வெள்ளி, 18 அக்டோபர், 2019

Fwd: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:56 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 26 Jan 2017 at 12:42
Subject: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)
To: <anandanrao@yahoo.com>


                                                 காட்சி --11
(சீடர்களுக்கு ஆனந்த தீர்த்தர் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அங்கே குரு வருகிறார்..அனைவரும் எழுந்து நின்று வணங்குகின்றனர்.குரு அமர்க்கிறார்.)
குரு;ஆனந்த தீர்த்தா, எவ்வளவு எளிமையாக அந்த புத்திசாகர பண்டிதனை வென்று விட்டாயப்பா.எனக்கே தோன்றாத பல செய்திகளை நீ சொல்லக் கேட்டேன்.
ஆனந்த தீர்த்தர்;ஸ்வாமி, எல்லாம் சத்யம்.  சொன்னதெல்லாம் சத்யம் ஸ்வாமி.
குரு;ம்ஹும்.....
ஆனந்த தீர்த்தர்;(மெதுவாக) ஸ்வாமி,
குரு; ஏன்  தயங்குகிறாய்?நினைப்பதைச் சொல்.
ஆனந்ததீர்த்தர்; ஸ்வாமி நான்  வேண்டுவதைத்  தாங்கள்  அருளவேண்டும் 

குரு (சிரித்து)  மீண்டும் தீர்த்த  யாத்திரை  செல்லவேண்டும் அதுதானே? 

ஆனந்ததீர்த்தர்;ஆம் ஸ்வாமி, பத்திரிநாராயணனை  தரிசிக்க வேண்டும்  ஸ்வாமி.

குரு;(புன்னகையுடன்).சென்று   வா சுபமஸ்து 
                                        
ஆனந்த தீர்த்தர் ;(ஒரு ஓலைச் சுவடியை குருவின் கையில் கொடுக்கிறார்)ஸ்வாமி நான் எழுதிய இந்த பாஷ்யத்தைத் தாங்கள் படித்துப் பாருங்கள்.   

(ஆனந்த தீர்த்தர் குருவை வணங்க அவரது சீடர்கள் அனைவரும் வணங்கி  எழுகின்றனர் )
                                           
                                                        காட்சி---12 

(நான்கு  சீடர்களுடன் வந்தேவந்தயம்சதானந்தம்  வாசுதேவம்  நிரஞ்சனம்என்று பாடியவாறு குன்றுகளின் மேல் நடந்து செல்கிறார்) 
ஆனந்ததீர்த்தர்; சீடர்களே, இருட்டிவிட்டது. இனி இங்கேயே இரவு நேரத்தைக் கழிப்போம். நாளைக்கு காலையில் நமது பயணத்தைக் தொடர்வோம்.(அமர்கிறார்)
சீடர்;அப்படியே ஸ்வாமி..
(அனைவரும் பாறையைச் சுற்றி அமர்ந்து நெருப்பு மூட்டிவிட்டு மாவு உருண்டையை உண்டு நீர்பருகி பின் ஆங்காங்கே குருவைச் சுற்றி படுகிறார்கள் இரவு நேரம் எதையோ படித்துக் கொண்டிருந்த ஆனந்த தீர்த்தர் ஓலைச் சுவடியுடன் நடக்கிறார் வெகு தொலைவு சென்று நின்று வான் மலையைப் பார்த்து வணங்குகிறார்.அப்போது அங்கு ஒரு பெரியவர் வருகிறார்.
பெரியவர்;ஆனந்த தீர்த்தா, வந்தாயா, வா ஆசிரமத்திற்குப் போவோம்.
ஆ.தீ;ஸ்வாமி தாங்கள் யார் இங்கு எப்படி...தாங்கள்?
பெரியவர்;ம்ஹும்...ம்..ம்..(சிரித்து) வா.வா.

அவர்பின் செல்ல சற்று தொலைவில் அவர் மறைந்து விட அழகிய மலர்வனமும் இடையே ஆசிரமம் ஒன்றும் தென்படுகின்றன.அருகே 
ஸ்ரீவேத  வியாஸபகவான் அமர்ந்திருக்கிறார்.அவர்முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறார் ஆனந்ததீர்த்தர்.
ஆ.தீ.; ஸ்வாமி அடியேனை ஆட்கொள்ளுங்கள்  தேவா.
வேத வியாசர்;ஆனந்த தீர்த்தா ; பகவத் பக்தியையையும் சத்தியத்தையும் உலகில் நிலைநாட்டுவாயாக.உன் எண்ணங்களையெல்லாம் தெரிந்துகொண்டோம் இதையே மக்களிடமும் பரப்புவாய்.ஆன்மீகநெறியை மக்களிடையேபரப்பி உன் அவதாரநோக்கம்   நிறைவேறிய பின் எம்மிடம்  சேர்வாய்.
ஆனந்ததீர்த்தர்;ஸ்வாமி அடியேனுக்கு உபதேசம் செய்தருளுங்கள்.
(கைகுவித்து அவர்முன் நிற்க வியாசர் உபதேசம் செய்கிறார்)
ஆ ;தீ;தன்யனானேன் ஸ்வாமி. இக்கடமையை நான் ஆற்றுவேன். புறப்படுகிறேன்.(வணங்கி புறப்படுகிறார்)
(வந்துகொண்டிருக்கும் போதே)
சீடன் ;குருவே, எங்கே இருக்கிறீர்கள்?எங்களை  இப்படித் தவிக்கவிட லாமா 
சீடன் 2;ஸ்வாமி எங்கு சென்றுவிட்டீர்கள் ?எங்களைத் தவிக்கவிட்டு எங்கு மறைந்தீர்கள் ஸ்வாமி...ஸ்வாமி ..

ஆ.தீ;(வந்துகொண்டே) மாதவா, பத்மநாபா ஏன் இந்தப் பதற்றம்.நான் வந்துவிட்டேன் வாருங்கள் புறப்படலாம் 
   (செல்கிறார்கள்)

                                                                                   காட்சி---13






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக