ஞாயிறு, 31 மே, 2015

குறள் வழி கதைகள்.(தொடர்ச்சி) nanbanin panbu.

       
                                1.நண்பனின் பண்பு (தொடர்ச்சி)

 சற்றுநேரம் வேடிக்கை பார்த்தபடி நின்றவன் ரயில் ஊதும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தான்.
விளையாட்டுப் பிள்ளையல்லவா. அந்த சத்தத்தைக் கேட்க வேடிக்கையாக இருந்தது போலும்.தன்வலது காதை தண்டவாளத்தின் மீது வைத்துக் கேட்டான். அந்த அதிர்ச்சி அவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.இடது காதை வைத்துக் கேட்டான். இப்போது அதிர்ச்சி அதிகமாகத் தெரிந்தது.இப்போது ரயில் வரும் நேரம் இல்லையே.வேறு ஏதேனும் சத்தமாக இருக்குமோ என யோசித்தபடி நின்றான்.
அவன் அங்கேயே நிற்பதையும் அப்போது சரக்கு ரயில் ஒன்று வருவதையும் அறிந்த சங்கரன் அய்யாவு டன் பேசிக்கொண்டே இருந்தவர் ஓடி வந்தார். தம்பி கீழே இறங்கிடு என்று கத்தவே அப்போதுதான் நிலைமையைப் புரிந்து கொண்டார் அய்யாவு.
"டேய், அங்க ஏண்டா போனே, கீழ இறங்கு "என்று கத்தினார்.அதற்குள் ஒரு சரக்கு  ரயில் ஜிகு என்ற சத்தத்துடன் வருவது கண்ணுக்குத் தெரிந்தது.  

அதே சமயம் தண்டவாளத்தில் உட்கார்ந்த கந்தசாமி 
"அப்பா, கால் மாட்டிகிச்சு அப்பா...." என்று கத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான்.
ஐயோ, ரயில் வருதே என்று கத்தியவாறே மகனை நோக்கி ஓடி வந்தார்.
அதற்குள் நிலைமையைப் புரிந்துகொண்ட சங்கரன் வேகவேகமாக கந்தசாமி போட்டிருந்த சட்டையைக் கழற்றினார். அந்தச் சட்டையை வீசிக்காட்டியவாறே தண்டவாளத்தில் ரயிலுக்கு எதிரே ஓடத் தொடங்கினார். கந்தசாமியிடம் வந்த அய்யாவு அவனை சமாதானப் படுத்தி விட்டு   அவன் காலை விடுவிப்பதில் கவனம் செலுத்தினார்.

          அதற்குள் வேகமாக வந்த ரயில் சற்றே வேகம் குறைத்து சங்கரன் அருகில் வந்து நின்றது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                  
ரயில் ஓட்டுனர் கீழே இறங்கி என்ன என்று கேட்டு அறிந்து கொண்டார்.
சற்றுநேரத்தில் கந்தசாமியின்கால் தண்டவாளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
நல்ல வேளை . பண்டிகை நாளும் அதுவுமா ஏதும் தப்பா நடக்காம காப்பாத்திட்டீங்க அய்யா.ரொம்ப நன்றிங்க."என்று ஓட்டுனர் சங்கருக்கு நன்றி சொன்னார்
கந்தசாமியிடமும் "தம்பி ஆபத்தான இடத்துல எல்லாம் விளையாடக்கூடாது.ஏன்  இங்கெல்லாம் வரவே கூடாது.தெரியுமா?"என்று சொல்லிவிட்டு பத்திரமாகப் போங்க என்றபடியே வண்டியை ஓட்டிச் சென்றார்.

கந்தசாமி, அய்யாவு, சங்கரன் மூவரும்   ரயில்    தங்களைக் கடந்து செல்லும் வரை பார்த்துக்  கொண்டே நின்றிருந்தனர்.
சட்டென அய்யாவு சங்கரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.கண்கள் கலங்கியிருந்தன.
"அண்ணே, உங்களால என்குடும்பம் இன்னிக்கி பிழைச்சிருக்கு. நீங்கமட்டும் எதையும் யோசிக்காம சமயோசிதமா காரியம் செய்யாட்டி என்னாகியிருக்கும். ஐயோ நினைக்கவே நெஞ்சு நடுங்குது  அண்ணே.உங்களுக்குக்  காலம் பூரா கடமைப்பட்டிருக்கேன் அண்ணே "   

"நண்பனுக்கு ஒரு துன்பம் வந்தா அதப் பார்த்துகிட்டு இருக்கலாமாப்பா.ஓடிப்போயி உதவுறதுதான்  உண்மையான நட்புன்னு சின்ன வயசில சொல்லிக் கொடுத்திருக்காங்கப்பா."

அப்போது கந்தசாமி "ஆமா தாத்தா  எங்க தமிழ் வாத்தியாரு கூட சொல்லிக் குடுத்திருக்காரு.திருக்குறள்  அப்படீன்னு பாட்டு 
அதுல " உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
                  இடுக்கண் களைவதாம் நட்பு"  அப்படீன்னு சொல்லியிருக்காரு.
"அப்படீன்னா"
"அப்படீன்னா ...கட்டியிருக்கும் துணி அவிழ்ந்து விழும்போல இருந்தா, உடனே யோசிக்காம கை அதைப் பிடிச்சுக்குது இல்லையா அப்படி நண்பனுக்குத் துன்பம் வரும்போது ஓடிப்போயி உதவுரதுதான் உண்மையான நட்பு அப்படீன்னு சொல்றாரு.
புரிஞ்சுதா தாத்தா?"
"

இவ்வளவு கெட்டிக்காரனாயிருக்கே , நீ போயி தண்டவாளத்துல நிக்கலாமா.?"

"தப்புதான்"
அதற்குள் வீடு வந்துவிடவே அய்யாவும் கந்தசாமியும்  நன்றியுடன் விடைபெற்றுக் கொண்டனர் .

சங்கரும் "பொங்கப் பண்டிகையை நல்லவிதமாகக் கொண்டாடுங்கள் "என்று ஆசி கூறிவிட்டுப் புறப்பட்டார். அவர் ஓர்  உண்மையான நண்பர் என்று நாமும் ஒப்புக்கொள்வோம்.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 27 மே, 2015

குறள் வழி கதைகள் -1 nanbanin panbu.

       
                       1.     நண்பனின் பண்பு

அய்யாவு என்பவர் ஒரு தொழிலாளி.அவர் மனைவி ராமக்காவும் ஒரு தொழிலாளிதான்.அய்யாவு ரயில்பாதையை செப்பனிடும் பணியில் இருந்தார். ராமக்கா வீட்டு  வேலை செய்து பணம் சம்பாதித்தார்.
       இவர்களுக்கு ஒரேமகன்   கந்தசாமி.  ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.தினமும் அதிகாலையிலேயே ராமக்கா சமையல்  செய்து   வைத்து விட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். பிறகு அப்பாவும் மகனும்   எழுந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு  சாப்பிடு வார்கள் அய்யாவு மதிய உணவு  கையிலும் கட்டிக் கொண்டு  புறப்படுவார். அதற்கு முன் கந்தசாமிக்குஎன்ன தேவை   என்பதைப் பார்த்துச் செய்து வைப்பார்.கதவைப் பூட்டிக் கொண்டு  அய்யாவு வேலைக்கும் கந்தசாமி பள்ளிக்கும் புறப்படுவார்கள். மாலையில் வீடு திரும்பியவுடன் அனைவரும் ஒன்றாகக் கூடி மகிழ்ச்சியாகப் பேசிக் களிப்பார்கள்.
        அந்த வருடம் பொங்கல் பண்டிகை வந்தது. வழக்கம்போல பண்டிகையைக் கொண்டாடுவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது கந்தசாமி அம்மாவின் மடியில் படுத்தவாறே "அம்மா, இந்த வருஷம் எனக்கு செகப்புச் சட்டைதான் வேணும் என்றான்.உடனே அவன் அப்பா அய்யாவு,"டே, போயும் போயும் செகப்புச் சட்டையா வேணும்.நல்ல கலரிலே ஒரு கட்டம் போட்டது பூப்போட்டது எல்லாம் கேக்க மாட்டியா" என்றார் மெதுவாக.
       
         "உனக்கு எந்த கலர் பிடிக்குதோ அதையே நீ வாங்கிக்க. நாளைக்கி ஒரு நாள் பொறுத்துக்க மறு நா  அல்லாருக்கும் லீவு. அன்னிக்கிப்போயி துணிமணி வாங்கலாம் என்ன? என் ராசா. போயி படி கண்ணு."என்று அவனை எழுப்பி அனுப்பினாள்  ராமக்கா.

        "நான்தான் செகப்பு முண்டாச கட்டிக்கிட்டு தண்டவாளத்துமேலே வேலை செய்யிறேன்னா இந்தப் பய செகப்புச் சட்டை கேக்கறானே.நீயும் வாங்கித்தாறேன்னு சொல்றே." சற்றே மனத் தாங்கலுடன் கூறினார் அய்யாவு.
         "சின்னப்பிள்ள ஆசைப்படுது அதுக்கு எது புடிக்குதோ அத வாங்கிக்குடுத்தா அப்பதான் அதுக்கும் சந்தோஷம் நமக்கும் சந்தோஷம்.வேணுமின்னா இன்னொரு சட்டை உங்களுக்குப் புடிச்சதா வாங்கிடுங்க."என்றாள் சிரித்தவாறே.
         இருட்டிவிடவே அய்யாவு தலையை அசைத்தவாறே படுக்கைக்குச் சென்றார்.
மூவரும் கடைக்குச் சென்று துணிமணி புதுப்பானை அரிசி தேங்காய் பழம் என்று பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தனர்.கந்தசாமிக்கு ஒரே சந்தோஷம். அவன் விரும்பியவாறே அழகான சிவப்புக் கலர் சட்டை கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.தன சட்டையை அவன் அருகிலேயே வைத்துக் கொண்டான் தூங்கும்போதும் தன தலையணைக் கரு.கிலேயே வைத்துக் கொண்டான். அவன் மகிழ்ச்சியைப் பார்த்து அய்யாவு.ராமக்கா இருவருக்கும் மனம் கொள்ளா மகிழ்ச்சி.   
          பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.அன்று மாலை கந்தசாமி அவன் அப்பாவந்ததை அறிந்தவுடன் வீட்டுக்கு ஓடிவந்தான்.அவன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆசையுடன் அருகே அமர்ந்து கொண்டான்.
ராமக்கா குடிக்கத் தண்ணீர் கொடுத்துவிட்டு "ஏங்க, பொங்கலுக்கு ரெண்டு நாள் லீவு போடக்கூடாதா?" என்றபடியே அருகே அமர்ந்தாள். 

           "நீ வேறே.ஆபீசுல இஞ்சினீயரு  லீவு நாளிலே கூட வேல செய்யணும்னு சொல்றாரு. அதுக்குதான் ரெட்டைச் சம்பளம் தராங்களே."
"அதனால?"என்று ராமக்கா நீட்டியவுடனே, கந்தசாமி குறுக்கிட்டு "கரெக்டுப்பா. எல்லாரும் வீட்டுல இருந்திட்டா முக்கியமான வேலையெல்லாம் எப்படி நடக்கும்? ரயில்பாதை சரியா இருக்குதான்னு பாத்தாதானப்பா ரயிலு பத்திரமாப் போக சவுகரியமாயிருக்கும்."என்றான்.
"என் ராசா, நீ அறிவாளிடா."என்றபடியே அவனை திருஷ்டி கழித்தாள் ராமக்கா.
"அப்படின்னா பொங்கலுக்கு நா வேலைக்கு போகட்டா?"
"அப்பா, பொங்கலன்னிக்கி அம்மா வடை பொங்கல் எல்லாம் செய்யட்டும் நானும் நீங்களும் ர்யில்பாதையைப் பாத்துக்கிடுவோம் 
"என்னாது நீ வாரியா".
"ஆமாம்பா.உங்ககூட இருக்கறதுதான் எனக்குப் பொங்கலு.ஜாலியா பேசிக்கிட்டே நடப்போம் அப்பா." என்ற தன மகனைக் கட்டிக்கொண்டார் அய்யாவு.
               அன்று போகிப்பண்டிகை.ஊரெல்லாம் ஒரே கூட்டம் கடைகளில் வியாபாரம் தெருவெங்கும் டமடமசத்தம் விற்போரும் வாங்குவோருமாக தெருவெங்கும் கூட்டம்.அய்யாவு வேலைக்குக் கிளம்பினார்.அன்று பள்ளி விடுமுறை அதனால் கந்தசாமியும் அப்பாவுடன் புறப்பட்டான். "டேய் , நீ விளையாடிக்கிட்டிரு கண்ணு. இப்போ ஒரு ரவுண்டு பாத்திட்டு வந்திடுறேன். நாளைக்கு நீ வருவியாம்." என்றார் கனிவோடு.
"அப்பா, அம்மாவும் வீட்டில இல்ல விளக்கு வைக்கும்போதுதான் வருவாங்க.நான் தனியா இருக்கணுமே அப்பா"
"சரி நீயும் கூட வா."
 அன்று  பண்டிகை ஆதலால் தனக்குப் பிடித்த சிவப்புக்கலர் சட்டையை மாட்டிக் கொண்டு அப்பாவுடன் நடந்தான் கந்தசாமி.
நடந்துகொண்டே அப்பாவிடம் கேட்டான் கந்தசாமி. "ஏம்பா நீ படிச்சிருந்தா ஆபீசுல வேலை செய்யலாமில்ல.ஏம்பா படிக்கல"
கண்ணு,எங்கப்பா குடிகாரர்.வீடே கவனிக்கமாட்டாரு.அதனால பள்ளிக்கூடம் போவமுடியாம ஆபீசரய்யா வீட்டுல வேலை செஞ்சேன். அவருதான் இந்த ரயில்ல தண்டவாளம் சீர் பாக்கற வேலையை வாங்கிக் குடுத்தாரு.அப்பா சீரா இருந்திருந்தா நானும் படிச்சு நல்ல வேலைக்குத்தான் வந்திருப்பேன். அதனாலதான் உன்னை நிறைய படிக்கவைக்கப் போகிறேன்.

நல்லாப் படிச்சு பெரிய இஞ்சினீயரா வருவியா ராசா?"
"கண்டிப்பா வருவேம்பா."சட்டென தொலைவில் "ஏ அய்யாவு" என அழைக்கும் குரல் கேட்டது.
தன்னுடன் பணிபுரியும் சங்கரன் நிற்பதைப் பார்த்தார் அய்யாவு.
டேய் கந்தா,   சங்கர் வந்திருக்காரு பேசிட்டு சீக்கிரம் வந்திடுறேன்  என்று  சொல்லிவிட்டு  சங்கரிடம் சென்றார். அவருடன் பேசிக்கொண்டே நின்றார்.கந்தசாமி இங்கும் அங்கும் நடந்தும் குதித்தும் விளையாடிக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கந்தசாமிக்கு  அதற்குமேல் பொறுமையில்லை எனவே   ரயில் 

பாதையிலேயே குதித்துக் குதித்து நின்றான் தூரத்தில் ரயில் வருவது தெரியாமல் ஏதேதோ வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். சற்று தூரம் சென்றான். மீண்டும் திரும்பி வந்தான். சற்று நேரம்


















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

திங்கள், 4 மே, 2015

பெரிய தாசர்.

சோழநாட்டின் தலைநகர் தஞ்சையில் ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மன்னார் நாயுடு.கல்விகேள்விகளில் சிறந்திராவிட்டாலும் தெய்வபக்தி உடையவனாக இருந்தான்.அவ்வூரில் இருந்த அரசாங்க அதிகாரியின் மகன் பெரியசாமி.அவன் சிறந்த அறிவாளியாகவும் தெய்வபக்தி உள்ளவனாகவும் விளங்கினான்.

                         இவன்தந்தை இவனை அரசாங்க வேலையில் அமர்த்த எண்ணினார். ஆனால் பெரியசாமியோ சுதந்திரமாக தொழில் செய்யவே  விரும்பினான். அதனால் அவன் தந்தை தங்களின் குலத் தொழிலாகிய வளையல் வியாபாரத்தை ஆரம்பித்துக் கொடுத்தார்.ஏற்கனவே இறைபக்தியில் மூழ்கியிருந்த பெரியசாமி கடையில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடலானார்.அத்துடன் கடைக்கு வரும் பெண்களுக்கு அவர்களை ஈஸ்வர ஸ்வரூபமாக எண்ணி வளையல் குங்குமம் மஞ்சள் கண்ணாடி என அனைத்து மங்கலப் பொருள்களையும் இலவசமாகவே கொடுத்து அனுப்பினார்.
அதனால் விரைவில் கடையை மூடும்படி ஆயிற்று.உலக இச்சையை விடுத்து எப்போதும் கோயிலே கதியென்று இருக்கத் தொடங்கினார். மக்கள் அவரை பெரியதாசர் என்று அழைக்கத் தொடங்கினர்.
                   ஒருநாள் அவ்வூர் அரசனுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது."இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தூரம் இருக்கும்?"
இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி அரசவைக் கவிஞர்களைக் கேட்டார். அவர்கள் அளித்த பதில் அவருக்குத் திருப்தியாக இல்லை.எனவே கோவிலில் இருக்கும் பெரியதாசரை  அழைத்து வரச் செய்தான் .அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான் .
               பெரியதாசர் புன்னகையுடன் பதிலளித்தார்."அரசே ஆதிமூலமே என்று யானை அழைக்க அந்த நாரணன் வரவில்லையா?கோவிந்தா என திரௌபதி அழைக்க அந்தக் கண்ணனின் காதுகளில் அவள் குரல்  விழவில்லையா? அவன் புடவை கொடுத்து அருளவில்லையா. எனவே வைகுண்டம் நமக்குக் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது." 
இந்த பதில் அரசனுக்கு மிகவும் திருப்தியளித்தது.அவருக்குப் பொன்னும் பொருளும் தந்து சிவிகையில் ஏற்றி அனுப்பினான் .இதனால் அந்தப் புலவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அரசனைத் தூண்டிவிட்டு அவர்மீது பாடல் பாடும்படி கேட்கச் சொன்னார்கள்.மன்னனும் ஆசை காரணமாக பெரியதாசரிடம் தன்மீது பாடல் பாடும்படி கேட்டான் . ஆனால் "இறைவனையன்றி மனிதனைப் பாட இயலாது. நரசிங்கனைப் பாடும் வாயால் நரனைப் பாடமாட்டேன்" என்று மறுக்கவே அரசனுக்குக் கோபம் உண்டாயிற்று.
            பொறாமைக்காரர்களும் அவனுக்குத் தூபம் போட்டார்கள்.அவ்வளவுதான். பெரியதாசர் மீது அரசதண்டனை பாய்ந்தது.வீரர்களின் ஆயுதங்கள் அவர்மீது பாய்ந்தன.ஹிரண்யகசிபு பிரகலாதனுக்குச் செய்த கொடுமையைச் செய்தார்கள் சேவகர்கள். அவரோ ஒரு நிலைப்பட்ட மனதோடு நரசிம்மரையே தியானித்தபடி நின்றார்.ஆயுதங்கள் கூர்மழுங்கின.சூட்டுக்கோலால் சுட அதுவும் குளிர்ந்து போயிற்று. பிறகு நஞ்சினை இட்டார்கள்.நஞ்சே அமுதாகியது.யானையை இடறும்படி ஏவினார்.யானையின்முன் நரசிம்மமாகக் காட்சியளிக்கவே யானை சுருண்டு விழுந்து மாண்டது.
             இன்னும் அரசனது பிடிவாதம் அதிகரித்தது.என்மீது பாடல் பாட ஒப்புக் கொள்ளும்வரை விடாதீர்கள் என்று கூறி  பலவிதத்திலும் துன்புறுத்தக்  கட்டளையிட்டான். பெரியதாசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே இட்டார்கள். இத்தனைக்கும் இவன் தப்பிவருவது என்றால் இவன் பெரிய மந்திரவாதி.இவனால் உங்கள் ஆட்சிக்குக் கேடு வரும் இவனை அழிப்பதே நாட்டுக்கு நல்லது எனத் தூபம் போடவே கோபத்தின் உச்சியில் இருந்த அரசனுக்கும் அவரை  எப்படியாவது கொல்ல வேண்டும் என்னும் வெறி அதிகமாயிற்று. 
பொறாமைக்காரர்களின் துர்ப்போதனையால் பெரியதாசரைக் கழுவில் ஏற்றும்படி கட்டளையிட்டான் .அப்போதும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இறைவனான நரசிங்கப்பெருமானையே சிந்தித்தபடி தெருவில் நடந்தார். அவரைச் சுற்றி சேவகர் சூழ்ந்து நின்று  கழுமரம் நோக்கி அவரை இழுத்துச்  சென்றனர்.ஊர்மக்கள் கண்ணீருடன் பார்த்து நின்றனர்.
          அரசன் பெரியதாசரைக் கொன்றுவிட்ட பெருமிதத்தோடு கொலு வீற்றிருந்தான்.அப்போது 'திசைதிறந்து அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்' என்று ஹிரண்யவதைப் படலத்தில் தோன்றியதுபோல் இடியோசை கேட்டது.மாபெரும் கர்ஜனையோடு அரசன்முன் தோன்றினார் நரசிம்ம மூர்த்தி.பயத்தில் நடுங்கிய அரசன் குப்புற விழுந்தான்.அவன் முதுகில் சுளீர், சுளீர் எனச் சாட்டையடிகள் விழுந்தன."ஐயோ, அப்பா,"  என அலறினான்  அரசன் ."பெரியதாசன் என்ன குற்றம் செய்தான்? சொல், சொல்."எனக் கேட்டு மேலும் மேலும் அடிகள் விழவே அரசன்  துடித்துப் போனான்.. தன தவறு புரிந்தது. 
"சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் தவறு செய்துவிட்டேன்."
"ஓடு பெரியதாசரிடம் சென்று மன்னிப்புக்கேள்."என்று சாட்டையால் அடித்துவிட்டு மறைந்தார் நரசிம்மமூர்த்தி.
 அரசனின் உடல் நடுங்கியது. அடிபட்ட முதுகு எரிந்தது. ஓடினார் கழுமேட்டை நோக்கி.
அங்கே மக்கள் கண்ணீருடன் ஏதும் விளங்காதபடி நின்றிருந்தனர்.கழுமரம் பிரகாசமாக இருக்க அதன் அருகே பரம சாந்தமான முகத்துடன் 
நின்றிருந்தார் பெரியதாசர். அங்கு ஓடிவந்த அரசன் பெரியதாசரின் கால்களில் விழுந்தான்.தான் செய்த மாபெரும் குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான் தாசரின் பாதங்களைக் கண்ணீரால் கழுவினான். நரசிம்மம் தன்  முன் தோன்றி தன்  குற்றத்தை உணர்த்தியதோடு தண்டனையையும் அளித்ததைக் கூறிக் கதறினான்.
பெரியதாசர் அவனை வாரியெடுத்தார். "அரசே நீர் பாக்யசாலி.எனக்குக் காட்சி தராத நரசிம்ம மூர்த்தி உனக்குக் காட்ச் தந்தாரே. நீரே பாக்யவான் என அரசனைப் பணிந்தார். பின்னர் வெகு காலம் இறைப்பணியில் ஈடுபட்டு பின்னர் இறைவனடியில் சேர்ந்தார். இவரது உறுதியான தளராத பக்தி இறை அடியார்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவே திகழ்கிறது.






































ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 3 மே, 2015

அன்புடன் பாட்டி


                               மீண்டும் வருகிறேன்.

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.சில மாதங்களாக என்னால் எழுத இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கிவிட்டேன். உங்கள் அனைவரின் ஆதரவும் கருத்துகளும் எனக்கு உற்சாகமூட்டுபவை. தவறாமல் பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புப் பாட்டி 
ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 8 மார்ச், 2015

Check out Rukmani's photos on Facebook.

facebook
Check out Rukmani's photos on Facebook.
If you sign up for Facebook, you'll be able to stay connected with friends by seeing their photos and videos, staying up to date with their latest status updates, exchanging messages and more.
Join Rukmani on Facebook
This message was sent to rukmani68sayee.avva@blogger.com. If you don't want to receive these emails from Facebook in the future or have your email address used for friend suggestions, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

சனி, 7 மார்ச், 2015

வாழ்த்து.

மகளிர் அனைவருக்கும் எனது மகளிர்தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்தின் பண்பாட்டைக் காத்து என்றும் புகழுடனும் மனநிறைவுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து உலகுக்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டுமென்று  வா ழ்த்துகிறேன்.
அன்புப் பாட்டி ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 2 நவம்பர், 2014

தியாகச்சுடர்--------வரலாற்றுத் தொடர்.

                                   எட்டு --இறுதிப்பகுதி 

                  கையிலிருந்த மலர்க்கொத்துகொத்துகளைப் பணிவுடன் அந்தக்  கல்லறைமீது வைத்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்தான் ஜஹாங்கீர்.

   "தாய்நாடு காக்க தன இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத் திருவிளக்கே, உன்னை அல்லாஹ் காக்கட்டும்.அவர் அருள் பெற்றநீ எங்களையும் வாழ்த்துவாயாக. உன்னை உலகம் அறியாவிட்டாலும் நான் என்றும் மறவேன் தாயே."
மனமுருகி கண்களில் நீர் திரையிட வணங்கி எழுந்தான் ஜஹாங்கீர்.

    சிறிது நேரத்தில் கையில் அனார் மலர்களுடன் அங்கு வந்த நூர்ஜஹான் பக்தியுடன் கல்லறைமேல் மலர்களை வைத்துவிட்டுப் பணிவுடன் வெகுநேரம் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தாள்.அவள் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் குமுறல்களை யாரால் அறிய இயலும்?கல்லறை மேலிருந்த அனார்மலர்கள் காற்றில் அசைந்து அவளுக்கு ஆசி கூறின.

மாலை நேரம்.ஓவியம்ஒன்று  உயிர் பெற்றது போல் நூர்ஜஹான் அமர்ந்திருந்தாள். அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்களால் அவள் அழகைப பருகியபடி அமர்ந்திருந்தான் 
ஜஹாங்கீர் 

"பிரபு, . என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் தவறு பெரிதுதான்.அதற்காக  என்னை மன்னித்து விடுங்கள் பிரபு."

"நூர்ஜஹான், ஒற்றன் கூறியதாக நீ கூறியதும் தீர விசாரிக்காமல் புறப்பட்டது என் தவறுதானே.அதற்காக ஒரு உயிர் இன்று பலியாகிவிட்டது.பாவம்..."கண்களை மூடி ஒரு கணம் அந்த அடிமையின் நினைவில் அமர்ந்திருந்தான் ஜஹாங்கீர்.

"ஜகாம்பனாஹ்! அந்தப் பெண் மட்டும் இல்லையென்றால் என்னவாகியிருக்கும்?மாற்றான் கையில் சிக்கியிருக்கும் இந்த சாம்ராஜ்யம்.ஷேர்கான் சாமானியமானவறல்ல."

"உண்மைதான்.ஷேர்கான் சுத்த வீரன்தான்.அவனுடன் போரிடுவது அத்தனை எளிதாக இல்ல"

"பழரசம் அருந்துங்கள் பிரபு!இப்போது அந்தப் பேச்சு எதற்கு?

கிண்ணத்துடன் நூர்ஜஹானின் கரம்பற்றித் தன்னருகே அமர்த்திக் கொண்டான் ஜஹாங்கீர்.

 "இந்தக் கன்னி ரசம் அருகிருக்க கனிரசம் எதற்கு கண்ணே?"

அவனது அன்பில் மயங்கிய நூர்ஜஹான் தன்னை மறந்து அவன் மார்பில் சாய்ந்தாள்.அவள் உடல் மட்டுமல்ல உள்ளமும் அவனது அன்பணைப்பில் கட்டுண்டு விட்டது இப்போது. பனித்திரை விலகிய விடிவெள்ளி போல் அவள் மனம் கள ங்கமற்றுத்.திகழ்ந்தது.

வானத்தில் பூரண சந்திரன் என்றுமில்லாத பிரகாசத்துடன் இந்தக்காதலர்களுக்கு ஆசி கூறியவாறே பவனி புறப்பட்டான்.அந்த இரவின் தனிமையில் தியாகச்சுடரின் நினைவிலே தங்களையே மறந்து அமர்ந்திருந்தனர் நூர்ஜஹானும் ஜஹாங்கீரும்.
                                          (முற்றும்)
                   


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

சனி, 1 நவம்பர், 2014

தியாகச்சுடர்---------வரலாற்றுத் தொடர்.

                                        ஏழு 


    வேதனை மிகுந்த உடலைச் சற்றே அசைத்தாள்  அனார். அவள் சரியாகப் படுக்க உதவிய நூர்ஜஹான் இன்னும் சற்று அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
"சொல் அனார்.உன் விருப்பத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவேன்.தயங்காமல் சொல்வறண்ட தன உதடுகளை நாவால் தடவிக் கொண்ட அனார் தன அருகே வருமாறு செய்கை செய்தாள் 

அவளுக்கு இன்னுமருகே நெருங்கி அமர்ந்தாள்  நூர்ஜஹான்.

"நூர்ஜஹான் இனி எக்காலத்திலும் என் சலீமுக்கு துரோகம் நினைக்கக் கூடாது.இரண்டாவது நான் தான் அனார்க்கலி என்பது அவருக்குத் தெரியக்கூடாது.இந்த ரகசியம் நம்முடனேயே மறைந்து விட வேண்டும்."

நூர்  அனாரின் கரங்களை இன்னும   அழுத்தமாகப் பற்றினாள்.


"அப்படியானால்......அவருக்கு நீதான் அனார் என்பது தெரியாதா...?"

"தெரியாது   நூர். தெரிந்திருந்தால் என்னை சகோதரி என்று அழைப்பாரா? நான் அவ்வளவு உருமாறி விட்டேன்."  விரக்திப்  புன்னகையுடன் கண்ணீரும் வெளிவந்தது.

"அனார்க்கலி, சகோதரி,! சரித்திரத்தில் தீராப் பழிகாரியாக நான் ஆகிவிடாமல் என்னைக் காப்பாற்றி விட்டாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?"

"எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று அது போதும் எனக்கு."

"இனி ஜஹாங்கீர் எனக்கு தெய்வத்துக்கும்  மேலானவர்.அவர் இன்பமாக வாழ்வதையே என் லட்சியமாகக் கொள்வேன் அனார்."

"மிக்க மகிழ்ச்சி நூர்.மிக்க நன்றி. அந்தப் பழரசம் கொடு. என் நா வரள்கிறது."

"அது வேண்டாம் சகோதரி. புதிதாகக் கொண்டு வரச் சொல்கிறேன்."என்றவள் பணிப்பெண்ணை கண்ணால் ஜாடை காட்டி பழரசம் கொண்டுவரப் பணித்தாள்.

"ஏன்? அது அவ்வளவு உயர்ந்ததா? நான் சாப்பிடத் தகுதியில்லாதவளா?"

"ஐயோ அப்படியில்லை அனார்.உன் உடமைகளைத்தான் நான் அனுபவித்து வருகிறேன்....அது...நஞ்சு கலந்தது."

"என்ன?"

"ஆமாம்"  வெறுப்பு நூர்ஜஹானின் அழகிய முகத்தைக் கூட கோரமாக்கியது.
"அது... என்னை வஞ்சிக்க எண்ணியவருக்காகத்   தயாராக உள்ளது.அனார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திட்டமிட்டுக் காரியங்கள் செய்கின்றனர்.ஆனால் அது சில சமயங்களில் வேறு விதமாக முடிந்து விடுவதும் உண்டு.போரில் ஷேர்கான் வெற்றிபெற்று விட்டால் சாம்ராஜ்ய ஆசையில் எதுவும் செய்வார்.அதைத் தடுக்க அவரை இவ்வுலகினின்றும் விடுதலை செய்துவிட எண்ணியே பழரசத்தில் நஞ்சு கலந்துவைத்துள்ளேன்.ஆனால் உன் தியாகத்தால் அதற்கு இடமில்லாமல் செய்துவிட்டாய்.வெற்றி நிச்சயமாக ஜஹாங் கீருடையதுதான். 

"சொல்... நூர் வெற்றி என் சலீமுடையதுதான்."

"பேகம் சாஹிபா,! ஜகாம்பனாஹ் வெற்றி பெற்றுவிட்டார். இங்குதான் வந்துகொண்டிருக்கிறார்."
பணிப்பெண் தன கடமையை முடித்துச் சென்றாள்.
.
நூர்ஜஹான், நான் இருந்தாலும் இறந்தாலும் நான் தான் அனர்க்கலி  என்று ஜஹாங்கீருக்குத் தெரிவிக்கவே கூடாது."

"கவலைப்படாதே அனார்."என்றபடியே ஜஹாங்கீரை வரவேற்கச் 
சித்தமானாள்  நூர்ஜஹான்.

                                           (அடுத்த பகுதி  தொடரும் )













--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வெள்ளி, 31 அக்டோபர், 2014

தியாகச்சுடர்-------வரலாற்றுத் தொடர்.

                                            ஆறு.


                "நூர்ஜஹான் இவ்வளவு பெரியதுரோகத்தைச் செய்வாய் என நான் நினைக்கவில்லை." 

"என்ன ஆணவம் உனக்கு? ஒரு பணிப்பெண் என்னைப் பெயரிட்டு அழைப்பதா?ஜஹாம்பனா ஜஹாங்கீரின் ஆணை என்பதால் உன்னை அரண்மனை அந்தப்புரத்திற்குள்  அனுமதித்தேன்.இல்லையேல்..." ஆத்திரத்துடன் பற்களைக் கடித்தாள்  நூர்.

சற்றே பெருமூச்சு விட்ட அனார் மிகுந்த சிரமப்பட்டு மெதுவாகப் பேசினாள். 

"பதறாதே சகோதரி, நீ என்னை விரட்டுமுன் என் உயிர் இந்த உடலைவிட்டுப் பிரிந்து விடும்.அல்லா என்னை அழைத்துவிட்டார். ஆனால் கடைசியாக என் சலீமை இந்தக் கண்களால் மீண்டும் ஒருமுறை காணவேண்டும். அவர் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்க வேண்டுமென்றே  இந்த உடலில் இன்னும் இந்த உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது நூர்ஜஹான்!"

"அவருக்கு மிகவும் வேண்டியவளாகத் தோன்றுகிறது உன்னைப் பார்த்தால்....நீ...யார் ?"

"ஆம்... ஒரு காலத்தில் அவருக்கு வேண்டியவளாகத்தான் இருந்தேன். ஏன்...நானின்றி இந்த உலகே இல்லையென இருந்தவர்தான் என் சலீம். எங்கள் காதல்கதை உலகறிந்ததாக உள்ளது. காதலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் வாழ்க்கை சோகமுடிவை எய்தி ஒரு கல்லறைக்குள் அடங்கி விட்டது."அதிகம் பேசிய ஆயாசம் தாங்காமல் மூர்ச்சையானாள் அனார்.

நூர்ஜஹான் ஓடிச்சென்று அவள் மூர்ச்சை தெளிவித்து சிறிது பாலை அவள் வாயில் புகட்டினாள்.

"கல்லறைக்குள் அடங்கியது என்றால்....."  என்று எண்ணமிட்ட நூர்ஜஹானின் கரங்கள் நடுங்கின. 

"அனார்க்கலியா இவள்..?" சிந்தனைச் சிற்பமாக ஊமையாக அமர்ந்துவிட்டாள்  நூர்ஜஹான்.

"என் நூர் ...பேசாமல் அமர்ந்துவிட்டாய்!...ம்...நீ என்ன நினைக்கிறாய் என்பது தெரியும். உன் சந்தேகம் சரிதான்.நான் தான் 'நாதிரா'.
அக்பர் பாதுஷாவினால் 'அனார்க்கலி' என்று பட்டம் சூட்டப் பட்டவள் "

"நீ,....நீங்கள் கொல்லப்பட்டதாகச் சொல்வது...!"

 வறண்ட அனாரின் உதடுகள் புன்னகையை உதிர்த்தன.குரல் கரகரக்க "நான் உன் சகோதரி நூர் என்னை நீ என்றே அழைக்கலாம்.நான் கல்லறைக்குள் அடக்கப்பட்டது உண்மை.அது உலகத்தின் கண்களுக்கு.ஆனால் கருணையே வடிவான அக்பர் பாதுஷா இப்படிப்பட்ட கொடுமையான காரியத்தைச் செய்வாரா?சுரங்கப் பாதை வழியே தப்பிச் செல்ல வழிகாட்டினார்.சலீமைப் பார்க்கவோ அவருடன் பேசவோ மாட்டேன்  என்று  வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்த சாம்ராஜ்யத்துக்கு வெளியே ஒரு காட்டில் என் தாயுடன் வாழ்ந்து  வந்தேன்."
என்றாள் ஆயாசத்துடன்.

"அனார்க்கலி, உங்கள் கதை பெரும் காவியமாகவே புனையப்பட்டுள்ளது. உன்னைக்காணவேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. ஆனால் இறந்துவிட்ட உன்னை எப்படிக் காண இயலும் என்று எண்ணியிருந்தேன்.என் விருப்பம் கைகூடுமென்று கனவிலும் நான் கருதவில்லை.ஆனால்...இந்த நிலைக்கு ....உன் உயிரைப் பணயம் வைக்கும் நிலைக்கு.... இப்படி நீ ஏன் முடிவு செய்தாய் அனார்..?"

"நூர்...அவரின்றி...என் விரகவேதனையை உள்ளடக்கிக் கொண்டு ஒவ்வொரு கணமும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு வாழ என்னால் இயலவில்லை.இந்த உயிர் அவருக்கே சொந்தமானது.அவருக்காகவே இதை அர்ப்பணித்தால் அதைவிட வேறு பாக்கியம் என்ன இருக்கிறது எனக்கு?"

"அனார்க்கலி மாதர்களுக்குள்  மாணிக்கம்  நீ. உன்னருகே நிற்கவும் தகுதியற்றவள் நான்.ஒரு பெண்ணிடம் காதல் கொண்டவர் என்னை விரும்புவது எனக்குப் பிடிக்காத காரணத்தால் நான் ஜஹாங்கீரை வெறுத்தேன். ஆனால் காதலின் தன்மையையும் அதன் தெய்வீக சக்தியையும் பெருமையையும் நன்கு உணர்ந்தவர் உன் சலீம்.ஷேர்கானை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்.அதுவும் உன்னைப்போன்ற ஒரு பெண் அவருக்காகக் காதலையும் உயிரையும் தியாகம் செய்ய வேண்டுமென்றால் அவர் எத்தனை உயர்ந்த புருஷராக இருக்கவேண்டும்?
இந்த உண்மை எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது.அதன் உயர்வை நான் இப்போதுதான் உணர்கிறேன்."

"நூர்ஜஹான், சகோதரி,..!  உயிரை இழக்கப்போகும் எனக்கு நீ இரண்டு வாக்குக் கொடுக்க வேண்டும்.அதை நீ உன் உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும். செய்வாயா?" நூர்ஜஹான் தன இரு கரங்களுக்குள் நடுங்கும் அனாரின் கரங்களைச் சிறை வைத்துக் கொண்டாள் உரிமையோடு.

"சொல் சகோதரி.உன் அன்புக்காகவும் தியாகத்துக்காகவும் நான் எது வேண்டுமாயினும் செய்யக் கடமைப் பட்டுள்ளேன்."குரல் கரகரக்க கண்களில் கண்ணீர் திரையிடக் கூறினாள்  நூர்ஜஹான்.

                                                                                (அடுத்தபகுதி தொடரும்)







--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 29 அக்டோபர், 2014

தியாகச்சுடர்---வரலாற்றுத்தொடர்

                                                         ஐந்து       
     
.              
"உன்னிசா! உன் உதவி பயனற்றுப் போய் விட்டதம்மா. ஷேர்கான் இதுவரையில் செய்துவந்த ஏற்பாடுகள் எல்லாம் 
 உன்னை மீட்டு வரத்தான் என்று எண்ணி ஏமாந்து போனேன்.
அவன் எண்ணம் இப்போது சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதில்தான் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது."

"மஹமத், அவர் இப்படி மாறுவார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை."
துயரத்துடன் கூறிய நூர்ஜஹான் சூன்யத்தில் பார்வையைச் செலுத்தியவாறு அமர்ந்திருந்தாள்.
'இனி எனக்கு யார் துணை?ஜஹாங்கீரின் அன்பை உதறிவிட்டு ஷேர்கானின் அன்புக்கு ஏங்கி நின்றேன்.ஆனால் என்னை வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு அவர் இப்போது உயர்ந்து விட்டார் போலும். மொகலாய சாம்ராஜ்யம் அவர் கைக்கு மாறுமானால்....அப்போது....நான் அனாதை ஆகவேண்டியதுதானா?'  மனத்தின் ஓட்டத்தில் மௌனமானாள் நூர்ஜஹான்.

"மேஹர், ஜஹாங்கீரைப் பழிவாங்கவேண்டுமென்றுதான் நான் எண்ணினேனே தவிர சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றும் எண்ணமே எனக்கில்லை.அத்துடன் உன்னை  ஷேர்கானிடம் சேர்க்க வேண்டுமென்றுதான் விரும்பினேன்.ஆனால் ஷேர்கானின் எண்ணம் வேறு விதமாக உள்ளதம்மா."
பெருமூச்சுடன் அங்குமிங்கும் நடை பயின்றான் மஹமத்.

"மஹமத், நேரமாகிவிட்டது நீ புறப்படு. ஜஹாங்கீர் மேற்கு வாயில் வழியே புறப்பட்டிருப்பார்.நம் படைகளும் உள்ளே நுழைந்திருக்கும்.ஷேர்கான் இங்கு வந்தால் அவரை நான் கவனித்துக் கொள்கிறேன்.காலம் என் கைக்குள் அடங்கியது மஹமத்"
ஏதோ திட்டத்துடன் தலையசைத்து அவனுக்கு விடையளித்தாள் மேஹர் உன்னிசா என்ற நூர்ஜஹான்.

மஹமத் வெளியேறுமுன் ஒரு பெண்ணுருவம் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறியதை இருவரும் கவனிக்கவில்லை.
                       
காட்டுப்பாதை வழியே கல்லும் முள்ளும் நிறைந்திருந்த இடத்திலும் தன உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினாள் அனார்க்கலி. குறுக்குபாதை வழியாக வந்தும் மேற்குவாயில் வழியே செல்லும் படைகளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.

"பாதுஷா!    ஜகாம்பனாஹ்!..." என்ற குரல் தன்  தொண்டைக்குள்ளிருந்து உரக்க வெளிவந்ததாகத்தான் எண்ணினாள்.ஆனால் பசியினாலும் களைப்பினாலும் சோர்ந்து போன அவள் உடல் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்ததே தவிர அதில் உணர்ச்சிகள் ஒடுங்கி வெகு நேரமாகிவிட்டிருந்தது.
                      தன்  இயலாமையை எண்ணி மனம் நொந்த அனார் மலை உச்சியை நோக்கி ஓடினாள்  கல் இடறி காலில் ரத்தம் கசிந்தது. முட்களால் ஆடைகள் கிழிந்து தொங்கின.எப்படியும் சலீமின் படையை நிறுத்திவிடவேண்டும் என்னும் எண்ணம் ஒன்றே அவள் குறிக்கோளாக இருந்தது. மலைஉச்சியை அடையுமுன்பே அவள் சலீம், சலீம் என்று உரத்துக் கத்தினாள்.உச்சியில் இருந்து சலீம் என்று கூவிய அவள் குரல் குதிரைகளின் குளம்பின் ஒலியில் காற்றோடு கலந்து  மறைந்தே போயிற்று. குதிரைப்படை தன்போக்கில் போய்க் கொண்டிருந்தது.மலை உச்சியில் சலீம் எனக் கத்தியவாறே படையுடன் ஓடிக் கொண்டிருந்தாள்  அனார்க்கலி.
                          படைவீரர்களுக்கு முன்பாக வெள்ளைப்புரவி ஒன்றின்  மேல் போர்க்கவசமணிந்து கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தான் சலீம்.வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு படைநடத்திசெல்லும் சலீமைத் தடுக்க தன குரல் பயன்படாது என உணர்ந்து  கொண்டாள்  அந்தப் பேதை. இனி என்செய்வது? உயிரைப் பணயம் வைக்கவேண்டியதுதான்.அப்போதுதான் என் எண்ணம் நிறைவேறும். என முடிவு செய்தாள்.
மறுகணம் மலை உச்சியிலிருந்து ஒரு உருவம் உருண்டு புரவிப் படைக்குக் குறுக்கே வந்து விழுந்தது.வேகமாகச் சென்று கொண்டிருந்த சலீம் தன் குதிரையின் கடிவாளத்தை எவ்வளவு இழுத்துப் பிடித்தும் அனார்க்கலியின் உடலைத் துவைத்துவிட்டுத்தான் நின்றது அந்தப் புரவி.துள்ளிக் குதித்து ஓடிவந்த ஜஹாங்கீர் ரத்தம் தோய்ந்த அந்த உடலைத் தன மடியில் கிடத்திக் கொண்டான்.
 
"சகோதரி!  யார் நீ? ஏனிந்த தற்கொலை முயற்சி?"
சலீமின் குரல் காதில் விழுந்ததும் கண்களைத் திறந்தாள் அனார்.சிறிது நேரம் மூச்சுவிடத் திணறி விட்டு,
.
"பிரபு, நான் உங்கள் அடிமை.கிழக்குவாசல் வழியே பகைவர் படை நுழைந்து விட்டது.மேற்கு வாசல் என்ற செய்தி தவறானது.மொகல் சாம்ராஜ்யம் கைமாறும் நிலைக்கு வந்து விட்டது. உடனே புறப்படுங்கள் "என்றவள் .ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.
ஜஹாங்கீர் அதிர்ச்சியும் கோபமும் கொண்டான்.  "இந்தச் செய்தி ஆதாரமுள்ளதுதானா?உனக்கு நன்றாகத் தெரியுமா?"
.
"என் உயிரின்மேல் ஆணை பிரபு."
.
"இதோ புறப்படுகிறேன்.சிப்பாய் இரண்டுபேர் இந்தப் பெண்ணை அரண்மனை அந்தப்புரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் வைத்தியரிடம் நன்கு சிகிச்சையளிக்கச் சொல்லுங்கள்.நமது படை இரு பகுதியாகப் பிரியட்டும் ஒரு பகுதி இங்கேயே நிற்கட்டும் மற்றோடு பகுதி என்னுடன் கிழக்கு வாசலுக்கு வரட்டும்." என்று கூறியவாறு குதிரையின் மேல் தாவி ஏறினான் ஜஹாங்கீர். .
 பாதிப் படை புழுதியைக் கிளப்பியவாறே  அவனைத் தொடர்ந்து சென்று மறைந்தது.

                                                                                            (அடுத்த பகுதி தொடரும்)







               









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com