ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

 மாணவச்  செல்வன் 


             பள்ளிக்கூடத்தில் கொடுத்த மதிப்பெண் பட்டியலைத் தன அப்பாவிடம் காட்டியபடி நின்றான் பாலு. அதைப் பார்த்த ராமசாமி சற்றே கோபம் கொண்டார்.பாலுவை கோபமாகப் பார்த்தார்.சிணுங்கியபடியே பேசினான் பாலு.

"அந்த வாத்தியாரு நல்லாவே சொல்லிக் குடுக்கலேப்பாஅதான் "என்றவனை இடைமறித்துப் பேசினார்."ஏண்டா நீ கவனிக்காமே வாத்தியாரு மேலே பழி போடாதே உனக்கு முன்னாலே நூறு மார்க் வாங்கியவனுக்கெல்லாம் வேறே வாத்தியாரா பாடம் சொன்னாரு இல்லேல்ல."

தலைகுனிந்து நின்றான் பாலு."சரி சரி கவனித்து ப் படி.அடுத்தமுறை நல்ல மார்க்கோட வா.".என்றவர் வெளியே சென்று விட்டார்.

அன்று இரவு படுத்தபடி அப்பாவுடன் பேச்சுக்கு கொடுத்தான். அப்பா ஒரு கதை சொல்லுங்கள் என்றான்.

 ராமசாமியும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார்.அவர் கதைசொல்லப்போவதை அறிந்துகொண்ட பாலுவின் தம்பியும் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

கதைசொல்ல ஆரம்பித்தார் வீராசாமி.மஹாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்சுபேர் கௌரவர்கள் நூறுபேர்.இவங்க எல்லாருக்கும் துரோணர் அப்படிங்கற முனிவர்தான் பாடம் சொல்லித் தருகிற வாத்தியார்.பாண்டவர்களுக்கு தருமன் மூத்தவன். கௌரவர்களுக்குத் துரியோதனன் மூத்தவன்.இ ந்த துரியோதனனுக்கு அருச்சுனன் மேல பொறாமை.ஏன்னா வில்வித்தையில் அவன் ரொம்பக் கெட்டிக்காரனா இருக்கறதால.அதோட பங்காளிகளான பாண்டவர்கள் அஞ்சுபேரையும் கௌரவர்களுக்குப் பிடிக்காது.அருச்சுனன் கெட்டிக்காரனா இருப்பதற்கு ஆசிரியர் காரணம்னு அவர்மேல் கூட துரியோதனனுக்கு கோபம்இருந்தது..இது துரோணருக்கும்  தெரியும். ஆனாலும் இளவரசர்கள் ஆயிற்றே ஒன்றும் சொல்ல முடியாதே.

இந்த எண்ணத்தைத் துரியோதனனிடம் எப்படியாவது நீக்க வேண்டுமே என்று நினைத்தார்.அதற்கு காலம் வந்தது.ஒருநாள் அதிகாலை நேரம் தன நூற்று ஐந்து மாணவர்கள் புடைசூழ துரோணர் ஆற்றுக்கு குளிக்கப் போனார்.எல்லோரும் நடந்து போய்க்  கொண்டிருக்கும் பொழுது துரோணர் திடீரென நின்றார்.  .மாணவர்கள் அவர்பின் நின்றனர்.அவர்  பார்த்து,"அர்ச்சுனா, என் மேலாடையை ஆசிரமத்திலேயே .விட்டு .விட்டேன். நீ சென்று அதை எடுத்து .வா "என்று கூறவே அர்ச்சுனனும் உடனே புறப்பட்டான் 

அவனைத் தடுத்து நிறுத்தியவர் "அர்ச்சுனா, என் உத்தரீயத்தை வழியில் எங்கும் கீழே வைக்கக்  கூடாது."என்று கூறினார்.அர்ச்சுனனும் அப்படியே ஸ்வாமி என்றவன் வேகமாக  ஆசிரமம்  நோக்கிச் சென்றான். 

அவன் சென்ற பின் மற்றவர்களை நோக்கி அருகே   வளர்ந்து நின்றிருந்த பெரிய ஆலமரத்தின் அருகே வரச்  சொன்னார்.













2 கருத்துகள்: