வியாழன், 17 அக்டோபர், 2019

Fwd: மத்துவாச்சாரியார்


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:57 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 19 Jan 2017 at 16:13
Subject: மத்துவாச்சாரியார்
To: <anandanrao@yahoo.com>













                           காட்சி----7
(மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர்.இவர்கள் நடுவில் வாசு அமர்ந்திருக்கிறான் ).

ஆசான்;(பாடம் நடத்துகிறார்)

கவ்யாசம் புண்டரீகம் என்ற சுலோகத்துக்கு குரங்கின் பின்பகுதி தாமரை போல சிவந்துள்ளது என்று பொருள்.

(அப்போது உள்ளே ஒரு பெரியவர் வருகிறார்)
பெரியவர்;மன்னிக்கணும் சரியான பொருள் சொல்லுங்கள்.அதற்குப் பொருள் அப்படியல்ல.கவ்யாசம் என்பது சூர்யக்கிரணங்கள் அந்த சூரியக்கிரணங்களால் தாமரை மலர்ந்து காணப்படுகின்றது.என்பதே சரியான பொருள்.
வாசு;(மகிழ்ந்து)ஆஹா மிகப் பொருத்தமான பொருள் தாமரை போன்ற சிவந்த கண்களையுடைய இறைவன் என்ற பொருள் மிகச் சிறப்பாக இருக்கிறதே.

ஆசான்;நீங்கள் சொன்னதே சரியென்று வைத்துக் கொண்டால் எங்கள் ஆசான் சொன்னது தவறா?
வாசு;ஸ்வாமி, சரியான பொருள் சொல்வது முக்கியமில்லையா?
பெரியவர்;நீங்கள் கோபிப்பது சரியல்ல.
ஆசான்;நீங்கள் சொன்னதேசரி.(கோபத்துடன்)
பெரியவர்;இது நான் சொல்லவில்லை.ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர் கூறியது.
ஆசான்;ம்ஹும் அப்படியானால் நீரே பாஷ்யம் எழுதும்.(கோபத்தோடு செல்கிறார்)
மாணவர்கள் கலைந்து செல்ல  சிந்தனையுடன் வீடு வருகிறான் வாசு.)
 
(தனிமையில் அமர்ந்திருக்க தந்தை சொன்னது காதில் ஒலிக்கிறது.திரிவிக்கிரம பண்டிதராகவோ அச்சுதப்ரக்ஞராகவோ அல்லது சந்நியாசியாக இருக்கவேண்டும்.)
சிந்தனையுடன் எழுகிறான்)
                                                                                                      காட்சி-8

(உறங்கிக்கிகொண்டிருக்கும்  தாய்தந்தையரை பாதம் தொட்டு வணங்கியபின் வீட்டின் வெளியே நின்று வீட்டை வணங்கி வேகமாக வெளியே நடக்கிறான். நேராக அச்சுதப்ரக்ஞரிடம் வந்து சேர்ந்து ஆசிரம வாயிலில் அமர்ந்து கொள்கிறான் வாசு.)
தூங்கியெழுந்த அச்சுதப்ரக்ஞர் கராக்ரே வராதே லட்சுமி கரமத் யே சரஸ்வதி என்றபடி வாயிலுக்கு வருகிறார்.அமர்ந்தபடியே  தூங்கி க் கொண்டிருக்கும் வாசுவைப் பார்க்கிறார்.

ஆச்சாரியார்;குழந்தாய், இங்கு என்ன செய்கிறாய்?எப்போது இங்கு வந்தாய்?
வாசு; ஸ்வாமி நான் வாசுதேவன்.மத்யகேக பட்டரின்  மகன்.நான்சந்நியாசியாக விரும்பி தங்களை நாடி வந்துள்ளேன்.
ஆச்சாரியார்;இந்த சிறிய வயதில் உனக்கு ஏனப்பா இந்த எண்ணம் வந்தது? உன்பெற்றோருக்குத் தெரியுமா?
(அப்போது பட்டர் உள்ளே நுழைகிறார்)
பட்டர்;ஸ்வாமி, நமஸ்கரிக்கின்றேன்.என் மகன், ஒரேமகன், வாசு.அவனைத் தேடித்தான் வந்தேன்.
ஆச்சாரியார்;பட்டரே , உங்கள் மகன் இதோ இருக்கிறானே.

வாசு;அப்பா, நான் சந்நியாசியாகப் போகிறேன்.
பட்டர்;வாசு நான் உன்னை சந்நியாசியாக விடமாட்டேன்.நீ சந்நியாசியானால் நான் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்.
வாசு;(தன துண்டை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை கௌபீனமாகக் கட்டிக்க கொண்டு )அப்பா நான் சந்நியாசி ஆவதென்று முடிவு செய்து விட்டேன்.உலகபந்தங்களை விட்டேன்.இதோ என் கௌபீனம் தரித்துக் கொண்டேன்.நான் சொன்னபடி செய்து விட்டேன்.நீங்கள் சொன்னபடி செய்யுங்கள்  அப்பா.
பட்டர் ;(துயரத்துடன்)வாசு அப்படியாவது உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டாயா என்ற எண்ணம்தான்.
வாசு; உங்களால் முடியாதென்று தெரியும்.
பட்டர்;உன் தாய் இதற்குச் சம்மதிக்க மாட்டாள்.தாயின் அனுமதியின்றி நீ எப்படி சந்நியாசியாவாய்?
(அப்போது வேதவதி ஓடிவருகிறாள்)
வேதவதி;மகனே வாசு, இது என்ன கோலமடா?
வாசு; இது சந்நியாசிக் கோலமம்மா. நான்  சந்நியாசியாக .நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
வேதவதி;இல்லை எனக்கு இருப்பவன் நீ ஒரேமகன் என் வம்சம் தழைக்கவேண்டும்.உன்னை சந்நியாசியாக விடமாட்டேன்.தயவு செய் மகனே.    
(வணங்குகிறாள் )

வாசு; அம்மா, எப்போதாகிலும் உன்மகனை நீபார்க்கவேண்டுமானால் சந்நியாசியாக அனுமதி கொடு.இல்லையேல் எப்போதும் உன் மகனை நீ பார்க்கவே இயலாது.அத்துடன் மகனை வணங்கவேண்டுமெனில் அவன் சந்நியாசியாக இருக்கவேண்டும். இதோ நீங்கள் வணங்கி விட்டீர்கள்.
வேதவதி ;(துக்கத்துடன்) இல்லையப்பா, எங்கிருந்தாலும் நீ நன்றாக வாழ்ந்தால் போதும்
வாசு; அம்மா, உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.அதுவரை நான் சந்நியாசியாக மாட்டேன்.இது சத்தியம். போய்வாருங்கள் என்றபடியே
அச்சுதப்ரக்ஞரை வணங்குகிறான் அவர் பின்னே செல்கிறான் வாசு 
   (பட்டருக்குவேதவதியும் துக்கத்துடன் செல்கின்றனர்.)

                                                                                     காட்சி-9









--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக