வியாழன், 17 அக்டோபர், 2019

Fwd:


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:56 PM
Subject: Fwd:
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 21 Jan 2017 at 14:01
Subject:
To: <anandanrao@yahoo.com>


                                            காட்சி --9
(அச்சுதப்ரக்ஞர் முன் வாசு  அமர்ந்திருக்கிறான்.
 அவனுக்கு  பூர்ணப்ரக்ஞர் என்று நாமகரணம் செய்கிறார்)
ஆச்சாரியார்: வாசு உனக்கு பூரணப்பிரக்ஞர் என்று நாமம் சூட்டுகிறேன் (.பூர்ணப்ரக்ஞர் வாழ்க என சீடர்கள் நான்குபேர் கூவுகின்றனர் ,
அப்போது ஒரு சீடன் வருகிறான் அவன் வணங்கி 
சீஸ்வாமி, பூரணப்ரக்ஞருக்கு ஒரு தம்பி பிறந்துள்ளான்.என்று செய்தி வந்துள்ளது.
வாசு;(மகிழ்ச்சியுடன்)எனக்குத் தம்பி பிறந்துவிட்டான்  ஸ்வாமி இனி நான் சந்நியாசி ஆவதில்  எந்தத்  தடையும் இல்லை .
ஆசான்; பூர்ணப்ரக்ஞா சிறிது காலம் செல்லட்டும் .உனக்கு சந்நியாச தீக்ஷை வழங்குகிறேன்.
(அவரை வாசு வணங்கி எழுகிறான்.)
                                                 காட்சி-10
  (அச்சுதப்ரக்ஞர் அமர்ந்திருக்க அவர்முன் காவி உடையுடன் கையில் தண்டம் ஏந்தி பூர்ணப்ரக்ஞர் நிற்கிறார்.குருவைசீடன் வணங்கி அவர்முன் பவ்யமாக அமர்கிறான்.பின்புறம் அபிஷேக மந்திரம் ஒலிக்க(ஸஹஸ்ர சீர்ஷா புருஷக ) கங்கா தீர்த்தத்தை பூர்ணபிரக்ஞரின் தலையில் மெதுவாக  
ஊற்றுகிறார்.
ஆச்சாரியார்;உனக்கு சந்நியாச தீக்ஷை  தந்தேன்.இனி வேதாந்த ஸாம்ராஜ்யாதிபதியாகி ஆனந்த தீர்த்தர் என்ற திருநாமத்துடன் மக்களின் மத்தியில் பிரகாசிப்பாய்.பக்தியை நாடெங்கிலும் பரப்பிவருவாயாக.
சீடர்கள்;ஆனந்த தீர்த்தர் வாழ்க என மூன்றுமுறை கோஷமிடுகின்றனர்.
(அடுத்த காட்சியில் ஆனந்த தீர்த்தர் சற்று வளர்ந்தவராக குருவை வணங்கி நிற்கிறார்.)
 அங்கு வந்த சீடன் ;, நம்முடன் வாதிட அத்வைத  குரு வந்துள்ளார்.புத்தி சாகர பண்டிதர்  அமர்க்களமாக வருகிறார்.அவரை உள்ளே அழைக்கலாமா 
ஸ்வாமி?
ஆச்சாரியார்; இங்கு எம்மைத் தேடி வந்தது மிகவும்  மகிழ்ச்சி அழைத்துவா. (அங்கு புத்திசாகர பண்டிதர் வருகிறார்.)
பண்டிதர்.;உங்களுடன் வாதிட வந்துள்ளேன்.
ஆச்சாரியார்;எங்கள் சீடர்  ஆனந்த தீர்த்தர் உங்களுடன் வாதிடுவார்.அமருங்கள்.

(ஆனந்த தீர்த்தர் அவ்விடம் வந்து வணங்கி அமர பண்டிதர் சற்று நேரம் கேள்விகள் கேட்க பின் ஆனந்ததீர்த்தர் அவரிடம் கேள்விகள் கேட்க பதில் சொல்ல முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு வேகமாக அவ்விடம் விட்டுச் செல்கிறார்.)

ஆச்சாரியார்;மிகநன்றாக வாதம் புரிந்தாய் நமது பெருமையை நிலைநாட்ட நீயே சிறந்தவன்.நல்லாசி வழங்குகிறேன்.


(வணங்கி அவ்விடம் விட்டுச் செல்கிறார் ஆனந்ததீர்த்தர்.)


                                                                                     காட்சி-11













--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக