்கள்)
                                                                                  (காட்சி --4)
(வேதவதி கையில் இலையுடன் வருகிறாள்.அப்போது வாசு ஓடிவருகிறான்.)
வாசு; அம்மா, எனக்குப் பசிக்கிறது.சீக்கிரம் சாதம்  பரிமாறுங்கள அம்மா. அப்பா எங்கேயம்மா?
வேதவதி; வாசு சற்று நேரத்தில் அப்பா வந்துவிடுவார். பொறு.
வாசு; அப்பா எங்கேயம்மா.
வேதவதி; அவர் பரசு தீர்த்தம், தனுசு,பண தீர்த்தம், கட தீர்த்தம் ,அனைத்திலும் ஸ்நானம் செய்துவிட்டு வர சற்று நேரமாகும் அதுவரை நீ பொறுமையாக இரு.
வாசு; அம்மா, இந்த குஞ்சார் மலையைச் சுற்றியுள்ள அத்தனை தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்துவிட்டு வர நேரம் மட்டுமல்ல ரொம்ப சிரமமும் அல்லவா?
வேதவதி ;ஆனால் உன் தந்தை அந்தத்தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யாமல் வரமாட்டார்.சாப்பிடவும் மாட்டாரே.
(அப்போது ஈரத்துண்டுடனும் கையில் சொம்பில் நீருடனும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லியபடியே உள்ளே வருகிறார் மத்ய கேக பட்டர்.)
வாசு;அப்பா நான்கு தீர்த்தங்களில் நீராடி வருவது உங்களுக்கு சிரமமாக இல்லையா அப்பா.
(.பட்டர் சிரிக்கிறார்)
பட்டர்; இருந்தாலும் அந்த தீர்த்தங்களில் ஸ்நானம்சரிசெய்வது என் வழக்கமாகிவிட்டதப்பா.தீர்த்த ஸ்நானம்  செய்தபின்னர் சாப்பிட்டால்தான் என் மனம் திருப்தியடைகிறது.
வாசு; ஏனப்பா நமது வீட்டின் பின்புறம் இருக்கும் கேணியில் அந்த நான்கு தீர்த்தங்களின் புனித நீரும் இருக்கிறது என்றால் அதில் குளித்தால் போதுமல்லவா.
பட்டர்; போதும்தான் ஆனால் கேணிநீரில் புனித தீர்த்தம் கலந்துள்ளது என்பதை எப்படி ஒப்புக் கொள்வது?
வாசு;என்னுடன் வாருங்களப்பா (அவர் கையைப்பிடித்து பின்புறம் அழைத்துச் செல்கிறான்.)(ஒரு ஆலமரத்தைக் காட்டி)
அப்பா இந்த ஆலமரத்தை தலைகீழாக நட்டு அதைஇந்த நீரை விட்டு வரலாம். நான்கு நாட்களில் இந்த மரம் துளிர்விட்டு வளர்ந்தால் அப்போது இந்த கேணியில் புனிதநீர் இருக்கிறது என்று நம்புவீர்களா அப்பா?
பட்டர்; (சிரித்து)என்னப்பா சொல்கிறாய்?தலைகீழாக நட்ட ஆலமரம் துளிர்விட்டு வளர்வதாவது.உன் விளையாட்டை உன்போன்ற பிள்ளைகளிடம் வைத்துக் கொள்ளடா.
வாசு; இல்லையப்பா. உண்மையாகச் சொல்கிறேன்.இதோபாருங்கள்.(அங்கிருக்கும் ஒரு சிறிய மரத்தைப் பிடுங்கி  தலைகீழாக .
நடுகிறான்.கேணி நீரைக் கொண்டு வந்து ஊற்றுகிறான்.
அப்பா இன்னும் இரண்டு நாட்களில் இந்த மரம் துளிர்க்கும்.அப்போது நான் சொன்னதை நம்புங்கள்.இப்போது சாப்பிடப் போகலாம் வாருங்கள்.(அவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறான் வாசு.)
ருக்மணி சேஷசாயி 





Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக