வியாழன், 17 அக்டோபர், 2019

Fwd: மத்துவாச்சாரியார்


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 9:07 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed, 19 Sep 2018 at 20:59
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 14 Jan 2017 at 19:18
Subject: மத்துவாச்சாரியார்
To: <anandanrao@yahoo.com>


                                      
                                                             காட்சி --5  


(கேகயபட்டர்     கையில் சொம்பும் தோளில் துண்டுமாக புறப்படுகிறார்.அப்போது அங்கே வாசு வருகிறான் ) 

வாசு; அப்பா, நீங்கள் நான்கு தீர்த்தங்களை நாடி வெளியே எங்கும் செல்ல வேண்டாம்.நமது வீட்டு கேணியிலேயே புண்ணிய தீர்த்தங்கள் கலந்துள்ளன.
பட்டர் ( சிரித்தவாறே )குழந்தாய்,நம் வீட்டுக் கிணற்றில் எப்படியடா புனிதநீர் கலந்திருக்கும்?
வாசு ; அப்பா நான்கு நாட்களுக்கு முன் நான் தலைகீழாக நட்டுவைத்த மரம் துளிர்த்துள்ளதா பாருங்கள். பிறகு நம்பலாமா வேண்டாமா என சிந்தியுங்கள்  வாருங்கள் அப்பா.
(தந்தையின் கரம் பற்றி அழைத்துச் செல்கிறான்.)
பட்டர்'; அப்படியா சரி வாபார்க்கலாம்.
வாசு; பாருங்கள் அப்பா, இந்த மரம் சிறியதாக இலை  விட்டிருப்பதைப் பாருங்கள்
பட்டர்;(ஆச்சரியத்துடன் பார்த்து)
ஆமாம் வாசு நீ சொன்னது நிஜம்.

வாசு;பார்த்தீர்களா தினமும் புனித நீர் வார்த்ததால்தான் தலைகீழாக நட்ட ஆலமரம் வேரிலிருந்து துளிர் விட்டு வளர்ந்துள்ளதைப் பாருங்கள் அப்பா.
பட்டர்;(மகிழ்ச்சியுடன்) ஆமாம் வாசு.நீ சொன்னதுதான் சரி.நம் கேணியில் எல்லா தீர்த்தங்களின் புனித நீரும் கலந்துதான் இருக்கின்றன என்பதை இப்போது நான் நம்புகிறேன்.இனி இந்த கேணியை வாசுதேவ தீர்த்தம் என்றே கூறுவோம்.
(மகிழ்ச்சியுடன்)இதோ நம் வாசுதேவ தீர்த்தத்தில் குளித்துவிட்டு ஒரு நொடியில் வருகிறேன்.
                               காட்சி---6
(எட்டு வயது பாலகன் வாசு குருகுலத்திலிருந்து ஓலைச் சுவடிகளுடன் வருகிறான்.ங்கே அமர்ந்திருக்கும் பட்டர் அவனைப் பார்க்கிறார்.)
பட்டர்;வாசு அதற்குள்  முடிந்துவிட்டதா?சீக்கிரமே வந்து விட்டாயே?
வாசு; ஆமாம் அப்பா.கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்பது சலிப்பாக வருகிறதப்பா.தனியே அமர்ந்து அதற்கடுத்த பாடத்தைப் படித்துவிட்டு வருகிறேன்.
பட்டர்;(தனக்குள் ) நீஇரண்டாண்டுக்குமுன் கடனுக்காகக் கொடுத்த  புளியங்கொட்டையைப் பெற்றுக் கொண்ட   வியாபாரி இன்று கடனைத் திருப்பிக் கொடுத்தால் வாங்க மறுக்கிறான்.காரணம் கேட்டால் உங்கள் மகன் கொடுத்த 
புளியங்கொட்டை வந்த நேரம் நான் பெரும் தனவந்தனாகிவிட்டேன். உங்கள் கடன்  தீர்ந்துவிட்டது என்கிறான். தலைகீழாக  மரத்தைநட்டு துளிர்க்கச் செயது விட்டான்.இது என்ன மாயமோ அனந்தேஸ்வரா, என் ஒரே மகனைக் காப்பாற்று. என்றபடியே  அமர்கிறார்.
அங்கே வாசு வருகிறான்.)
வா;வாசு,, நீ குழந்தையாக இருக்கும்போதே ஒரு முறைக்கு மேல் கேட்காமல் அடுத்த பாடத்தைக் கேட்பாய். ஆசானிடமும் அப்படியேவா?
வாசு;(சிந்தனையுடன்) அப்பா, நேற்று நீங்கள் சொன்ன ராமாயண ஸ்லோகத்திற்கு உண்மையான விளக்கம் சொன்னது தவறா அப்பா?
பட்டர் ;இல்லை குழந்தாய்.ஒரு தவறும் இல்லை.
வாசு; பின் ஏன் ஆசான் மட்டும் கோபித்துக் கொள்கிறார்?
பட்டர் ;என் சொல்லையும் உன் சொல்லையும் யார் மதிப்பார்கள் குழந்தாய்?அச்சுதப்ரக்ஞராகவோ திருவிக்ரமபண்டிதராகவோ அல்லது சந்நியாசியாகவோ இருக்கவேண்டும்.வா,வா(.போகிறார் )
(வாசு சிந்தனையுடன் செல்கிறான்)




















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக